Wednesday 9 September 2015

எதிரி எதிரே யார்?

எதிரி எவருண்டு!

எதிரிதான் எவருண்டோ!
இமயத்தின் நிகருண்டோ!
உதிரிகள் ஊளையீட்டே
உலகையும் உருட்டல் கண்டோ!

பொச்சாப்புப் புலம்பல்கள்.
எச்சைகளின் அலம்பல்கள்
அச்சமில்லா அம்மா முன்
துச்சமெனும் தூசு மண்.

இந்தியாவின் முன்னோடி
எந்தநாளும் தமிழ்நாடே!
சந்தியாவின் பெண்ணேதான்
இந்தியாவின் எதிர் காலம்.

யாருக்கென்ன இல்லையோ!
ஊருக்குள் கேட்ட சொல்லோ!
நேருக்கு நேரே நில்
நீருக்கு நெருப்போ சொல்!

மக்களின் சக்தியடா!
சிக்கினால் முக்தியடா!
திக்கெல்லாம் தொண்டரடா!
சக்கையும் மிஞ்சுமாடா!

காவடி ஆட்டமெல்லாம்
சேவிக்கத் தானென்றால்
பாவிக்கும் தீட்சமுண்டு
கூவிக்கேள் அம்மா என்று.

ஊருக்கெல்லாம் மழையுண்டு.
உனக்கும்தான் நலமுண்டு.
பாருக்கெல்லாம் அம்மாதான்.
பாவம் நீயும் நம்மாள்தான்.

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment