Saturday 30 April 2016

மகனே விழித்தெழு சிலிர்த்தெழு.

விழித்தெழு!சிலிர்த்தெழு!

விழித்தெழு மகனே!விழித்தெழு-உன்
வேளை வந்தது விழித்தெழு!
சிலிர்த்தெழு மகனே!சிலிர்த்தெழு-நீ
சிங்கம் என்று சிலிர்த்தெழு!

சுற்றிச் சுற்றிச் சூளுரைத்து-பகை
பற்றிப் பற்றிப் பாடறுத்து-
வெற்றி வெற்றி வினைமுடித்து-பறை
கொட்டிக் கொட்டு வென்றெடுத்து.

தமிழன் என்றொரு திமிரிருக்கு-உனக்கு
தருமம் என்றொரு தரமிருக்கு.
மானம் என்றொரு மதமிருக்கு-மரபு
வீரம் கொண்டெழு விடையிருக்கு.

செத்தது தமிழென்றோ கொக்கரித்தான்-அந்தச்
சிங்களன் சிறுபடை எக்கடையோ!
உத்தது உயிரென்றோ ஒப்பாரி--தமிழ்
பெற்றதும் பயமுண்டோ செப்பாரே!

பதவிக்கும் பொருளுக்கும் பற்றென்ன--இனம்
உதிரம் உனக்குள்ளே அற்றன்ன!
சிதையும் இனமங்கே செத்துவிழ--மனம்
பதைக்கும் குணமெங்கே பட்டுஎழ!
பற்றிச் சுற்றித் தீக்காடு--பரவி
முற்றி முற்றப் போக்காடு.
எட்டித் தீர்க்கத் துணிவில்லையோ-கை
கட்டிப் பார்க்கப் பதைக்கலையோ!.

நடந்தது எல்லாமே விதியென்றோ-அன்று
கிடந்ததும் பொல்லாமை சதியன்றோ!
அதிகாரம் எதற்கு ஆளத்தானோ-அதற்கு
துதிராகம் உமக்கு வாழத்தானா!

கொடுமைகள் சொல்லி அழவேணும்-இங்கு
அடிமைக் கிலையோ உறவேணும்
படமோ பாவக் கூத்தோ-ஈழம்
விடைதான் விடிவே மகனே!.

அம்மா என்ற பராசக்தி-ஆளும்
ஆட்சி மன்ற தீர்மானங்கள் -
சும்மா என்ற தாளன்று--ஈழம்
மீட்சி வென்ற மேலொன்று..

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment