Sunday 20 September 2015

ஆண்டாள் அம்மா.

அம்மாவின் கணக்கு.......!

அம்மாவின் கணக்கு அடக்கமாய் இருக்கு.
சும்மா உன் முறுக்கு செல்லாத சரக்கு.
நமக்கு நாமே நாடகம் எதற்கு?
உமக்கு நீமே பாடந்தான் அதற்கு.

புரிஞ்சிரிச்சு நாடு தெளிஞ்சிரிச்சு மூடு.
பிடி படாமல் ஓடு ஒளிஞ்சொழிய தேடு
ஊருக்கெல்லாம் விடிஞ்ச்சிரிச்சே!
உனக்குமட்டும் அடைஞ்ச்சிரிச்சோ!

வீட்டைத் திருத்தத்தான் விதியில்லையாக்கும்!
நாட்டை வருத்த நீ நடக்கிறயாக்கும்!
பாவம் தீரவோ பாதை யாத்திரையாக்கும்!
சாபம் ஆறுமோ சண்டாளக் கூத்தராக்கும்!

உனக்காக நீயே உருவாக்குந் திட்டம்
ஊரை ஏய்க்கவே ஆடுற ஆட்டம்.!
மிச்சம் மீதியோ மிஞ்சிய நிலமும்
சுத்தமா சுருட்டவோ சுத்துறயாக்கும்!

அம்மா தீட்டும் திட்டம் எல்லாம்
நம்மால் போற்றும் ஆக்கம் சொல்லும்
வாழும் நாடு வளரட்டும் மேலும்.
ஆளும் அம்மா போதும் போ!போ!

மீண்டவர் எமக்கு மாண்டவர் வேண்டாம்.
ஆண்டதும் போதும் மாண்டதும் போதும்.
ஆண்டாள் அம்மா ஸ்ரீரங்கத் தமிழாம்
நீண்டாள் எம்மா நிரந்தருள் அமிழ்தாம்.

ஒத்தைக்கு ஒத்தையாய் வித்தைக்கு வாரியா!
கத்திநீ கூவினாலும் சத்தியத்தை எதிர்ப்பாரர்?
இரட்டை இலைதான் சரித்திர நிலைதான்.
புரட்சித் தலைவிதான் நிரந்தர முதல்வர்தான்.

கொ.பெ.பி.அய்யா.



No comments:

Post a Comment