Tuesday 12 August 2014

என்றும் முதல்வர்

நிரந்தர முதல்வர்.

ஆலோலம் கேட்குது அம்மாபுகழ் பாடுது.
காலமும் கூடுது கதிர்விளைஞ் சாடுது
மகிழுது சனமெல்லாம் மனசார வாழ்த்துது.
அகிலத்தின் பறவைகள் தமிழ்நாடு தேடுது.

சுவர்க்கம் மண்ணில் இறங்கி வந்ததா?
பக்கம் கண்ணில் வழங்கித் தந்ததா?
எங்கும் பசுமை தென்றல் சுமந்துமே
பொங்கும் வளமை கொண்டு நிறைந்ததா?

காடு கழனி மேடுகள் எல்லாம்
நாடு உழவு பாடுகள் சொல்லும்
வீடு வழிந்து வெள்ளாமை அள்ளும்
ஓடும் நதிகளும் அம்மான்னு துள்ளும்.

பட்டணம் கரைந்து பட்டியில் நிறையும்
பட்டதும் மறைந்து  கெட்டியில் விரையும்.
திட்டம் அம்மா தீட்டிய விதமே
கொட்டுது சும்மா ஈட்டிய நிலமே!

அம்மா விருப்பம் அழகுப் பச்சை
அள்ளும் கழனி அலையின் பசுமை.
அம்மா கனவு அடைவது நிறைவு.
கொள்ளும் உயர்வு கொழிப்பது உழவு

காவேரி பெரியாறு கரையேறி ஓடும்.
தாவாக்கள் முடிவாகி தமிழ்நாடு வாழும்.
தேவைகள் நிறைவாகி தேடலும் கூடும்.
பூவையர் தாயாக போற்றுவம் நாளும்.

சீராளும் அம்மாவால் செழிக்கும் தமிழகம்.
வேராழம் நிற்கவும் போராடும் தன்னுரம்
நேராளும் நெஞ்சம் நிரந்தரம் முதல்வராம்
பாராளும் பக்குவம் பண்டிதர் அம்மாதான்.!

இனத்தை பலியிடும் குடும்பத் தலைமை.
குடும்பம் பலியிடும் இனத்தின் தலைமை.
தனக்கென வாழா தாயெனும் தலைமை
தமிழென வாழ்க அம்மா தலைமை.

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment