ஜே ஜே என்றே ஜெயமென ஆளும்
ஜெய லலிதாவே வாழ்கவே!
பூஜா மங்களம் புகழே வாழும்
புனித முகமே வாழ்கவே!
கண்டதும் தோணும் கைதொழத் தானே
நின்றதும் கூனும் மெய்விழும் தானே
கொண்டதும் ஆளும் தெய்வருள் தானே
சென்றதும் வீழும் வெய்வினை தானே.
இன்பம் துன்பம் எதுவானாலும் சமமே.
நன்மை தீமை நடுவே வாழும் பலமே.
பாடு எல்லாம் பகவதி போலும்.குணமே.
மேடு பள்ளம் கடந்தே மீளும் மனமே.
சோதனை வென்றும் சாதனை படைக்கும்.
வேதனை கொன்றும் தீதினை உடைக்கும்.
எதிர்வினை கண்டும் சதுர்வினை முடிக்கும்.
முதிர்வினை மிஞ்சும் புதுவினை துடிக்கும்.
பெண்ணினச் சுதந்திரப் பிறவி அம்மா.
தன்னலம் மறுத்த துறவி அம்மா.
எண்ணிடப் பெருமைத் தலைவி அம்மா.
மண்ணிடம் அருமை இறைவி அம்மா.
ஜே ஜே என்றே ஜெயமென ஆளும்
ஜெய லலிதாவே வாழ்கவே!
பூஜா மங்களம் புகழே வாழும்
புனித முகமே வாழ்கவே!
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment