Saturday 19 December 2015

பார்த்து விலகு.

பார்த்து விலகு!

பார்த்து விலகு மனிதா- அரசியல்
பைத்தியம் திரியும் பொதுவா.
மனிதன் போலவே பேசும்-உன்னை
மயக்கத் தான்வலை வீசும்.

ஆவிகள் அலையும் மனிதா-அரசியல்
பாவிகள் அவரே அறிவாய்.
ஆசைகள் காட்டி மயக்கும்-உன்னை
அறிவினை நீற்றி வசக்கும்.

நல்லவர் போன்றே மனிதா-அரசியல்
நாடகம் செய்வார் புரிவாய்.
சொல்வோம் செய்வோம் என்பார்-உன்னை
கொள்ளை அடித்தே தின்பார்.

பொதுநலம் செத்தது மனிதா-அரசியல்
சுயநலம் தானது தெளிவாய்.
தொழிலாய் ஆனது அரசியல்-உன்னை
துறவியாய் விட்டது பொதுவியல்.

தேர்தல்க் காலம்  மனிதா-அரசியல்
தீர்தல்க் கோலம் வரைவாய்.
மயக்கும் மொழிகளைத் தள்ளு-உன்னை
பயக்கும் வழிகளை வெல்லு.!

பாசம் தாய்மை மனிதா- அரசியல்
தேசம் செய்வோம் விரைவாய்.
இரட்டை இலைதான் சின்னம்-உன்னை
இமைக்குள் காக்கும் திண்ணம்.!

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment