Wednesday 4 May 2016

இரட்டை இலை நானடா!

இரட்டை இலை  நானடா!

இரட்டை இலை நானடா!
புரட்சி இலை தானடா
எதிர்ப பவரும் யாரடா!
எதிர் அணியும் ஏதடா!

எம்ஜியாரு பேரடா!
என்தலைவன் தானடா!
தெம்பிருக்கா கூறடா!
தீர்ந்த துந்தன் சாரடா!

அம்மா படை பாரடா!
ஆழி மடை தானடா!
சும்மா சும்மா ஏனடா!
சூழுரைப்பது வீணடா!

தலைவன் கண்ட அம்மாடா!
தமிழ்ச் சொந்தம் தானடா!
அம்மா தந்த தில்லடா!
அந்த பயம் கொள்ளடா!

அம்மா தமிழ் இனமடா!
அஞ்சா நெஞ்ம் தானடா!
நிரந் தரமாய் அம்மாடா!
இருந் தாள்வார் தமிழடா!

எழுச்சிக் கடல் அலையடா
புரட்சிப் படை தானடா!
வெற்றிப் பறை கொட்டடா!
ஏற்றிக் கொடி நட்டடா!


கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment