Sunday 24 April 2016

பொற்கையன் ஆட்சி போல்.

இலை துளிர்த்தது இல்லம் செழித்தது.

இலை துளிர்த்தது இல்லம் செழித்தது.
வளம் கொழித்தது வாழ்வு மலர்ந்தது.
நிலை உயர்ந்தது நெஞ்சம் நிறைந்தது
நலம் நிகழ்ந்தது நாடு சிறந்தது.

உழவு பிழைத்தது உரிமை நிலைத்தது.
பழமை நிலைத்தது பசுமை தழைத்தது.
நதிகள் இணையுது நன்செய் விரியுது.
விதிகள் திருந்துது வேளாண்மை திரும்புது.

இருளும் அகன்றது பகலும் போன்றது.
மருளும் மடிந்தது அருளும் தோன்றுது.
வறுமை தகர்ந்தது அருமை ஊன்றுது.
பெருமை நுகர்ந்தது சிறுமை மாண்டது.

காந்தி சொன்னது கனவில் கண்டது
காட்சி என்றது நினைவில் இன்றது.
ஆழ்ந்த இரவிலும் அணிந்த கன்னியும்
ஓய்ந்த தெருவிலும் உலாவலாம் தன்னியம்.

ஆட்சித் திறனுண்டு மாட்சிமை அரணுண்டு
அம்மாவின் உரம்கண்டு அற்றது பயமின்று.
பொற்கையன் ஆட்சிபோல் போற்றவும் சிறப்புண்டு.
பெற்றதாய் நேர்த்திபோல் பெற்றதும் வரமென்று.

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment