Tuesday 15 December 2015

அம்மாவியம் 1

அம்மாவியம்.

அம்மா மறவாதே!
ஆக்கம் மறுக்காதே!
இயன்றது மறைக்காதே!
ஈகை ஒளிக்காதே!
உரம் விலக்காதே
ஊக்கம் மழுக்காதே
எண்ணம் கலங்காதே!
ஏற்றம் தயங்காதே!
ஐநிலம் பகையாதே!
ஒழுகாது ஓதாதே!
ஓரமொழி பேசாதே!
ஔவியம் எண்ணாதே!
ஃ என சோராதே!

கடவுளைப் பழிக்காதே!
கடமை கடத்தாதே!
கிடந்து கழிக்காதே!
கீழ்மை சேராதே!
குதர்க்கம் பேசாதே!
கூவித் திரியாதே!
கெட்டது கேளாதே!
கேடு பேணாதே!
கையூட்டு விழையாதே!
கொள்கை தவறாதே!
கோஷம் பழகாதே!
கௌடனை பாராதே!
அக்கடானு அலுக்காதே!

தொடரும்.........................

கொ.பெ.பி. அய்யா.

No comments:

Post a Comment