Monday 19 October 2015

ஒரே ஒரு தலைவி.

உம்மைப்போல் ஒரு தலைவி!

உம்மைப்போல் ஒரு தலைவி!
இம்மையினி அரும் பிறவி!
செம்மலும் பிறப்பதுண்டோ-அவர்
அம்மாதான்  மறுப்புண்டோ!

இராமன் வழி மண்ணாளும்.
கோமதியே பெண்ணாளும்!.
பூமித் தாய் பொறுமையே-கொடும்
தீமனங்கள் தீர்த்த பேரே!

வாலிதான் பெண் வடிவில்.
பாதியாவர் உம் பலத்தில்.
காளிதான் கடுஞ் சினத்தில்-ஆறியும்
தோழமை தான்  சற்குணத்தில்.

அகிலாண்ட நாயகியாய்,
புகழாண்ட தாயவராய்,
பகை தீண்டாத் தீயாக-வன்மை
புகை தாண்டி மீளுகிறாய்!.

அம்மா உம்மை நம்பித்தான்
இம்மா நிலம் பற்றித்தான்.
எம்மனம் எந்நாளும்-எங்கள்
அம்மா தான் கொண்டாளும்.

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment