Monday 8 September 2014

முதல் சங்கம்



முதல் சங்கம்.

வெற்றியின் முதல் சங்கம் 
வீர மண்ணில் தான் முழக்கம்.
சுற்றியும் அப்படித் தான்
சூழ வரும் தான் முழக்கம்.  

நெல்லை மேயர் புவனேஸ்வரி 
நல்ல காலை சகுனமே!
எல்லை எதிரி இல்லையே
நல்ல ஆட்சி சாட்சியே!

அம்மா பெரும் சக்தி முன்னே.
சும்மா வரும் பக்தி தன்னே.
வாலியின் அவதாரம் தான்
வருவது யார் அம்மா முன்?

எதிர்க்க என்ன தேவையில்?
எங்கள் அம்மா ஆட்சியில்.
கதிர் விளைஞ்ச தோட்டத்தில்
கரடி விடப் பைத்தியமோ?

தமிழ் நாட்டுக்கு காவலாக 
தாயாரே இருக்க லாக
திருடருக்கு அழைப்பு வைக்க 
குருடரல்ல தமிழ் இழக்க.

எத்தனைக் காலம் தான் 
ஏமாறு வோம் இப்புவியில்?
அத்தனை பாடங்களும் தான்
அறிந்து நாங்கள் விழித்துவிட்டோம்.

அம்மா அவரின் அன்பில் நாமே 
அணைந் திருப்போம் இணைந் திருப்போம்.
நிம்மதி நிலவும் அம்மா நிழலே 
நிலைத்தால் போதும் மகிழ்ந்திருப்போம்.

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment