Saturday 31 October 2015

அம்மா உம்போல்.......

பெண்ணேதான் ஆளும்!

அம்மா உம்போல் அன்புக்கு யாரோ!

சும்மா வீம்பால் சொல்வீச்சர் நேரோ!
நல்லாவே செல்லும் நல்லாட்சி கெடுப்பார்
பொல்லாதார் சொல்லும் செல்லாது தாயே!

தாய்தன் வீட்டை காத்திடும் பாசம்,
நீயுன் நாட்டை ஆண்டிடும் வாசம்.
பேய்வெம் பேச்சால் ஏய்த்திடும் மோசம்.
சேய்யெம் கூட்டால் தீய்த்திடும் நீசம்.

யாரென்ன செய்யும் ஊருந்தன் பக்கம்.
வேரன்ன பற்றும் நேருந்தன் சுற்றம்.
சீரென்ன நொய்யும் செருக்கரின் திட்டம்
கூரன்ன தொண்டர் கொடுவாள் சுற்றும்.

பெண்ணென எண்ணும் பொச்சாப்பு கூச்சம்.
விண்ணென விஞ்சும் பெண்ணெதிர் தாக்கம்.
என்னென்ன வீசும் வீசட்டும் காப்போம்.
பெண்ணேதான் ஆளும் அன்னைதான் நாடும்.

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment