Saturday 12 September 2015

அம்மான்னா அம்மாதான்.

அம்மான்னா அதிருதுல்ல!

அம்மா என்னும் சொல்லுக்கு-பொருள்
அன்பு ஒன்றே உலகுக்கு.
அம்மா என்றும் சொன்னாலே-சும்மா
அதிருதுல்ல விண்ணுக்கு.

அம்மா என்று மொழிவதற்கு--உயிர்
ஆன்மாவில் பிறப்பதற்கு.
அம்மா தான் மொழிகளுக்கு--சொல்லின்
ஆதாரம் சிறப்பதற்கு..

அம்மா சொல் இயல்புக்கு--ஐயோ!
மம்மி  தானோ !
அம்மா என்றே இசைக்கின்ற---இளங்
கன்றுக்கென்ன பயிற்றுவதோ!

அம்மாவுக்கும் மாற்றெதற்கு--தமிழ்
அறிந்தும் தானே ஏற்றிருக்கு--மொழி
அம்மா ஒன்றே மொழிவற்கு--நிலை
கொண்டும் அம்மா ஆள்வதற்கே!

கொ.பெ.பி.அய்யா.


No comments:

Post a Comment