Monday 7 December 2015

நாடககககாரர்கள் எங்கே?



காணவில்லை சிலரை!

தமிழ்நாட்டில் தர்மம் பேசும் சிலரை காணவே இல்லை.எங்கெங்கோ பிறந்தவர்கள் பிழைப்பவர்கள்.தமிழ் மக்களின் துயர்கண்டும் காதில் கேட்டும் மனம் துடித்துப்போய் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாகவே வந்து வரிந்து கட்டிக்கொண்டு மனித நேயத்தோடு உதவும் பணிகளில் உற்சாகத்தோடு உழைத்து வருகிறார்கள்.அப்படிப்பட்ட மனித உள்ளங்களுக்கு தமிழர்களாகிய நாம் என்றென்றும் கடன்பட்டவர்களாய் காலம் உள்ளவரை மறவாதிருப்போம்.வாழ்க அந்த நல்லவர்கள்.

தமிழ் என்று கூறி தமிழால் பிழைப்பவர்களை காணவில்லை.தமிழர் அல்லாத பிற மாநிலத் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளும் முக்கியஸ்தர்களும் மற்றும் தமிழர்களால் பயனடையாத பிறமொழி நடிகர் பிரபலங்களும் இங்கு உதவிப் பொருட்களோடு வந்து உடல் வருத்தி உள்ளன்போடு எந்தவித எதிர்பார்ப்புகளுமின்றி உதவிப்பணிகளில் தங்களை நேரடியாக ஈடுபடுத்திக் கொண்டிருப்பதை நம் கண்களால் நிசமாகக் காண்கிறபோது நம் விழிகள் நம்மையும் அறியாமல் கசிகின்றன.இவ்வுலகில் மனிதம் மரித்துப்போகவில்லை என்பதற்கு இதைவிட சாட்சிகள் வேறென்ன வேண்டும்!

இப்படி நல்லோர்கள் வாழும் பூமியில் இப்படிப்படிப்பட்டஎதிர்பாரா இடர்கால நெருக்கடி இன்னல்களைக்கூட சிலர் தங்களின் சுயலாப சந்தர்ப்ப வாய்ப்பு களாக வெக்க்ப்படாமல் அரசியல் பண்ணவும் ஆதாயம் தேடவும் இத்தருணத்தை பயன்படுத்திக்கொள்ளக் கூச்சப் படுவதில்லை என்பதுதான் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் வேதனை.. இவர்கள் மனித நேயம் பேசுவார்கள் ஆனால் மனம் செத்துத் திரிவார்கள்.

இன்னும் சிலரும் இருக்கிறார்கள்.அரசு அதைச்செய்யவில்லை இதைச் செய்யவில்லை என அங்கலாய்த்துக் கொள்வார்கள்.ஆனால் ஒரு சிறு துரும்பைக்கூடக் கிள்ளிப்போட மாட்டார்கள்.வீட்டுமுன் கிடக்கும் காற்றில் பறக்கும் தூசைக்கூட அரசாங்கம் வந்துதான் எடுத்துப்போட வேண்டும்  என்றே
எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள்.குறைபேசிக் குற்றம் காண்பதற்காகவே சிலர் செத்து நாறும் பிணங்களாய் சமுதாயத்தை முகம் சுளிக்க வைக்கிறார்கள் கேவலம்!

மற்ற சாதாரண காலங்களில் இவ்வாறு எதிர்பார்ப்பதும் தவறில்லை தான்.ஆனால் இப்படிப்பட்ட இக்கட்டான அசாதாரண காலங்களில் கூட இதை அரசுதான் செய்யவேண்டும் என்று அடம் பிடிப்பதும் அரக்கத்தனமான ஈவிரக்கமற்ற செயலல்லவா!.நம்மால் நாமே செய்யக்கூடிய சின்னச்சின்ன வேலைகளைக் கூட நாமே செய்தால் என்னதான் தாழ்ந்துவிடப் போகிறோம்
என்பதுதான் புரியவில்லை.

இப்படிப்பட்ட அவசரகாலங்களில் பொதுமக்களாகிய நாமும் அரசோடு இணைந்தும் ஒத்துழைத்தால்தான் அரசும் அதன் அவசரப் பணிகளில்
முழுமையாகத் தன் கவனம் செலுத்தி மீட்ப்புப் பணிகளில் முன்னேறமுடியும் என்பதைசிலரால்ஏன்புரிந்துகொள்ளமுடியவில்லையோதெரியவில்லை.
இதை அரசியல் தலைவர்களும் மக்களுக்கு உணர்த்துவதில்லை.மாறாக மக்களை அரசுக்கு எதிராக தூண்டிவிடுவதே அவர்களின் கேடுகெட்ட புத்தியாக உள்ளது.

எப்படிப்பட்ட நேரங்களில் எதை அரசியலாக்கலாம் என்ற நியாய தர்மமே
இல்லையா?மனச்சாட்சிகள் மரத்துப்போனதா?அல்லது மடித்துபோனதா?அறிஞர் அண்ணா அவர்கள் சொன்ன அரசியல் தர்மம் படித்திருந்தால் இவர்களுக்கும் அரசியல் தர்மம் தெரிந்திருக்கும்.என்ன செய்வது காலத்தின் சோதனைதான் இது.காலம்தான் இதற்கு பதில் சொல்லவேண்டும்.

கொ.பெ.பி.அய்யா.

சென்னையும் கண்டது.

மொழியும் இனமும் மதமும் எங்கே!
மனிதம் மட்டும் மதித்தது இங்கே.
உறவும் முறையும் உயிரென ஒன்றே.
பரவும் சமூகம் பயின்றது இன்றே!

இடரில் மனிதன் இடறும் போதே
படரும் பழமை பரிவினில் தானே
உடுக்கை இழந்தான் உணர்வினைப் போலே
முடுக்கும் உதவி மனிதம் தானே.

உயிரும் உயிரும் உறவெனக் கண்டே,
உயிரும் தடையோ உறுதியும் கொண்டே,
உதவும் மனிதம் உலகினில் உண்டே.
இதுவும் நிசமே இறப்பில்லை தொண்டே!

சென்னையும் கண்டது முன்னைய சொந்தம்.
தன்னையும் கண்டது நன்னய பந்தம்.
மகத்துவம் கண்டது சகத்துவம் என்றும்.
இகத்துவம் கண்டது சமத்துவம் ஒன்றும்.

பேரிடர் பாடமும் ஆறிட வேண்டாம்.
யாரிடம் பேதமும் கூறிட வேண்டாம்.
ஊரிடம் வாசமும் மாறிட வேண்டாம்.
பாரிடம் பாசமும் மீறிட வேண்டாம்.

கொ.பெ.பி.அய்யா.


No comments:

Post a Comment