Thursday 29 October 2015

நல்லாத்தான் போகிறது

நல்லாத்தான நடக்கிறது!

நல்லாத்தானே நடக்கிறது
நமது அம்மா அரசு--தீயர்
சொல்லுவதும் நினைப்பதுவும்
எல்லாம் தீயும் பழசு.


விளம்பரமே தேவையில்லை
புலம்பும் பொய் போதும்--அந்த
பொய்கூட புரிய வைக்கும்
மெய்மறைக்கும் செயலை.

பிழைப்புக்காக கட்சி செய்யும்
அலப்பரைகள் கூச்சல்-- ஏதோ
இருக்குறோமென காட்டத்தான்
தெருக்கூத்து பாய்ச்சல்.!

அழியின்னா இழியிங்கிறது
எடக்கு மடக்கு பேச்சு--பாவம்
நல்லதே அறிந்திடாமல்
நொல்லக்கண்ணும் போச்சு.

மனச்சாட்சி இல்லாமல்தான்
மறைத்துப் பேசும் செயலாம்--அம்மா
புரட்சிப்பா பாதை தாக்கத்தினால்
புரட்டி உருட்டும் பேச்சாம்.

எதிர்காலம் தொலைந்ததென
எரிஞ்சி விழுகிறாங்க--அம்மா
நிரந்தரமா முதல்வரென்றால்
பொரிஞ்சி அழுகிறாங்க.

எப்பொழுதும் எதிர்ப்பவர்கள்
இப்படித்தான் போங்க--அட
இதை ஏன்தான் பெருசாக
எண்ணுறீங்க நீங்க!

கொ.பெ.பி.அய்யா.






No comments:

Post a Comment