Wednesday 20 April 2016

இலட்சிய வண்ணம் பச்சை இலை.

இலட்சிய வண்ணம் பச்சை இலை.

இரட்டை இலை இரட்டை இலை-வள்ளல்
புரட்சித் தலைவர் கண்ட இலை.
பச்சை இலை நல்ல பச்சை இலை-அம்மா
லட்சிய வண்ணம் பச்சை இலை.

இழந்த சின்னத்தை மீட்டதுண்டா-உலகில்
எங்கும் எவரும் கேட்டதுண்டா?.
மறைந்த பின்னும் வாழும்தலைவர்-புகழில்
எம்ஜியார் தானம்மா என்றும்நிலையர்.

மலைகள் இரண்டு இலைகளோ-நடுவில்
கலைதான் துளிர்த்த கதிர்களோ!
நிலையாய் நெஞ்சில் தலைவனோ-இரட்டை
விரல்களாய் வெற்றி அழகனோ!

மறைந்தான் சூரியன் மலைகளில்-அதை
வரைந்தான் தலைவன் இலைகளில்.
நிறைந்தான் அரசியல் கலைகளில்-எதிரி
கரைந்தான் புரட்சி  அலைகளில்.

தலைவன் வழியில் கொண்டும்தான்-என்றும்
நிழலாய் நிலையாய் நின்றும்தான்
சுபமாய் எமக்காய் வாழ்வேதான்--தந்தும்
தவமாய் புகழும் அம்மாதான்.

கொ.பெ.பி.அய்யா.






No comments:

Post a Comment