Saturday 9 January 2016

எதற்கிந்த ஆத்திரம்!


எதற்கிந்த ஆத்திரம்!

எதற்கிந்த ஆத்திரந்தான்!ஏங்குறீங்க!
புதுசாத்தான் வேசமெல்லாம் போடுறீங்க!
பழசான பாத்திரந்தான் ஆகாதுங்க!
நிலையான பாசமெல்லாம் அம்மாதாங்க!!

குடும்பங்களா!கட்சிகளா!புரியல!
கூடிமேயும் பச்சிகளா!தெரியல!
இங்கிலாந்தா!இந்தியாவா!துலங்கல!
இங்கேயின்னும் வாரிசா!விளங்கல!

சுதந்திரமே உங்களுக்கே பெற்றதா!
அதிகாரமே எங்களுக்கு  மற்றதா! .
ஆடுகளா ஏமாறாத்தான் நாங்களா!
நாடாள மட்டும் சொந்தம் நீங்களா!

நடப்பதம்மா நல்லாட்சி நடக்குது!
கெடுப்பதுக்கா கெட்டதுக அலையுது!
விட்டுஇன்னும் உள்ளதையும் தொலைக்கவா!
விட்டசனி தொட்டுயினி அலைக்கவா!

உள்ளாட்சித் தேர்தல் இப்போ வருகுது.
உள்ளூரின் நலம் கருதும் பொறுப்பது.
நல்லாட்சி தொடரும் அம்மா பலமாக
வெல்ல வைப்போம் இரட்டைஇலை நலமாக.


கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment