Tuesday 12 April 2016

வெற்றி நமதே கட்டுரை.

வெற்றி நமதே கொட்டி மகிழ்வோம்.

ரத்தத்தின் ரத்தமான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அன்பு நெஞ்சங்களே அடைந்தோம் வெற்றியென ஆர்ப்பரிப்போம் வாரீர் வாரீர்!
அம்மாவின் ஆட்சி ஆயிரம் ஆண்டுகள் தொடரும்.அவருக்கு நிகரான எதிரி எவரும் இன்னும் பிறக்கவில்லை.2016 சட்டமன்றத் தேர்தலில் நமது வெற்றி நிச்சயம் செய்யப்பட்ட நிசம்,இதில் எள்ளளவும் ஐயமில்லை.நம்முடைய கட்சி வாக்குகள் நமக்குக் கிடைத்தாலே போதுமானது.ஏனெனில் நமது வாக்கு (44%)வங்கியை எட்டும் அளவிற்கு எந்த ஒரு அரசியல் கட்சியும் உயரம் கொண்டதாக இல்லை,மேலும் இம்முறை ஆறு முனை போட்டி என்பதால் எஞ்சியுள்ள சதவிகித வாக்குகளை மாற்றுக்கூட்டணிகள் பிரித்துக்கொண்டு நம்மைப் பின்தொடர இயலாத தூரத்திற்கு பின்தங்கி விடுவார்கள் என்பதே அரசியல் வல்லுனர்களின் தீர்கமான புள்ளியல் கணக்கு.அவ்வாறிருக்கும் பட்சத்தில் அம்மாவின் சுனாமி அலை வீச்சில் அத்தனை கட்சிக் கூட்டணிகளும் காணாமல் போகுமோ! அல்லது கரை ஒதுங்கி காக்கை கழுகுகளுக்கு இரையாகிப் போகுமோ !கடவுளுக்கே வெளிச்சம்.
அம்மா மட்டும் இத்தேர்தலில் தனிப்பெரும் சக்தியாக 234 தொகுதிகளையும் தன் மடியில் அள்ளிக்கொண்டு விசுவ ரூபம் எடுத்து விண்ணும் மண்ணும் வாழ்த்த சாந்தி சொருபமாய் சகலமுமாகி காட்சியருள்வார்.அப்போது வணங்கா முடிகளும் வணங்கி சாஸ்டாங்கமாய் அம்மாவின் பாதமலர்களை தொட்டு அருளாசி பெற அவசரமாய் முந்திக்கொண்டு வருவார்கள் என்பதே சத்தியம்.
பொதுவாக ஆளும் கட்சி என்றாலே அதிருப்தி இருக்கத்தான் செய்யும் என்பதும் சாத்தியம்தான்.ஆனால் இம்முறை அம்மாவின் அபூர்வ திட்டங்களின் அரவணைப்பால் மக்கள் மத்தியில் அதிருப்தி இல்லை என்பதே
உண்மை.ஆகவே அம்மாவின் ஆதரவு அலையின் ஆர்ப்பரிப்பு கட்டுக்குள் அடங்காமல் வேகம் குறையாமல் அதிவேகமுடன் எழுச்சியுற்றுள்ள அதிசயத்தை அம்மாவின் பரப்ப்ரைக்கூட்டங்களில் கண்கூடாகக் காணமுடிகிறது.
ஆகவே ஆருக்கும் கிடைக்காத அருமைக் கழகக் கண்மணிகளே!அனுதினமும் அயராது களம் கண்டு நமக்கான ஆதரவு அலை மேலும் மேலும் எழுச்சியுற்று
விசையாகி வீச்சாகி அற்புதம் செய்ய ஒவ்வொரு தொண்டனும் தூண்டலாய்
துடிப்பாய் செயல்படுவோம்.நமக்கான பரிசுக்கனிகள் அம்மாவின் கரங்களில்
காத்திருக்கின்றன.உழைப்போம் உறுதியுடன்.விளைவிப்போம் வெற்றிகளை.
புரட்சித் தலைவனின் ஊக்கமும் புரட்சித்தலைவியின் ஆக்கமும் தீர்க்கமும் நமக்கு என்றும் நமக்குள் சக்திக் கனலாக சுடர்விட்டுக்கொண்டு தூண்டலாய்
ஒளிர்கின்றன..விடியல் நமக்கே!முடிப்போம் நாமே!
வாழ்க எம்ஜியார் நாமம்.

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment