Wednesday 16 December 2015

அம்மாவியம் 2

அம்மாவியம் 2

சண்டைக்கு முந்தாதே!
சாதிக்கப் பிந்தாதே!
சிந்தை அடக்காதே!
சீற்றம் முடக்காதே!
சுதந்திரம் பிழைக்காதே!(பிழைக்காதே-தவறாகப் பயன்படுத்தாதே)
சூதனம் பழகாதே!(பிறரை அழிக்க எண்ணாதே)
செருக்கு முறுக்காதே!
சேவை வெறுக்காதே!
சைவம் அழிக்காதே!
சொல்லுக்கு மயங்காதே!
சோம்பி ஒடுங்காதே!
சௌதாயம் வேண்டாதே!(சௌதாயம்-சீதனம்,நன்கொடை,கையூட்டு)
அச்சம் தூண்டாதே!

தமிழை கழிக்காதே!
தாய்தந்தை ஒதுக்காதே!
திமிர் பேசாதே!
தீவினை முனையாதே!
துணைக்குத் தயங்காதே!
தூய்மை கெடுக்காதே!
தெய்வம் பழிக்காதே!
தேசம் மறக்காதே!
தையலர் இழிக்காதே!(தையலர்-பெண்டீர்)
தொண்மை விலக்காதே!(தொண்மை-பழமை-மரபு)
தோல்விக்கு அஞ்சாதே!
தௌலம் பிசகாதே! (தௌலம்-துலாக்கோல் தர்மம்--நடு நிலை)
உத்தமம் மாறாதே!(உத்தமம்-சத்தியம்-மேன்மை-தர்மம்)

கொ.பெ.பி.அய்யா.



No comments:

Post a Comment