Thursday 28 August 2014

அன்பின் அவதாரம் அம்மா.

சும்மா இல்லை அம்மா

அம்மா எங்கள் உயிர்ச்சொல்லே.
ஆன்மா தங்கும் தமிழ்ச்சொல்லே.
சும்மா சொல்லும் சொல்லல்ல
சொந்தம் எல்லாம் சொல்லுள்ளே.

அம்மா ஆளும் தமிழ்நாடே.
இம்மா நிலத்தின் முதல்நாடே.
சும்மா சொல்லும் சொல்லல்ல.
சுந்தரம் ஆனது செயலாலே.

அம்மா அன்பின் அவதாரம்.
அண்ணல் எம்ஜியார் மறுபிறப்பு.
சும்மா சொல்லும் சொல்லல்ல.
எண்ணம் அவராய் நிறைசிறப்பு.

அம்மா மனதில் தமிழினமே.
அவருள் இருப்பதும் வேறென்ன!
சும்மா சொல்லும் சொல்லல்ல.
சொந்தம் சொல்ல யாரென்ன!

அம்மா நினைவில் கனவாக
அதுவே வளரும் வளமாக .
சும்மா சொல்லும் சொல்லல்ல.
திட்டம் எல்லாம் பயனாக.

அம்மா எழுதும் ஆணைகளோ!
அனைத்தும் அருளும் மழைபோல.
சும்மா சொல்லும் சொல்லல்ல.
சொர்க்கம் காட்டும் சுபம்வாழ.

அம்மா அவரே சக்தியாம்.
ஆவது அனைத்தும் சத்தியம்.
சும்மா சொல்லும் சொல்லல்ல.
எண்ணுவ தெல்லாம் எட்டுதே!


கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment