Wednesday 28 October 2015

அம்மா அம்மாதான்

அம்மா அம்மாதான்.

அம்மா அம்மாதான் மற்றெல்லாம் சும்மாதான்.
செம்மாந்து நம்நாடு பெற்றபேரும் அம்மாதான்.
தம்முயிர் தமிழ்நாடு எம்பணி மக்களுக்கே!
நம்புந்தன் நாட்டுக்கே நாளொன்றும் வாழுகிறார்.

எதிர்வரும் சோதனைகள் புதிர்வென்று மீட்டுகிறார்.
விதிவியக்கும் சாதனைகள் மதிகொண்டு நாட்டுகிறார்.
சதிசெய்யும் தீவினைகள் எதிர்நின்று ஓட்டுகிறார்.
கதிதொய்யும் கூவொலிகள் பதிலின்றி தீட்டுகிறார்.

காட்டுக்கூச்சல் போட்டுசும்மா ஆட்டமாடும் கூட்டமோ!,
தீட்டுப்பேச்சு பேசிப்பேசி ஊட்டுபொய் நாட்டுமோ!
நாட்டுமக்கள் கேட்டுமம்மா செய்தநன்மை மறக்குமோ!
தீட்டுந்திட்டம் ஆற்றுமம்மா கோட்டையாள மறுக்குமோ!

ஆண்டதெல்லாம் போதுமென்று மீண்டதமிழ் நாட்டினை
மீந்ததென்ன ஆட்டைபோட   ஆந்தைவிழி ஆசையோ!
வேண்டாமய்யா விட்டுவிடு!போதுமம்மா எனுந்தமிழும்
தீண்டலையோ செவிகளும்! செவிடாகிப் போனதோ!

அன்றாடம் செய்திகளும் கண்டுவரும் மக்களை,
கண்டாடு மெய்விளங்கும் கொண்டாடும் அம்மாவை.
அமைதியாகி ஆராய்க அம்மாதான் நன்மையே!
தமிழ்நாடே சீராகும் தட்டில்லா உண்மையே!

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment