Monday 8 September 2014

அம்மா போதும்.



அம்மாவே எங்கள் சொத்து.

வாடா புழுகுத் தம்பி
வாய்தான் கிழிந்த தும்பி.
வழக்கு ஒன்றை நம்பி
முழக்கம் என்னடா அம்பி?.

பொய் பொய்யா சொல்லி
போட்ட கேசக் கிள்ளி
நொய் நொய்ன பல்லி
நுழைஞ்ச தெங்கடா லொள்ளி.

சவ்வு சவ்வா இழுத்து
சாட்சி பொய்கள் சேர்த்து
வவ் வவுனு கொலச்சு
வறண்டு தொண்ட போச்சா?

இன்னும் என்னடா இருக்கு.
இத்துப் போன சரக்கு.?
முன்னும் பின்னும் உனக்கு
எண்ணிப் பாரு கணக்கு.

இதுவும் ஒரு பொழப்பா?
எதுப்பதாக நெனப்பா.?
முதுகுப் புற மொறப்பா?
முடியப் போகுது பொறுப்பா.

வழக்கம் தான உனக்கு
வழுக்கிச் சாயும் இழுக்கு.
பலிக்காது உன் கணக்கு.
இழிப்பதென்ன சுழுக்கு?

நெஞ்சத் தொட்டு சொல்லடா.
செஞ்சதென்ன கொஞ்சமா?
இமயமலை இருக்குமா?
அமஞ்சதுனா மிஞ்சுமா?

தர்மனாக இருந்தயின்னா
தமிழகமே தலை வணங்கும்.
கர்மம் புடிச்ச சண்டாளா
கதபடிச்சா நம்பிடுமா?

தங்கத்தைக் குத்தம் சொல்வானோ!
தரையில் உரசவும் ஏற்போமோ!?
பங்கம் சொன்ன படுபாவி
படுவதும் தான் பொய்யாமோ?

தமிழ்தானே சொந்தமென்று.
தங்கத்தாய் வாழுகிறார்.
அமிழ்தமான அம்மாவே.
எங்கள் சொத்து போதுமே!

உத்தமன் சொன்னான் என்றா
இத்தமிழ் நம்பிவிடும்.?
சத்தியம் தோற்பதில்லை
வெற்றியே எங்கள் அம்மா.

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment