எம்ஜியாரு(குழந்தைப் பாடல்)
எம்ஜி ஆரு எம்ஜி ஆரு--அவர்
எங்கே வாழ் கிறாரு?—தமிழ்
எங்கே வாழ் கிறதோ—எம்ஜிஆர்
அங்கே வாழ் கிறாரு.
தமிழ் பேசும் இனமதிலே-இனிக்கும்
அமிழ்தமாக எம்ஜிஆர்—தமிழ்
மொழி யதிலே ஒலியாக-இரட்டை
இலையாகத் வாழ்கிறாரு.
அண்ணாவின் இதயத்திலே-அன்புக்
கனியாகத் எம்ஜிஆர்-சத்து
அன்னமிட்ட கையாக--கல்வித்
தந்தையாக வாழ்கிறாரு.
ஏழையின் சிரிப்பினிலே-காணும்
இறைவனாக எம்ஜிஆர்-என்றும்
அறிஞரண்ணா காந்திவழி-தோணும்
ஒளியாக வாழ்கிறாரு.
நல்ல நல்ல பிள்ளைகளில்-நாளைத்
தலைவராக எம்ஜிஆர்-நாட்டின்
நம்பிக்கையின் ஒளியாக-வாழும்
வழியாக வாழ்கிறாரு.
நம்பிக்கையின் ஒளியாக-வாழும்
வழியாக வாழ்கிறாரு.
தர்மனாக தமிழனாக-தங்கத்
தலைவனாக எம்ஜிஆர்—வாழ்வில்
தனக்கெனவும் வாழாத-கொடை
வள்ளலாக வாழ்கிறாரு.
புரட்சி எனும் சொல்லிற்கே-புகழ்
அருத்தமாக எம்ஜிஆர்—நாட்டில்
வறுமை எனும் சொல்லையே-ஒழித்த
வாத்தியாராய் வாழ்கிறாரு.
நிலையான சூப்பர்ஸ்டாரு-இன்றும்
அரசியலில் எம்ஜிஆர்--என்றும்
இவருக் கிணை இல்லையேழ்-மக்கள்
திலகமாக வாழ்கிறாரு.
திலகமாக வாழ்கிறாரு.
கவிஞர். கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment