Thursday 12 May 2016

அம்மாவின் பிள்ளை நீ

அம்மாவின் பிள்ளை.

அம்மாவின் பிள்ளை நீ!
அவரது கடனே நீ!
புரட்சியாரின் செல்வம் நீ!
நிரந்தரம் அரசு நீ!

சிங்கம் நீ தங்கம் நீ!
செந்தமிழ் சொந்தம் நீ!
தங்கத் தாரகை புகழே நீ!
பொன் மனத்தின் கண்மணி நீ!

அண்ணாவின் தி.மு.க நீ!
அன்னையின் நம்பிக்கை நீ!
எண்ணும் அளவில் இதயம் நீ!
இன்னும் சொன்னால் சரித்திரம் நீ!.

அன்பில் விளைந்த தொண்டன் நீ!
பண்பில் நிறைந்த பாசறை நீ! .
அம்மாவின் ஆன்மா நீ!
செம்மலின் சீரே நீ!

தொட்டு வளர்த்த தோழமை நீ!
கட்டிக் காத்த கன்னியம் நீ!
அம்மா நிழலின் அனுபவம் நீ!
எம்ஜிஆர் புகழ் ஏந்தல் நீ!

காலம் முன்னே கவனம் நீ!
வாழும் பின்னே வாழ்வும் நீ!
அம்மா அரசின் அச்சாணி நீ!
எம்ஜிஆர் இயக்கம் இயக்கம் நீ!!

கவிஞர்கொ.பெ.பி.அய்யா.


No comments:

Post a Comment