Sunday 30 August 2015

மாசிலாமணி.

புரட்சித் தலைவி அம்மா!

அம்மா முகத்தைப் பாருங்கள்.!
அன்பின் வனப்பைக்க் காணுங்கள்!.
இந்த முகம்தான் எங்கள் தெய்வம்.!.
பந்தம் கழகம் பாசறை அம்மா.

கள்ளம் அறியா உள்ளம் அம்மா.
துள்ளும் சிரிப்பே வெல்லும் அம்மா...
வெள்ளை மனமே பிள்ளைக் குணமே.
இல்லை சினமே எங்கள் அம்மா.!

மாசிலா மணியே மங்களம் அம்மா.
ஆசிலா மொழியே அன்பாம் அம்மா..
பேசுந் தென்றல் பிழையதில் புயலே.
கூசும் மன்றில் கறைபடாஅம்மா.!

வணங்கா முடியும் வழிபடும் அம்மா.
துலங்கும் பகலாய் விளங்கும் அம்மா.
கலங்கா மலையோ துணிவின் நிலையோ!
விளங்கும் கலையோ கடமை அம்மா.

சோதனை உடைத்த நீதியும் அம்மா.
சாதனை படைத்த பாதையும் அம்மா.
வாதினை எதிர்த்து வழக்கினை முடிக்கும்
மாதென உதித்த தேவதை அம்மா.

கள்ளம் செய்வார் காலன் அம்மா.
நல்லன பெய்வார் மாலன் அம்மா..
வில்லர் முறித்து விடியல் காட்டும்
வெள்ளம் காவிரி உள்ளம் அம்மா.

நிழல்  தரும் ஆலமரம் கருணையம்மா.
விழுதாம் பலமாம் தமிழுக்கு அம்மா.
நிலைபெறும் ஆட்சி வளம்பெறும் மாட்சி.
தொழிலதன் புரட்சி தலைவி அம்மா.

கொ.பெ.பி.அய்யா,

No comments:

Post a Comment