Friday 13 June 2014

சிங்கம் ஒன்றுதான்.


சிங்கம் ஒன்றுதான்.

சிங்கம் ஒன்றுதான் சிலுக்குதடா.
சீற்றம் கொண்டுதான் சீறுதடா.
எங்கே தேடுறே துணைக்கு ஆளுடா?
எதிர்க்கத் துணிவது எத்தனை பேருடா?

ஆம்பளை நீயென்றால் ஆயுதம் எதற்கடா?
ஆளா ஒத்தையா மோதத் துணிவயாடா.
அம்மா பேருன்னா அதிரும் உலகமடா..
சும்மா இல்லடா தர்மம் துணையடா.

துரியோதனக் கூட்டமே உன்பின்னே
தூரம் திரும்பிப் பாரடா.
துச்சாதனன் அவன் அச்சம்
தொடை நடுக்கம் கேளடா.
எண்ணிக்கை எதற்கு
இடத்தை நிறைக்கவாடா?
ஒன்றெனச் சிங்கம்
உறுமி நின்றால் போதுமடா.

புரிந்த பாவங்கள் உன்னை
போரில் எதிர்க்குமடா.
புரிந்தும் உன்படை கலங்கி
புறமுதுகு காட்டுமடா.
செய்த தீவினை சகுனி போலடா   
சேர்ந்தே அழிக்குமடா.
சிந்திக்கும் மனமே பலமே
சத்தியம் இதுவே ஜெயமே!

கொ.பெ.பி.அய்யா.




No comments:

Post a Comment