Wednesday 9 September 2015

தொழிற் புரட்சி

அம்மாவின் தொழிற் புரட்சி.

தொழில் வளற்சி மாநாடு
பொழில் எழுச்சி தாய்நாடு.
எழில் மலற்சி வளநாடு
எழு புரட்சித் தமிழ்நாடு.

ஒன்றுக்குள் ஒன்றான
இந்தியாவின் நன்றான
நன்றுக்குள் வென்றான
நின்ற புகழ் தமிழ்நாடு.

சிந்தனைகள் வேறில்லை
நிந்தனைகள் பாடில்லை.
கண்டடையும் உச்சயெல்லை
கொண்டநடை தமிழ்நாடு.

வந்தனையும் வரவுகள்
கொண்டனையும் உறவுகள்.
என்றுணர் புரிவுகள்
என்றும்வளர் தமிழ்நாடு.

அரசியல் வெறும்பேச்சு
விரசியல் விடும்மூச்சு
உரசாத நெருப்பாச்சு
புரட்சித்தொழில் தமிழ்நாடு.

பன்னாடும் கண்ணுயர்த்தும்.
பொன்னாடு என்றுயர்த்தும்.
நன்னார்வம் முந்திவரும்
தன்னாடாம் தமிழ்நாடு.

முன்னேறும் பாதையொன்றே
தன்னோட பார்வையென்றே
கொண்டாளும் நேர்மைகொண்ட
அம்மாவின் தமிழ்நாடு.

கொ.பெ.பி.அய்யா.


No comments:

Post a Comment