Friday, 28 November 2025

ஆலமரம் அண்ணாதிமுக.

ஆலமரம் அண்ணாதிமுக.

குளக்கரையில் ஒரு ஆலமரம் --செழித்து 
கிளை பரப்பி வாழும் மரம்.
நிழல் அகற்றி இலை நிரப்பி--அகன்று
வளம் கொழித்து ஆளும் மரம்

தேடி வந்த பறவைகளை--ஒன்றாய்
கூடி வாழ்ந்த உறவுகளை.
ஓடி வந்த கழுகு ஓன்று --உறவை
ஓட்டி விடப் பார்க்குதம்மா.

கலைத்து விடக் கத்துதோ--பந்தம்
உலைத்துக் கெடச் சுற்றுதோ.!
பழுத்து விட்ட இலைகளே--உழுத்து
நிலை குலைந்து உதிர்ந்தனவோ!

தேடி ஓடிக் கலைத்துப் போன--திருட்டுக்
கழுகு மட்டும் பறந்தது.
பொன் மனத்துச் சொந்தங்களை--எந்த
வன்மனந்தான் குலைத்திடுமோ!

ஆண்டுகள் ஆயிரம் ஆனாலும்--நன்றி
ஆராரும் மறந்தும் போனாலும்.
அம்மாவால் காத்த மரம்--இதை
ஆரசைக்கக் கூடும் அம்மா.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

Tuesday, 25 November 2025

அவலங்களும் அவமானங்களும்

அவலமா அவமானமா?

அவலங்கள் அனுபவங்கள் தாங்கலாம்.
அதனால் மனம் பண்படும்---ஆனால் 
அவமானங்களை மனது தாங்காது.
மானங்கெடும் மனது புண்படும்.

அவலங்கள் அனுபவங்கள் 
அவமானங்கள் பாடங்கள் 
அவலங்கள் அவமானங்கள் 
அனுபவித்துப் படித்துதான்
அனுபூதி மாறல் ஆம்.

நேரடி அனுப உணர்வு சீரடி அறிவு 
போராடிக் கடரும் பிறவி வாழ்வு
மீராமல் மீண்டும் நேராமல்
தீரடித் திவ்யம் சேரவே வரமே
அருள்க ஆண்டவா சரணம்.

Monday, 24 November 2025

சாமி சாமி

பழனிச்சாமி பாட்டு.

சாமி சாமி ஆளுஞ் சாமி சாமான்யப் பழனிச்சாமி.
சகமனிதம் பழகுஞ் சகோதரர் பழனிச்சாமி.

ஏழைகளின் நம்பிக்கை இதயமுள்ள பழனிச்சாமி
உழவன் ஏழை எடப்பாடி முதல் வரான பழனிச்சாமி

விவசாயி பெற்ற மகன் விவசாயி பழனிச்சாமி.
விவசாயி செய்த தவம் அவதாரம் பழனிச்சாமி.
உழவுத் தொழில் வாழ வைக்க உவந்து வந்த பழனிச்சாமி 
உழவர்களின் வளம் செழிக்க உழைத்து வந்த பழனிச்சாமி.

அம்மா தந்த பழனிசாமி நம்மாளிந்த பழனிச்சாமி 
எம்ஜிஆர் கண்டெடுத்த அம்சமிவர் பழனிச்சாமி 
சிங்கம் போன்று சட்டசபை சீறும் நம்மாள் பழனிச்சாமி.
கொங்கு மண்ணின் தங்க மகன் சிங்கம் அவர் பழனிச்சாமி.

சிரிப்பழகு புரட்சித் தமிழ் தெறிக்கும் மொழி பழனிச்சாமி
நெறிப்பழகு புரட்சியாரின் வளர்ச்சி வழி பழனிச்சாமி 
ஆளுமையின் அகராதி அம்மா வழி பழனிச்சாமி. 
வாழும் வழி சொல்லிச் சொல்லி வழிப் படுத்தும் பழனிச்சாமி.

ஆளப் பிறந்த சாமியாம் வாழவைக்கும் சாமியாம்
நாளை இந்த சாமிதான் நம்மை ஆளும் முதல்வராம்
தும்சம் செய்ய துரோகியரை வம்சம் புரட்சித் தமிழராம்
அம்சம் தமிழ் ஆடசிக்கு அரியணைச் செல்வராம்.
இம்சை அரசியல் முடிவுக்கு எடப்பாடி பழனிச்சாமி யாம்.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

Sunday, 23 November 2025

விடியல்

விடியல் எப்போ?

அடியே சின்னக்குட்டி செல்லம்மா!
விடிஞ்சிரிச்சா சொல்லம்மா
விடியலுனு சொன்னாங் களே
விடிஞ்சிரிச்சா பொன்னம்மா.?

அடைஞ்சு போன ஆதவனோ!
அடைஞ்சி எங்க தொலைஞ்சானோ!
காந்தி சொன்ன விடியலைப் போல்,
காரிகையரும் காண்பா ரோ!

நடு இரவே ஆனாலும்
நகை யோடு நங்கையர்
சுதந்திரமாய் உலாவி வர
நிரந்தரம் விடிஞ்சிரிச்சா.?

பால் குடிக்கும் பிஞ்சுகளை
பாலியல் வன் கொடுமை.
காமக் கொடூ ரர்களின்
களி யாட்டம் குறைஞ் சிரிச்சா?

கொலைக் களவு கொள்ளைகளும்,
நிலை குலைந்து முடியவில்லை.
விலை இல்லா சலுகைகளும்,
தலை குனிந்து முடங்கவில்லை.

அடங்க வில்லை விபத்துக்களும்,
அரங்கேறுது தினம் தினமும்.
அடக்கிட நாளை இல்லை.
விடியலுக்கு வேளை இல்லை.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

Thursday, 20 November 2025

உணர்வில் கலந்த உறவு.

உணர்வில் கலந்த உறவு.

உணர்வில் கலந்த உறவே--எம்ஜிஆர்
கனவில் மலர்ந்த வரவே!
நினைவில் நித்திய நலனே--தமிழர்
பிணைப்பில் சத்தியக் குலனே.

திருவே பொருளே நீயே--தொணடர்
தியாகப் பிரியம் நீயே!
அண்ணல் எம்ஜிஆர் உயிரே--சின்னம்
இரட்டை இலையின் ஜெயமே!

அம்மா போற்றிய தீர்கமே--உண்மை
அன்பர் ஆற்றிய மார்கமே.
அண்ணா வழியின் இயக்கமே--சுயம்
எண்ணா நிலையின் தியாகமே.

இரத்தத்தின் இரத்தம் சகோதரமே--ஒரே
சித்தத்தின் சித்தம் சோதரமே!
சத்தியத் தாயின் பிள்ளைகளின்--ஒரு
இலட்சியப் பயண இலட்சணமே!

அண்ணா திமுக அறவழியே---புரட்சியார்
சொன்ன சொல்லின் நெறிமுறையே
இன்றும் என்றும் நாளையுமே--தீயரை
வென்றும் ஆண்டும் தமிழகமே--ஆணடு
 நின்றும் நூறுகள் வாழியவே!

கவிஞர். கொ. பெ. பி. அய்யா.

எதைப்பிடித்து வந்தாய்?

எதைப்பிடித்து வந்தாய்?

காலைப் பிடித்து வந்தாரா
கையப் பிடித்து வந்தாரா
எதைப் பிடித்து வந்தாலென்ன
ஏறி வந்தார் என்பதே உண்மை.

எதைப் பிடித்து நீ வந்தாய் 
எல்லோ ருக்கும் தெரியுமே--அந்த
அடையாளம் இல்லை யென்றால் 
ஆரறிவார் உன்னை இன்று.

தலைவனுககுத் தகுதி என்ன? 
தொண்டனாக விலாசம் என்ன--நீ
தியாகம் என்ன செய்தா யென்று
தலைவனாக சும்மா இன்று?

தந்தை தாத்தா பெயரைச் சொல்லி
வந்தா யென்றால் உண்மையே!
எந்த வேறு உழைப்பைக் கூறி
முந்தி வந்தாய் தலைவனாகி?

நோகாமல் நுங்கு தின்றாய்
வேகாத பருப்பு ஒன்றாய்.
உழைத் துயர்ந்த எடப்பாடியாரை
பிழை பேசத் தகுதி யென்ன?

Kppayya 

Monday, 10 November 2025

அம்மையப்பன்.

அம்மையப்பன்.

அம்மையப்பன் ஆளுமைநீ"!
நம்பிச் சொன்னால் தீரன்நீ!
நான்காண்டு காலம் நீ!
நல்லாட்சி நாயகன் நீ!

உருட்டுக்கு முடிவு நீ!
இருள் நீங்க ஒளி நீ!
சட்டமொழுங்கு சரித்திரன் நீ!
சுதந்திர சுவாசம் நீ!

கொடியநோய் கொரனாவில் நீ,!
கொடுத்துக் காத்தக் காவலன் நீ!
வரண்ட அந்தப் பஞ்சத்திலும் நீ!
இருண்ட நிலை நீக்கினாய் நீ!

ஏழைகளின் தாயன் நீ!
வேளாளன்மைத் தந்தை நீ!!
உழவர்களின் நம்பிக்கை நீ!
தலைவன்வழிக் கீர்த்தி நீ!

அம்மா நீ எம்ஜிஆர் நீ!
அதிமுக கட்சி நீ!
ஆளுமை நீ வாழ்வுரிமை நீ!
எடப்பாடி பழனிச்சாமி சாமி நீ!

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

பட்டிக்காட்டுப் பழனிச்சாமி.

பட்டிக்காட்டுப் பழனிச்சாமி 

பட்டிக் காட்டுப் பழனிச்சாமி 
பழகும் நல்ல உழவர்சாமி. 
வேட்டி போல வெள்ளைச் சாமி.
கர்வம் இல்லா கடமைச் சாமி.

குழந்தை போல சிரிக்குஞ் சாமி 
பழக நல்ல ஏழைச் சாமி.
ஏர் பிடிச்சு உழவு செய்த
ஊரறிஞ்ச மனிதர் சாமி

காரில் ஏறிப் போனாலும் 
கண்டால் பேசும்  ஆசாமி.
அரசியல் வாதி போலல்லா
சராசரி பழனிச் சாமி

உறவு சொல்லி அழைக் குஞ் சாமி
சரளமாகப் பழகுஞ் சாமி.
விவசாயம் தெரிஞ்ச சாமி
அவசியம் பழனி ச்சாமி.

அதிகாரம் காட்டா சாமி
முதல்வரான மனிதர் சாமி
தவசியம்மா பெற்ற மகன்
விவசாயி பழனிச்சாமி

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

Sunday, 9 November 2025

கழக வாழ்த்து

கழக வாழ்த்து

கொடுத்துக் கொடுத்துச் சிவந்த கரம்
கொடை வள்ளல் எம்ஜிஆராம் --அவர்
கொடுத்துச் சென்ற கழகம் இதுதான் 
கொடுக்கும் அதிமு கழகம் வாழி"

கருப்பு மனிதன் சிவப்பு இரத்தம்
வெள்ளை மனசுத் தமிழன்--நமது
அண்ணாவின் புகழ்  சொல்ல வாழும்
அண்ணா திமு கழகம் வாழி

தமிழன் புகழ் தரணியெங்கும் ஓங்க
அமிழ்தம் அண்ணா வழியே--தமிழர்
ஆதாரக் கொள்கை யெனக் கொண்ட
அசலாமிது அதிமு கழகம்.வாழி

அண்ணா எம்ஜிஆர் பின் அம்மா 
இன்று எடப்பாடி யாரும்--என்றுந்
தொடரும் இன்னும் வளரும் மக்கள்
உடைமை அதிமு கழகம்.வாழி

தமிழ் வாழ தமிழருக்கே உரிமை
கமழுந் தூயக் கழகம்--ஆயிரம்
கோடிகள் ஆணடுகள் நீண்டும் நீண்டு
வாடாமல் வாழ்க! வாழ்க! 
அதிமு கழகம் வாழ்கவே!

கவிஞர். கொ. பெ. பி. அய்யா.

Friday, 7 November 2025

நாடே கடனில்............!

நாடே கடனில்.............!

நாடே கடனில் நாடாள்பவன் அம்பானி.
பாடே வாழ்வான பாமரனோ பட்டினி.
ஓட்டை விற்றவன் ஓட்டைக் குடிசையில்
ஓட்டைப் வாங்கியவன் கோபுர மாளிகையில்.

நமக் கெதற்கு வம்பென நாலாம் தூண்
அமுக்கி வாசிப்பதும் அடங்கியதும் ஏன்?
பணநாயகம் வென்றும் சனநாயகம் தோற்றும்.
அநியாயம் ஆனதோ ஆகாத சுதந்திரம்.

பாவங்கள் மேயாட்டம் பகற்கொள்ளை பேயாட்டம். 
சாபங்கள் கோபங்கள் தியாகமெங்கே போராட்டம்.
உரிமைக்கு விலைபேசும் வறுமைக்குச் சாவிலையோ!
பெருமைக்குப் பேர்சொல்லும் மகான்கள் பிறப்பிலையோ!

அடிபட்டு மிதிபட்டு ஆயிரங்கள் பலியிட்டு,
விடியலைப் பெற்றுத் தந்தார் தியாகிகள்
விடியாமல் விடியுமுன்னே வேட்டையர்
நுழைந்திட்டார்.
அடைந்தது ஆகாசம் முடிந்தது இதிகாசம்.

சுற்றிச்சுற்றித் திரிகிறாள் சுதந்திரத் தாய் அழுகிறாள்.
நோகாமல் நுங்குதின்போர் சாகாமல் வாழுகிறார்.
மீண்டும் ஒருபாரதம் வேண்டும் வேண்டுமே
விஷ்ணு மறுஅவதாரம் கல்கியே வருகவே!

கவிஞர். கொ. பெ. பிச்சையா.


இரட்டை இலைக்கே என் ஓட்டு.

இரட்டை இலைக்கே எம் ஓட்டு

எம்ஓட்டு என்றும் இரட்டை இலைக்கே
இந்நாட்டின் நலனார் எடப்பாடி அவர்கே.
எம்ஜிஆர் காட்டிய இரட்டை விரல்களே
என்றும் எமது வெற்றிக் குரல்கள்.

தமிழ் நாடாளும் இரட்டை இலைகள்.
தரணியே மிரலும் புரட்சி அலைகள்.
அன்பின் இணைப்பு ஆத்ம அணைப்பு.
ஆளுகைப் பண்பு ஆளுமை வனப்பு.

மக்கள் தலைமை மக்கள் ஆட்சி.
மக்கள் படைத்த மாண்பின் மாட்சி
மக்கள் அலையில் தோன்றிய காட்சி..
மக்கள் நலனே மக்களே சாட்சி.

மக்கள் இயக்கும் மக்களின் இயக்கம்.
மக்கள் சக்தி மக்களின் யுத்தம். 
மக்கள் உழைப்பு மக்களின் சொத்து.
மக்கள் காப்பு மக்களின் அதிமுக.

எதையோ நினைத்து எதற்கோ வந்தார்.
அதையே மறைத்து அதனால் சென்றார்.
மக்கள் உடைமை மக்களின் உரிமை.
மக்கள் நாயகன் எடப்பாடி நின்றார்.

பொதுநலன் என்பது கொள்கை எல்லை
சுயநலம் கொள்வார்கு இடமே இல்லை.
அதிமுக என்பது அறப்போர் படை
அற்பருக்கு இங்கே எப்போதும் தடை.

தோல்வி என்றொரு சொல்லே இல்லை 
வேள்வி அதுவே வெற்றியின் சொல்லே.
புரட்சித் தலைவர் போதனை ஞானம்.
புரட்சிப் படையிது சாதனை காணும்.

கவிஞர். கொ. பெ. பி. அய்யா.

சிவந்த கரங்கள்

கொடுக்கும் கழகம்

கொடுத்துக் கொடுத்துச் சிவந்த கரம்
கொடை வள்ளல் எம்ஜிஆராம் --அவர்
கொடுத்துச் சென்ற கழகம் இதுதான் 
கொடுக்கும் அதிமு கழகம்.

கருப்பு மனிதன் சிவப்பு இரத்தம்
வெள்ளை மனசுத் தமிழன்--நமது
அண்ணாவின் புகழ்  சொல்ல வாழும்
அண்ணா திமு கழகம்.

தமிழன் புகழ் தரணியெங்கும் ஓங்க
அமிழ்தம் அண்ணா வழியே--தமிழர்
ஆதாரக் கொள்கை யெனக் கொண்ட
அசலாமிது அதிமு கழகம்.

அண்ணா எம்ஜிஆர் பின்னே அம்மா இன்று எடப்பாடி யாரும்--என்றுந்
தொடரும் இன்னும் வளரும் மக்கள்
உடைமை அதிமு கழகம்.

தமிழ் வாழ தமிழருக்கே உரிமை
கமழுந் தூயக் கழகம்--ஆயிரம்
கோடிகள் ஆணடுகள் நீண்டும் நீண்டு
வாடாமல் வாழ்க! வாழ்க! 
அதிமு கழகம் வாழ்க! வாழ்கவே!

கவிஞர். கொ. பெ. பி. அய்யா.

Saturday, 1 November 2025

இப்போதான் நிம்மதி.

இப்போதான் நிம்மதி.

இப்போதான் நிம்மதி --இனி
எப்போதுமே நிம்மதி.
அலப்பறைங்க போனாங்க --அட
ஆண்டவனே நிம்மதி.

உடனிருந்தே தொல்லையாய்--கெட்டக்
கடங்காரங்க அலப்பறைபோல்.
விட்டதடா சனியன்கள்--விட்டுத்
தொலைஞ் சாங்கடா இம்சைகள்.

ஏழரைகள் இடைஞ்சல்கள்--ஐயோ
போலரைகள் புலம்பல்கள்.
கஷ்டகாலம் ஓஞ்சது--துஷ்ட
சகவாசம் தீஞ்சது.

தள்ளி விடத் தயங்கித்தான்--கொஞ்சம்
தள்ளி நின்னே யோசனை. 
கிள்ளி விட்டு அவங்களே--கொள்ளி
வச்சுக் கொண்டாங்க.

ஆரவாரம் தீர்ந்தது--அடங்கா
அலைகடலும் ஓய்ந்தது.
அமைதி யெங்கும் நிலவியே--அசல்
அதிமுக நிலைத்தது.

கவிஞர். KPPAYYA


Friday, 31 October 2025

போனால் போகட்டும்.

போனால் போகட்டும் தம்பி 

போனால் போகட்டும் தம்பி --முன்னர்
போனவர் விலாசம் தெரியுமா தம்பி?
வந்தாலும் வரட்டும் தம்பி,--சென்று
வந்தாலும் வரட்டும் தம்பி--அரசியல்
தந்தாலும் பாடம் படிக்கட்டும் தம்பி.

அரசியல் என்பது போராட்டம்--அதை
அறிவார் புரிவார் உணரட்டும்.
அனுபவம் அவரை திருத்தட்டும்--காலம் 
உணர்த்திய உண்மை விளங்கட்டும்.
போனால் போகட்டும் தம்பி -- முன்னர்
போனவர் விலாசம் தெரியுமா தம்பி.
வந்தாலும் வரட்டும் தம்பி--அரசியல்
தந்த பாடம் படிக்கட்டும். தம்பி

உறவில் உதித்தது அதிமுக---அதைப்
பிரிவதில் பிரிந்தவர் பாவம்.
தவறைச் சொல்லி வருந்தாமல்--நல்ல
உறவை முறிப்பதா இலாபம்?
போனால் போகட்டும் தம்பி --முன்னர்
போனவர் விலாசம் தெரியுமா தம்பி.
வந்தாலும் வரட்டும் தம்பி--அரசியல்
தந்த பாடம் படிக்கட்டும்.தம்பி.

பிரிவும் முறிவும் வழிமுறையா--அதை
இரத்தத்தின் இரத்தங்கள் ஏற்குமா?
வரலாறைக் கேட்டால் சொல்லும்--அதை
திரும்பிப் பார்த்தால்  திருத்தும்.
போனால் போகட்டும் தம்பி --முன்னர்
போனவர் விலாசம் தெரியுமா தம்பி.
வந்தாலும் வரட்டும் தம்பி--அரசியல்
தந்த பாடம் படிக்கட்டும்.தம்பி.

தொண்டர்கள் அமைத்த  இயக்கம்--எவர்
துண்டாட நினைப்பார் தோற்பார்.
மக்கள் சக்தி இயக்கம்--எத்தனை
சிக்கலும் எதிர்க் கொண்டும் நிலைக்கும்
போனால் போகட்டும் தம்பி --முன்னர்
போனவர் விலாசம் தெரியுமா தம்பி.
வந்தாலும் வரட்டும் தம்பி--அரசியல்
தநத பாடம் படிக்கட்டும் தம்பி.

 மேலே எம்ஜிஆர் இருக்கிறார்--சர்வ
வல்லமை அம்மாவும் பார்க்கிறார்.
பூமி சழலும் வரைக்கும்-- சரித்திர
சாமி சோன்ன சத்தியம் நிலைக்கும்.
போனால் போகட்டும் தம்பி --முன்னர்
போனவர் விலாசம் தெரியுமா தம்பி.
வந்தாலும் வரட்டும் தம்பி--அரசியல்
தந்த பாடம் படிக்கட்டும்.தம்பி.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.


Monday, 27 October 2025

தானா எழுந்த தலைமை.

தானா எழுந்த தலைமை.

தானா எழுந்த தலைமைப் பொறுப்பு 
தலைவரு க்குப்பின் தானே பிறப்பு
அதுவே பூப்போல் அதுவே மலர்வது
அதுதான் அண்ணா திமுக தொடர்வது.

வாரிசு என்ற வழக்க மில்லை 
வயது மூப்பும் பழக்க மில்லை 
எவரிடம் தலைமைப் பூத்திரு க்கிறதோ!
அவரிடம் பதவி காத் திருக்கிறது.

தொண்டர் தூண்கள்  தாங்குங் கழகம்
தலைமைப் பாங்கும் ஓங்குங் கழகம்
எல்லாம் தானே எழுவது ஆக்கம்
எவருந் தூண்டா தன்னகத் தாக்கம்.

காலங் காலமாய் அதுவே வாழும்.
வாழுங் காலங்கள் கோடிக ளாகும்.
ஆளும் நாடுகள் நாளுங் கூடும்
அம்மா எம்ஜிஆர் பேரே பாடும்.

அண்ணல் எம்ஜிஆர் அமைத்தக் கழகம் 
அவரது பேரில் தலைமைக் கழகம்.
அவரும் அம்மாவும் தமிழ் அடையாளம்
எவரும் இங்கு வேரெவர் ஆளும்?

கவிஞர். கொ. பெ. பிச்சையா.


கிளையிலிருந்து கோட்டை வரை.

கிளையிலிருந்து கோட்டை வரை.

கிளையிலிருந்து கோட்டை வரை.
விளைந்து வந்த பழனிச்சாமி 
அப்பன் பேரைச் சொல்லி வந்த
சுப்பனல்ல பழனிச் சாமி.
சிரித்தமுகம் மக்கள் பணி சீராளன் பழனிச்சாமி.
பிரித்தாளும் போக்கில்லா பண்பாளர் பழனிச்சாமி

அனுபவத்தில் தேறிவந்த தொண்டனவர் பழனனிச்சாமி.
படிப் படியாக மேலே வந்த பணியாளர் பழனிசாசாமி
படிக்காத பாமரன் விவசாயி மகன் பழனிச்சாமி
எடப்பாடி தந்த முத்து எங்கள் சொத்து பழனிச்சாமி.

எம்ஜிஆர் காலந்தொட் டே இரசிகனவர் பழனிச்சாமி.
கல்லூரிக் காலம் முதல் கட்சிப்பணி பழனிச்சாமி.
அம்மாவின் ஆசிபெற்ற ஆட்சிப்பணி பழனிச்சாமி.  
குடும்பம் கொண்டு நுழைக்காத கொள்கை வீரர் பழனிச்சாமி.

கட்சியின் ஜனநாயகம் காத்துவரும் பழனிச்சாமி 
கட்சியின் கட்டுபாபாடும் காவல் ஐயன் பழனிச்சாமி.
தன்மானச் சிங்கமவர்  தனிவழி பழனிச்சாமி.
பொன்மனம் போலவே தன்வழியில் பழனிச்சாமி.

மண்பெருமைக் காக்கவே மக்கள் நலம் மீட்கவே பழனிச்சாமி 
தன்பெருமை தவிர்க்கவே தலைவர்புகழ் பழனிச்சாமி
அம்மாவின் பிள்ளையாக அவர் வழி பழனிச்சாமி
செம்மாந்த அதிமுக வைச் சீரீநடத்தும் பழனிச்சாமி.

கவஞர். கொ. பெ. பிச்சையா.

Saturday, 25 October 2025

தன்மானச் சிங்கம்.

தன்மானச் சிங்கம்.

மானம் ஒன்றே பெரிதென வாழும்
மனிதன் தானே எடப்பாடி யாரும்
வான் குவிந்தாலும் தான் பணியாத
தன்மானச் சிங்கம் பழனித் தங்கம்.

கைநீட்டி நாளும் பொய்கூட்டிப் பேசும்
சைத்தான்கள்  வாழும்  சண்டாள தேசம்.
மெய்யறிப் புனிதம் பொய்யா மனிதம்
வைய்யம் காண்பது அரிதும் அரிதாம்.

மானங் காத்து ஈனம் தவிர்த்து
வானங் கீழே தான்தலை குனிந்து
வாழுங் கேவலம் போலல் லாமல்
நாளுந் தன்மானம் வாழும் பழனிசாமி.

அரசியல் என்றால் அவமானம் என்பார்
விரசியல் என்றும் வேறாய்ச் சொல்வார்.
ஆனாலும் எடப்பாடி தன்மானச் சிங்கம்
வானுயரம் போலூம் தானுயர்த் தங்கம்.

தொலைந்தன தேடி அலைய வேண்டாம்
தூர்ந்தது துடைத்து தேடவும் வேண்டாம்.
தன்மானம் காத்து பொன்மான் மிளிரும்
தன்வழி எடப்பாடி தனிவழி ஓளிரும்.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.


Friday, 24 October 2025

நம்மில் நமது தலைவன்.

நம்மில் நமது தலைவன்.

நம்மில் எழுந்து நம்மில் தோன்றி
நமக்காகப் பிறந்த நமது தலைவன்.
நம்மைப் போலவே வாழ்ந்து வருகிறார்
நம்போலவே வாழும் எடப்பாடியார்.

எளிய நடையும் ஏழ்மை உடையும்
பழகிய மனமும் அழகிய குணமும்
தெளிந்த பார்வை குளிர்ந்த சேவை
விளங்கும் மொழியில் பழங்கும் எளிமை

கிராமியப் பேச்சு கிராம மூச்சு
கிரம்மம் சகசம் பொறுமைச் சகிதம்
அருமை மனிதம் சராசரி இனிதம்.
தருணம் பழகும் யதார்த்த நளினம்.

கர்வம் இல்லா சர்வம் சாதாரணம் 
பர்வம் அறிந்தப் பக்குவம் உதாரணம்.
சகோதரப் பரிவும் மகோன்னத உறவும்
மகத்துவ மாண்பும் தலைமைத் தகவு.

ஆளுமைப் பண்பு அகத்தினில் அன்பு
வாழ்வுரிமை ஆண்மை வழக்கிற் தெம்பு
மனமுடன் பழகும் மானுடசாமி--தமிழ்
இனமான உணர்வாம் பழனிச்சாமி.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

Thursday, 23 October 2025

எம்மதமும் சம்மதம்

எம்மதமும் சம்மதம்.

எம்மதமும் சம்மதம் ஏற்போமே
அம்மதமும் நம்மதம் தீர்ப்போமே
மனம் கோணாமல் மதம் பேணுவோம்
இனம் பாராமல் இணைந்து வாழுவோம்.

ஆன்மாக்கள் போலவே ஆறுகள்
அதனதன் வழியே தீர்வுகள்.
சேரும் இடங்கள் சங்கமம்.
நேரும் விதமோ சம்மதம்.

கடல்களில் வேற்றுமை காட்டுமோ!
கண்டங்கள் தோற்றமும் மாற்றமோ
பெயர்கள் தானே பலப்பல
பிரிவினை ஏது உலகிலே.

ஆறுகள் என்னும் வழிகளை
பேருகள் சொல்லி அழைக்கிறோம்.
சேரும் ஓரிடம் கடலது போல்
மார்க்கங்கள் சங்கமம் இறையொருவன்.

அதனதன் வழியில் ஆறுகளே
மதங்கள் நம்பிக்கை இருக்கையிலே
மோதல் ஆகுமோ உலகினிலே
யாதும் நம்மதம் சம்மதமே

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

Wednesday, 22 October 2025

வேட்டிய மடிச்சிக் கட்டி......

வேட்டிய மடிச்சிக் கட்டி.....

வேட்டியை மடிச்சிக் கட்டி
விவசாயி தலப்பாக் கட்டி
கோட்டையில் கோலோச்சி
நாடாளும் யோகன் சாமி.

விவசாயம் தெரிஞ்ச சாமி
அவசியங்கள் புரிஞ்ச சாமி
விவசாயி நாடாள விவசாயம்
அவசரம் அவசியம் ஆனசாமி.

காடு வெட்டி கழனி பார்த்து,
மேடு பள்ளம் சமம் பார்த்து,
நீரு பாய்ச்சி நிலம் நனைச்சி,
ஊரு நலம் காக்கும் சாமி.

பச்சை நிறத் துண்டு போட்டு
பசுமையைத் தோளில் காட்டி 
வேளாண்மை வம்சம் வீட்டு 
தாளாண்மை ஆளும் சாமி.

எடப்பாடி ஊராளர்
எலுமிச்சை நிறமாளர்
கடப்பாடு கொள்கையாளர்
எம்ஜிஆர் அம்மா பற்றாளர்

சிரித்த முகம் சீராளர்
சிறுத்த மீசை நேராளர்
சிங்கம் நடை வீராளர்
தங்க மகன் பழனி சாமி

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

























Tuesday, 21 October 2025

எம்ஜிஆர் கண்ட இரட்டை இலை

எம்ஜிஆர் கண்ட இரட்டை இலை

எம்ஜிஆர் கண்ட இரட்டை இலைகள்  என்றும் வென்ற இரட்டை இலைகள்.
தனித்து வென்று களங்கண்டஇலைகள்
துணித்த எங்கள் இரட்டை இலைகள்.

திண்டுக் கல்லை வென்றக் கல்லாய்
கொண்டுத் தூக்கிய வெற்றி இலைகள்.
முதன்முதல் வென்ற இரட்டை இலைகள்
புதாட்சி கண்ட இரட்டை இலைகள்.

எழுபத் தொன்றில் முளைத்த இலைகள்
எங்கும் துளிர்த்த இரட்டை இலை.கள்.
காலை வாசல்க் கோலமாம் இலைகள்.
காரிகை கொண்டை இரட்டை இலைகள்.
 
வெற்றிச் சின்னம் இரட்டை விரல்கள்
சுட்டிக் காட்டும்  இரட்டை இலைகள்.
பச்சைப் பசப்பென பரவித் துளிர்த்தன
இச்சை வண்ண இலைகள்.தழைத்தன.

எதிரிகள் கண்களில் விரல்கள் ஆட்டி,,
பதறிச் சிதறப் பயமுற மிரட்டி,
அதிரும் சும்மா அலற விரட்டி,
சதுராடிக் களத்தில் சம்பம் செய்யும்.

விரும்பித் தொட்டால் அரும்பி மலரும்.
நிறம்பிப் பச்சை கண்களில் குளிரும்.
எதிர்க்க நினைத்தால் இல்லா மலாக்கும்
உதிர்க்க முனைந்தால் ஓயா தழைக்கும்.

கவிஞர். கொ. பெ. பி அய்யா.




Saturday, 18 October 2025

ஏழையும் டாக்டராகலாம்.

ஏழையும் டாக்டராகலாம்.
எடப்பாடியார் ஆட்சி யிலே

படிக்கும் செலவும் பொறுப்பாக
முடிக்கும் வரையும் ஏற்பாக
பார்த்துக் கொள்ளச் செய்தாரே.
அரசாங்கம் அதையும் ஏற்கவே
ஏழையும் டாக்டராகலாம்.
எடப்பாடியார் ஆட்சி யிலே

ஏழையாகப் பிறந்தவன் 
இலவசமாகப் படித்தவன்.
அரரசுப் பள்ளி மாணவன்
திறனறித் தேர்வு எழுதாமல்
ஏழையும் டாக்டராகலாம்.
எடப்பாடியார் ஆட்சி யிலே.

ஏழை யொருவன் வாழ்வினை
ஏழ்மை அறிந்தவர் எடப்பாடியார்.
வாழை யடி வாழையாக
ஏழைகளின் இயக்கம் அதிமுகவே
ஏழையும் டாக்டராகலாம்.
எடப்பாடியார் ஆட்சி யிலே.

எம்ஜிஆர் அம்மா போலவே
எடப்பாடியாரும் அதுபோலவே
ஏழை களுக்கான ஒதுக்கீடாகவே
ஏழு புள்ளி ஐந்தளித்தாரே.
ஏழையும் டாக்டராகலாம்.
எடப்பாடியார் ஆட்சி யிலே

இரண்டா யிரம்மேல் கிளினிக்குகள்
அறு நூறுக்குமேல் உணவகங்கள்
மருத்துவம் பயில பதினொன்று
நிறுவிய கல்லூரி மேற்கொண்டு
ஏழையும் டாக்டராகலாம்.
எடப்பாடியார் ஆட்சி யிலே

பசியைப் போக்கிய தாயாரை
பாமரர் மருந்தக அம்மையாரை
நிரா கரிக்கின்ற சதிச்செயலை
முறிப்போம் மீண்டும் திறப்போம்.
உறுதி செய்வோம் இருபத்தாறை.
பறிதுத்துத் துறத்தி ஓட்டு வோம்
ஏழையும் டாக்டராகலாம்.
எடப்பாடியார் ஆட்சி யிலே

கவிஞர். கொ. பெ. பி அய்யா.



இளைஞனே விழித்தெழு!

இளைஞனே நீ விழித்தெழு!!

இளைஞனே நீ விழித்தெழு.
எதிர் காலமுன்னை அழைக்கிறது.
நாளைய சமூகம் உனதானது
வேளை இதுதான் உணர்வானது.

எதிரே பாரது தெரிகிறதா.?
புதிராய் விடுகதை புரிகிறதா?
உன்னைச் சுற்றி சதிவலைகள்
கண்ணை மறைத்து விரிகிறதா?

உல்லாசம் சல்லாபம் எதற்காக?
எல்லாமே கெடுவினை அதற்காக.
எஃகு வலிமை உள்னுடலை
சிதைக்கும் செயலே சூழ்ச்சிவலை.

அடிமைப் பழக்கம் அபாயம்
குடிமது போதை பெரும்பாவம்
மயக்கிக் கொல்லும் சிற்றின்பம்
மயங்குதல் பாதகச் செயல்வன்மம்.

உடம்பை இரும்பாக் கட்டிடனும்
நரம்பை வலிமைப் படுத்திடனும்.
சுவரில்லாத சித்திரமா!
தவறில்லாத செயல்த் திறமா!

உடம்பு தானே பிரதானம்
கடமை அதற்குள் சன்னிதானம்.
உடலும் அறிவும் வலுவிருந்தால்.
முடிக்கும் செயலும் தெளிவிருக்கும்.

காலம் வெகுதூரம் எதிரிருக்கு.
காத்துக் கிடக்குது கனவதுக்கு.
இலக்கைக் குறிவை,! ஓடு!
அடையும் வரைக்கும் ஓயாதே.

விதைக்குங் காலம் விதையாதது,
விளையுங் காலம் விளையாது.
முளைக்கும் காலம் நோய்ப்பட்டால்
வளரும் காலமே முடிந்து விடும்.

படிக்கும் நேரம் படித்திடனும்.
பயனுறுங் காலம் கணித்திடனும்.
அறிவை ஏற்றி வளர்ந்திடனும்.
திறமை காட்டி உயர்ந்திடனும்.

உன்னை நம்பி முயன்றிடனும்
உன்னையே நம்பி வென்றிடனும்.
வலிமை தானே நம்பிக்கை
எளிமைத் தயர்வை அகற்றிடனும்.

கவிஞர். கொ. பெ. பிச்சையா

Friday, 17 October 2025

மாற்றம் வேண்டும் மாற்றுவோம்.

மாற்றம் வேண்டும்.

மாற்றம் வேண்டும் மாற்றுவோம்.
ஏற்றமாக இளஞரணி ஆற்றுவோம்.
போற்றினோம் புரட்சிவழிக் கூடினோம்.
நாட்டினோம் தமிழாட்சி சூடினோம்.

கோட்டையேறி கொடிமரம் நாட்டுவோம்
நாட்டைமீட்டிப் பதறுகளை ஓட்டுவோம்.
வேட்டையாடி விளையாடிக் காட்டுவோம்.
பாட்டுப்பாடி ஆட்டமாடிப் போற்றுவோம்.

பொங்குமணி சீறுமொலிச் சிங்கங்கள்.
தங்கமகன் எம்ஜிஆர் சொந்தங்கள்.
சங்கமொலிக்க ஓங்காரம் தொணிக்க,
வங்கலைகள் இளைஞரணி திழைக்க

மீட்டுவோம் தமிழகம் மீட்டுவோம் 
மீட்டித்தமிழக மக்களைக் காப்போம்.
காட்டுவோம் அம்மாப்படை  காட்டுவோம்.
காட்டிப்புரட்சி இளைஞரணி ஆற்றுவோம்.

இந்தப்படைப் போதுமா இன்னுந்தான் வேணுமா?
சொந்தப்படை யாகுமா கூலிப்படைத் தாங்குமா?
எம்ஜிஆர் அம்மான்னா இளக்காரம் ஆனதா?
தும்சம்பன்னித் தோற்கடித்த வரலாறும் போனதா?

ஆகாதசொல்லுண்டா அர்ஜுனாப் போல் வில்லுண்டா?
போகாத ஊருக்குக் காட்டுவழிக் கல்லுண்டா?
நேராத போருண்டா பாராத வெற்றி யுண்டா?
நேருக்கு நேராக போரிட ஆளுண்டா?

ஆகாத வாக்குறுதி அள்ளியள்ளி வீசியே
தேறாத ஆட்சியதை மாறாகப் படுத்தியே.
வேகாத பருப்புக்கு வீணாக நெருப்பிட்டு
தாகமான மக்களுக்குத் தந்தததும் என்னவோ?

பொறுத்தவரைப் பொறுத் திருந்தோம்
வெறுத்தாலும் பார்த் திருந்தோம். விடியலுக்குக்குக் காத்திருந்தோம்
விடியாமல் விழித்திருந்நோம்.
காலங்கடந்தும் கதைமுடிய வில்லை
கோலமே கிடந்தது பொழுதாகவில்லை.
ஓலந்தான் மிஞ்சியது மாற்றமில்லை
மாற்றம்தான் வேணாடும் மாற்றுவோம்.

எடப்பாடியார் ஆட்சிபோல்  ஏதுமில்லை.
கடப்பாடு அவருக்குத்தான் வேறில்லை
மாற்றத்தின் மாற்றம்வேறு மனித ரில்லை.
காலந்தான் அவருக்காகக் காத்திருக்கு..
நாளுந்தான் நாளையெண்ணிப் பார்த்திருக்கு.
வேளைவர விடியலும் விழித்திருக்கு.
காலை மாலைக் கணக்குப் போட்டு
கணித்த மாற்றம் உடனிருக்கு.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.








Thursday, 16 October 2025

கடவுள் போல் காத்தாரு.

கடவுள் போல் காத்தாரு.

கடவுள் போல் காத்தாரு
எடப்பாடி பழனிச்சாமி.
கொரானாவில் பாத்தாரு.
குலதெய்வம் வேறாரு.
எல்லாமே நின்னபோதும் --பசி
இல்லாமச் செஞ்சாரு.

இரத்த நாளங்கள் நின்னு போச்சு
சுத்தமா வருமானம் துடைச்சி ருச்சி
ஆனாலும் மூனுவேள அன்னந்தந்தாரு.
காணவந்த கஷடத்த காணாமச் செஞ்சாரு.
கடவுளான எடப்பாடி களம்வென்று காத்தாரு.

