Tuesday 19 April 2016

இரட்டை இலை கட்டுரை.

இரட்டை இலை அது புரட்சி இலை.

எம்ஜியார் கண்ட இரட்டை இலை.ஏழைகளின் இதயங்களில் எழுதப்பட்ட இலை.அது எப்போதும் நேரான நியதியான தேர்தல்களில் தோல்வி கண்டதே இல்லை என்பதே உண்மை.வெற்றியின் சின்னமாக வீரத்தின் அடையாளமாக எவராக இருந்தாலும் இரட்டை விரலைக் காட்டுவதுதான் உலகெங்கும் மரபாக இருந்து வருகிறது.அதனால்தான் புரட்சித்தலைவர் அந்த இரட்டை இலையை புரட்சியின் சின்னமாக தனது இயக்கத்தின் அடையாளமாக தேர்ந்து அங்கீகரித்தார்.அவர் திமுக வில் இருக்கும் போதும் உதய சூரியனைப் பாடும்போதும் வெற்றியின் குறியீடாக v எனும வடிவமாக இரட்டை விரல் காட்டியே பாடுவார், பேசுவார்.அதுவே பின்னாளில் அவர் கண்ட இயக்கத்தின் சின்னமாகவும் அமைந்ததுதான் சிறப்பு.

உதய சூரியன் சின்னத்தின் இரண்டு மலைகளை இரண்டு இலைகளாகவும் இரண்டு மலைகளுக்கு இடையில் உதயமாகும் சூரியனை துளிர்க்கும் இளந்தளிர் கொழுந்துத் தண்டுக் கோடாகவும் வடிவமைத்து இரட்டை இலை அதுதான் புரட்சியின் இலை எனவும் அறிவுப்பூர்வமாக வெற்றியின் சின்னமான இரட்டை இலை சின்னத்தை அறிமுகம் செய்தார்.இதுதான் இரட்டை இலை தோன்றிய வரலாறு.

அண்ணா இருந்த வரைதான் தி மு க வின் சின்னம் உதய சூரியன்.அவருடைய மறைவுக்குப்பின் அது ஒளியும் சூரியன். அதாவது மறையும் சூரியன். அந்த இயக்கத்தில் எம்ஜியார் என்ற மந்திர சக்தி ஆதரவாக இருந்தவரை  கதிர்வீசி ஒளி பரப்பிய அந்த உதய சூரியன் அவர் விலக்கப்பட்டபின் அது தன் ஒளி இழந்து அஸ்தமக்காலத்தை நோக்கி அடைய ஆரம்பித்து விட்டது.இரட்டை இலைதான் மேலும் மேலும் செழித்து வளம் பெற்று நாடெங்கும் தோப்பாகி
நாட்டுமக்களுக்கு நடுவூர் நிழலாகிக் காத்து வருகிறது. அம்மாவின் அரவணைப்பில் அம்மாவின் ஆக்கப்பூர்வமான வளர்சிப்பணித் திட்டங்கள் எனும் ஓயா நன்னீர் வளத்தால் நாளும் நாளும் பலம் பெற்று நிழல் எனும் அறப்பணியால் தமிழகத்தின் அரியாசனமாய் அமர்ந்து ஆட்சி புரிந்து வருகிறது.

இரட்டை இலை எம்ஜியாரின் கரம்பட்டு என்று துளிர்க்கத் தொடங்கியதோ அன்றே தமிழகத்தில் வறட்சிஎன்ற சொல்லே வறண்டு போனது.ஏழைகளின் பசிப்பிணி பட்டுப்போனது.மக்களின் அடிப்படைத்தேவைகள் தன்னிறைவு பெற்றது.இல்லை என்ற சொல்லே இல்லாமல் போனது.தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் இச்செகத்தினை அழித்திடுவோம் எனக் குமுறிக் கோவக் குரல் கொடுத்த பாரதியின் கனவு இன்று அம்மாவின் அரசால் நிறைவேற்றப்பட்டது.அதுகண்ட பாரதியும் அவன் வாழும் பரலோத்திலும் பரவசக்கூத்தாடிக் கொண்டிருக்கிறான்.

அம்மா உணவு மலிவு விலையில் அத்தனை வேளையும் சுகாதாரப் பாதுகாப்போடு அம்மா உணவகத்தில் கிடைக்கிறது.ஆலயங்கள் தோறும் வயிராற விருந்து உபசரிக்கப்படுகிறதுஅதனால்.இங்கே பசியுமில்லை பஞ்சமுமில்லை.வேற்று மாநிலத்தாரும் பெருமையோடு வேலை தேடி விரும்பி நம்பி வந்து வாழ்வாதாரம் பெற்று வாழ்கிறார்கள்.அதுவும் தமிழ் நாட்டில் வேலை என்றால் அவ்வளவு பெருமையாம் அவர்களுக்கு. தமிழ் நாட்டில் பிழைப்புக்காக வருபர்மீது அத்தனை நம்பிக்கை கொண்டு பெட்கொடுப்பவர்கள் போட்டி போட்டுக்கொண்டு பெண்வீட்டார் வெளி மாநிலங்களில் தேடி அலைகிறார்கள் செய்தி ஊடகங்கள் பெருமியாகப் பாராட்டுகின்றன.ஆனால் பாவிகளின் பொறாமைக்குரல்கள்தான் வஞ்சம் பேசி வறுமை செய்யத் துடிக்கின்றன.

ஒருகுழந்தையை பெறுவதுமட்டும்தான் பெற்றோரின் கடமையாக உள்ளது.மற்றப்படி அக்குழந்தையின் கருவரைக்காலம் முதல் கல்லூரி முடித்து கல்யாணம் ஆகும்வரையுள்ள அத்தனை பொறுப்புக்களையும் அம்மாவின் அரசு அன்போடு ஏற்றுக்கொள்கிறது.

விவாசயிகளின் வேளாண்மை இடுபொருள் இலவசம் அல்லது மான்யத்தில் அம்மாவின் அரசால் வழங்கப்படுகிறது.நீர்ப்பாசனத்திற்கு மின்சாரம் இலவசம்.விளைபொருள் இருப்பு வைத்துக்கொள்ள குளிர்பதன இருப்புவைப்புக் கிடங்குகள்.குடியிருப்புக்கு பசுமை வீடுகள்.நியாய விலையில் உணவுப்பொருள்கள்.அரிசி விலையில்லாமல் கிடைக்கிறது.வயது முதிர்ந்த காலத்தில் ஆயிரம் ரூபாய் உதவிப்பணம்.உடுத்துவதற்கு சேலை வேட்டி.வேறென்ன வேண்டும். கேட்காமலே அம்மா தாயுள்ளத்தோடு தேவையறிந்து கொடுத்துவருகிறார்.அப்புறம் என்ன மாற்றம் வேண்டி கிடக்கிறது.ஏழை எளிய மக்கள் என்ன அவசரம் கருதி அம்மாவை மறப்பார்கள்.

திருமணமாகி ஒரு பெண் புகுந்த வீட்டிற்கு செல்லும்போது ஒரு தாய் எப்படி பார்த்துப் பார்த்து சீர்வரிசை செய்வாளோ அப்படித்தான் அம்மாவின் அரசும் அனைத்து மக்களையும் அன்புள்ளத்தோடு அரவணைத்து அத்தனை தேவைகளையும் பார்த்துப்பார்த்து அள்ளிவழங்கி நிறைவேற்றி வருகிறது.அப்புறம் எப்படி ஆக்கம் கெட்டகூவைகளின் கூச்சலை நம்பும். நன்றியுள்ளம் கொண்ட தமிழ் நெஞ்சங்கள் எவ்வாறு அம்மாவை மறந்துவாழும் அல்லது மாற்றம் வேண்டும் என்ற அவசரமும் ஏற்படும்?

பொதுவாக மாற்றுக்கட்சி மனிதர் என்று சொல்லிக்கொள்ளும் பாவப்பட்ட ஜென்மங்களை மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்.இபோதுதான் தமிழக மக்கள் அம்மாவின் ஆட்சியில் அமைதியான சூழலில் அத்தனை அடிப்படை உரிமைகளும் பெற்று நிம்மதிப் பெருமூச்சுடன் தொல்லைகள் தொலைந்தது என்று சுகமாக வாழ்ந்து வருகிறார்கள்.இதைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கி உங்களின் குடும்ப  சுயநலத்திற்காக நாட்டுமக்களை பலிகிடாய்களாய் ஆக்கிப் பாவத்தை சம்பாதித்துக் கொள்ளாதீர்கள்.அரசியல் வாதிகளை நினைத்தால் பாவமாகத்தான் இருக்கிறது.என்ன செய்வது அவர்கள் அப்பாவிமக்களை சுரண்டிப்பிழைத்தே பழக்கப்பட்டுப் போனார்கள்.பழக்க தோஷம் அப்படி.திடீரென்று திருந்த அஞ்சுகிறார்கள்.ஆனால் அவர்களின் போதாத நேரம் மக்கள் விழித்துக் கொண்டார்களே!என்ன செய்வது.!அவர்கள் மாறித்தான் ஆகவேண்டும்.இது காலத்தின் கட்டாயம்.காமராசர் அனைவர்க்கும் கல்வி என்று கட்டாய சட்டம் போட்டுவிட்டார்.அனைவரும் படிக்கக் கற்றுக்கொண்டார்கள்.சுயமாக சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள்.
ஆகையால் முழுசோம்பேறிகளாக பழக்கப்பட்டுவிட்ட அரசியல்வாதிகள் வேறு என்ன தொழில் செய்வார்கள்!அவர்களின் ஏமாற்று வித்தையும் பலிக்கவில்லை.அவர்களை நினைத்தால் ஒரு பக்கம் கவலையாக இருந்தாலும் அவர்கள் திருந்துவார்கள் என்ற நம்பிக்கை மக்களிடம் எள்ளளவும் இல்லை.அவர்கள் கொள்ளையடித்துக் குவித்து வைத்ததுதான் இன்னும் நூறு தலை முறைகளுக்கும் போதுமானதாக இருக்கும் என்கிறார்களே!எனவே இனிமேலாவது நாட்டைச்சுரண்டாமல் வீட்டைப்பிராண்டிக்கொண்டு கிடக்கட்டும்.விட்டு விடுங்கள் பாவம்!

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment