Tuesday 24 May 2016

புதியபாதை.

புதிய பாதை புதிய பயணம்.

எதிரிக் கட்சிகள் தமது மூக்கின் மீது விரல் வைத்து வியக்கும் வண்ணம் அம்மாவின்  புதிய பயணம் புதியபாதையில்பயணிக்கத்தொடங்கியுள்ளது.
இனி எவரும் எக்காரணத்திற்காகவும் அம்மாவை நோக்கி விரல் நீட்டி பேசமுடியாத அளவிற்கு வாயடைத்துப் போயுள்ளனர்..தங்கள் இஷ்டத்திற்கும் எழுதியும் விமர்சித்தும் மக்களை ஏமாற்றி வந்த ஊடகங்கள் இப்போது பாராட்டு மழை பொழிந்து பாசம் காட்டுகின்றன.

ஆறாவது முறையாக அம்மா பதவி ஏற்றுக்கொண்ட நாளில் தங்களின் விஷமத்தனமான விமர்சனங்களுக்கு என்ன தீனி கிடைக்கும் என்றே சில கோயாபெல்ஸ் ஊடகங்கள் தேடித்தேடி அலைந்தன.அனால் அம்மாவின் புதிய பாதையில் புதிய பயணத்தின் ஆச்சர்யம் கண்டு அயர்ந்து மயங்கி வீழ்ந்தன.

அம்மாவின் போயஸ் கார்டன் வேதா இல்லத்திலிருந்து பதவி ஏற்கும் பல்கலைக்கழகம் நூற்றாண்டு மண்டபம் வரைஆறு கிலோமீட்டர் வழி நெடுகிலும் அம்மாவின் பதவியேற்பு சம்மந்தமான எந்தவொரு பதாகைகளும் எழுத்தும் இடம்பெறவில்லை.அதே சமயம் போக்குவரத்து நெருக்கடிகளும் இல்லை.அது மாத்திரம் அல்ல கழகத் தலைவர்களின் பௌவியாமான பணிவுத் துதிபாடுகளும் இல்லை.இவ்வாறான துதிபாடுகள் அம்மாவின் விருப்பமும் அல்ல.ஆனால் கழகச்சொந்தங்கள் தங்கள் உள்ளம் எழும் உணர்சிப்பூர்வமான மரியாதை நிமித்தமாக தங்களையே அறியாமல் நிகழும் அனிச்சைச்செயல் என்று வாய்மலர்கிறார்கள்.ஆகவேதான் பதவியேற்பின் போது எப்படி யெல்லாம் நடந்து கொள்ளவேண்டும் என்றும்  கழக உடன்பிறப்புக்களுக்கு முன் பயிற்சி கொடுத்தும் அம்மா அழகு செய்தார்.

மரியாதை என்பது வேண்டிப்பெறுவதல்ல.அது உதிரத்தில் தோன்றிப் பெறுவது.லட்சத்தில் ஒருவருக்குத்தான் அப்படிப்பட்ட அபூர்வ தெய்வீக இலட்சணம் இயற்கையாக அமைந்து இருக்கும்.அப்படியொரு மரியாதைக்குரிய முகராசி அம்மாவுக்கே ஆண்டவன் அருளிய அதிசயம்.அந்த அம்மானுச்யமான அம்மாவின் ஆளுமைத்தோற்றம் அவரைப் பார்த்த மாத்திரமே பணிந்து தொளச்செய்கிறது என்பதுதான் சத்தியம்.அவ்வாறான சுய எழுச்சியை மாற்றுவது என்பதும் சாத்தியமே என்பதையும் அம்மா சாதித்துக்காட்டினார்.

அம்மாவின் வாழ்க்கைஎன்பதும்மக்களுக்காகவேஅர்ப்பணிக்கப்பட்டது.தமிழக மக்கள்தான் அவர் சொந்தம்.அம்மாவின் பிறப்பும் ஒரு அவதாரம்.அவதாதாரம் எடுத்த அத்தனை மனிதர்களும் சோதனைகளுக்கும் உள்ளாக்கப்பட்டதும் உள்ளாக்கப்படுவதும் இறைவனின் திருவிளையாடல்கள்தான்.இறைவனின் திருவிளையாடல்கள் அனைத்தும் இறுதியில் திருவினைகளாகவே திருவடிவங்களாகும் என்பதே திருமறைகளின் சத்தியம்.அப்படித்தான் அம்மாவும் இன்று புடம்போட்ட தங்கமாக தங்கத்தாரகையாக மிளிர்கிறார்.இனி அவரை அசைக்க எந்த சக்தியாலும் இயலாது.இது வெறும் கூற்றல்ல,இதுதான் அம்மாவின் வரலாறு.இது இறைவனால் எழுதப்பட்டது.இதை மாற்றும் வல்லமை எவர்க்கும் இல்லை.மக்களால் அம்மா.மக்களுக்காகவே அம்மா.இதுதான் அம்மாவின் அவதார நோக்கம்.

இனி காணப்போகும் அம்மாவின் ஆட்சி.இந்திரலோகத்தின் காட்சி.சுவர்க்கம் என்பதை இப்பூவுலகிலேயே கண்டுணரலாம்.இனி பசுமைக்குப் பஞ்சமிருக்காது.பசியென்ற சொல்லிருக்காது.இனி மழைநீர் ஒரு சொட்டுக்கூட கடல்நீரைக்காண முடியாது.ஆறு குளங்கள் அனைத்தும் தரை காட்டாது.இனி ஏழை எனும் பெயர் சுமந்து எவனும் இருக்கமாட்டன்.இனி இரவும் பகலும் வேற்றுமையின்றி எப்போதும் ஒளிரும் தமிழகம் ஒரு அடையாள பூமியாக அம்மாவின் ஆட்சி முத்திரையாக அகிலம் போற்ற விளங்கும் என்பதும் சத்தியமே.

அம்மா என்றால் தமிழகம்.
தமிழகம் என்றால் அம்மாதான்.
என்றென்றும் தமிழாட்சி-அது
ஒன்றென்றும் நிலையாட்சி.

ஆளப் பிறந்தவர் அம்மாதான்.
அவர்தான் தமிழே அம்மாதான்.
தமிழாம் தவமே அம்மாதான்.
தமிழின் ஆட்சி அம்மாதான்.

கொ.பெ.அய்யா.

No comments:

Post a Comment