Sunday 25 October 2015

அம்மாதான் எங்களுக்கு.

அம்மாதான் எங்களுக்கு.

அவனுக் கென்ன உளறிவிட்டான்
அறியாமல் கிளறி விட்டான்.
விழுவ தவன் விளங்காமல்
வீழ்த்த என்ன பலம்கொண்டான்.

அறிவிருந்தால் புரிந் திருப்பான்
அம்மாவை அறிந் திருப்பான்.
மலை இழுக்க மயிரமோ!
மண்டை என்ன களிமண்ணோ!

மக்கள் என்ன கொக் காமோ!
சிக்குவரோ சிறுமை யிடம்!
அம்மாவின் அன்பை விட
ஆரு மிங்கே தேவையென்ன!

தாய்மடியின் தமிழ் சுகமே!
சேயறியும் இது நிசமே!
பேய்பிடியில் மீண்ட மக்கள்
நாய்க் குடியில் மாட்டுவரோ!

அவன் வாழ ஊதுகிறான்
எவர் செல்வார் எமன்பின்னே!
என்ன குறை இங்கிருக்கு!
அம்மா தான் எங்களுக்கு.

தமிழ் இனமே தாய்மனமே!
அமைந்த பெரும் புண்ணியமே!

தடைகள் முடிந்து விடியட்டுமே!

கொ.பெ.பி.அய்யா.


No comments:

Post a Comment