Monday 11 January 2016

யோசிக்கும் அவசரம்.

யோசிக்கும் அவசரம்!

யோசிக்கும் அவசரம் தமிழன்பா!
நேசிக்கும் தமிழகம் புகழன்றோ!
நாசிக்கும் நெஞ்சிற்கும் மூச்சன்றோ!-ஏற்றிப்
பூசிக்கும் அம்மாவியம் பேச்சன்றோ!

தாயகம் உள்ளாளும் ஊராட்சியும்.
தாயவர் சொல்லாளும் நாடாட்சியும்
வீடும் நாடும் ஆளும் நெருக்கம்--உறவாய்
ஊரும் பாரும் மேலும் செழிக்கும்.

நாடாட்சி நல்லாட்சி பேராச்சி.
நமதம்மா நமக்கான நேராட்சி.
ஊராட்சி உள்ளாட்சி இணைவானால் -நாடும்
உயிருள்ள உடலாகும் நிசமானால்.

இந்திய நாட்டின் முன்னோடி.
சந்தியா மகளின் பொன்னாடு.
சத்தியக் கோட்டின் சீராட்சி.-வாழ்க!
சத்தியா மகனின் பேராட்சி.

கொ.பெ.பி.அய்யா.


No comments:

Post a Comment