Saturday 26 July 2014

பாரதிப் பெண்



பாரதிப் பெண்.

பெண்ணென்றும் எண்ணித்தான்
பின்னைமொழி பகன்றாயோ!அம்மாவை
மண்ணென்றும் எண்ணித்தான்
திண்ணைமொழி துணிந்தாயோ!

என்னென்றும் அறியாமல்தான்
அம்மாவை நீ மொழிந்தாயோ!பழைய
பெண்ணென்றும் நம்பித்தான்
உன்னைப்பிழை முனைந்தாயோ!

பாரதியின் பாசறையில் அம்மா
பயின்று வந்த புயலென்றும்புதுமைச்
சாரதியாம் பாரதியின் தேர்
பார்த்தி என்றும் அறியாயோ!

கண்ணீரே கோலமென அந்தப்
பேதையல்ல கீசகனேபுரட்சிப்
பெண்ணவர் அம்மாதான் சாரதி
புதுமைப்பெண் என்றான் பாரதி

வளையல்கள் கொஞ்சும் மங்கையோ!
வலிமை கற்றார் பாரதியால்!—ஆளும்
கலைகள் அறிந்தவர் அம்மா.
மொழிகள் பலவும் தெளிந்தவர் அம்மா.

அன்னையின் வடிவம் அம்மா.
சக்தியின் சொரூபம் அம்மா-வஞ்சனை
கண்ணீரில் கரைந்தது இல்லை அம்மா.
 முன்னவர் வரைந்தது முடித்தார் அம்மா.

கொ.பெ.பி.அய்யா.

  



No comments:

Post a Comment