Monday 16 June 2014

கரட்டை இலை.



எம்ஜிஆர் இரட்டை இலை

இலைஇலை இரட்டை இலைங்க
எம்ஜியாரு எழுதி வரைஞ்ச
இரட்டை இலைங்க--எம்
நெஞ்சில் நிலையா பதிஞ்சு
நிறைஞ்ச இரட்டை இலைங்க.

அம்மையாரும் எம்ஜியாரும்
அமைஞ்ச நல்ல தமிழுக்கு
அழகு முகமுங்க—அந்த
இரண்டு முகம் இரண்டு இலை
என்பதுதான் இரட்டை இலைங்க.

பசுமையான இரட்டை இலைங்க
பழகி நல்லா புடிச்சுப்போன
பாச இலையுங்க—சின்னம்
எத்தனைதான் இருந்தாலுங்க
இழுக்குமிந்த இரட்டை இலைங்க.

இயற்கை அது சொல்லுவதும்
இரண்டில் எல்லாம் அடங்குவதும்
இப்படித் தானுங்க—அது
வெற்றி எனக் காட்டுவதும்
இரட்டை விரல் இரட்டை இலைங்க

பாத்துப் பழகின இரட்டை இலைங்க.
பதிஞ்ச மனசு இரட்டை இலைங்க.
மறக்க இல்லீங்க—எங்க
உசுரு போல உதிரத்தோட
உறஞ்ச சின்னம் இரட்டை இலைங்க.

போடுங்க போடுங்க ஓட்டுப் போடுங்க
பொத்தான் நல்லா அழுத்திப் போடுங்க.
இரட்டை இலைங்க-நம்ம
புரட்சித்தலைவர் இரட்டை இலைங்க
புரட்சிதலைவி மீட்ட இலைங்க.

கொ.பெ.பி.அய்யா.






No comments:

Post a Comment