என்னக்கரும நோயினும் எவருக்குமே புரியல.
எமனாக நாடெங்கும் கொரனா வேட்டைப் போருல,
பாடசாலை திறக்கல பணியேதும் நடக்கல.
பேச்சு மூச்சு ஒடுங்கியே நாடடங்கித் தூங்கல.
துச்சமென அதுகடந்து களம்நின்றார் பழனிச்சாமி.

வீடு வீதி எல்லாமே வெறிச்சோடி முடங்கியாச்சு,
காடுபோல நாடாச்சு கடைத் தெருக்கள் மூடிப்போச்சு
ஆம்புலன்ஸ் சங்கொலி அதுமட்டும் அலறிருச்சு.
எமனான கொரனாவை எதிர்த்து த்தான்
நின்னாச்சு
கொள்ளை நோயானாலும் பழனிப் பாடு பட்டாரு.

ஆனாலும் அரிசிப் பருப்பு காய்கனி வீடு தேடி
கதவுகளைத் தட்டியது கஷ்டங்களை விரட்டியது.
பாடசாலை மூடியாச்சு பாடங்களும் ஓஞ்சது
தேர்வுகளை ரத்தாக்கி தேரச்சி யென்று அறிவிச்சாச்சாரு
மாணவர்கள் கல்விகற்க மறுவாழ்வும் தந்தாரு.

வாழ்வோமோ சாவோமோ வழிமூடியக் கொரனாவில்,
மூச்சுவிட முடியாத பேரழிவுக் காலமதில்
நானி ருக்கேன் பயமேனெனப் போர்க் கால அவசரமாய்,
ஆவது செய்து தந்து அரும்பணி சேவை ஆற்றி
மக்களைக் காப்பாற்றிய மாமனிதர் பழனிச்சாமி.

கவிஞர். கொ. பெ. பி. அய்யா.




ஆட்சியில் என்ன குறை!

எடப்பாடி ஆட்சியில் என்ன குறை!

நாலாண்டு இரண்டு மாதம்,
கோலோட்சிய எடப்பாடி யார்,
என்ன குறை வைத்தாரோ!
இன்னை வரை நின்றாரே--தமிழ்
நெஞ்சங்களைக் கொண்டாரே!

கொரனாக் காலத்திலும்,
வருவாய் நின்ற போதிலும்,
அரசாங்கச் செலவினங்கள்,
அணுவளவும் குறையலாச்சா--ஊழியர்
ஊதியங்கள் நிலுவை யாச்சா?

வரியென்ன ஏற்றினார்?
சொத்துவரி மற்றவரி,
எந்தவரி ஏற்றினார்?
வந்தவரிப் போதாதென--திட்ட
வருடநிதி குறைத்தாரா?

நிலமதிப்பைக் குறைத்தாலும்
பதிவுக் கட்டணம் ஏற்றலாச்சா?
பேரூந்துக் கட்டணங்கள்
ஏறியேதும் பாரமாச்சா--எங்கும்
வேலை நிறுத்தப் போர்களாச்சா?

விலையேதும் ஏறலாச்சா?
மின்சாரம் தடை யாச்சா?
மின்கட்டணம் உயர்வாச்சா?
பால்விலைக் கூடலாச்சா?--என்றும்
பால்வரத்தும் குறையலாசாசா?

போதுத்துறைப் பணிகளேதும் நிதிகெட்டு ஓயலாச்சா?
கூலித்தொல்லை எத்துறையும்
நாளிலேதும் கூச்சலாச்சா--எடப்பாடி
ஆட்சி முறை ஏதாச்சும் பிசகலாச்சா?

கவிஞர். கொ.பெ.பி அய்யா.



யதார்த்தமான பேச்சு.

யதார்த்தமான எழுச்ச.

யதார்த்தமான பேச்சு.
யதார்த்தமான எழுச்சி.
யதார்த்தமான மனிதம்.
யதார்த்தமான ஆளுமை.

எழுதிப் படிக்கும் பேச்சும் அல்ல.
தொழுது நடிக்கும் அரசியலும் அல்ல.
யதார்த்த மான மனிதர் யாரு 
ஊரவர் பேரு யாரெனக் கூறு.

அடுக்கு மொழி அலங்காரப் பேச்சும்
மிடுக்கு நடையில் மேடைப் பேச்சும்
மேடைப் பேச்சை ஆடைபோல் வீசார்
மானங் காக்கும் உடைபோல் காப்பார்.

விவசாயச் சகமனிதப் பழக்கம் ஐயா.
அவசியம் அன்றாட வழக்கம் மெய்யா.
கிராமிய வாழ்வியல் எளிமை ஐயா.
கிளைச் செயலாளர் வழமை மெய்யா.

புதுமை அரசியல் முழக்கம் செய்வார்.
பதுமை ஆட்சி விளக்கம்  மொழிவார்.
எதிரிக் கட்சிகள் கலக்கம் கொள்வார்.
சிதறிப் பட்சிகள் விலக்கம் வெல்வார்.

கட்சிப் பாரபட்சம் கூடாது என்பார்.
கட்சியில் தானதைக் கடைப் பிடிப்பார்.
இரக்கம் காட்டியும் கிருபையும் செய்வார்
உருக்கம் ஆகியும் உதவியும் செய்வார்.

கருணை அருளத்தான் பதவி என்பார்.
பொறுமை ஆளவேத் தலைமை என்பார்
உணரவும் உதவவும் கட்சி ஏன்பார்.
உண்மை மொழிவார் நன்மை வழியார்.

புரிந்ததா யாரவர் அறிந்ததே பேரவர்.
விரிந்த மனத்தார் தெளிந்த நீரவர்.
தெரிந்தவர் தானவர் எடப்பாடி ஊரவர்.
நிறைந்த பழனிச்சாமி செழுமை ஆட்சியாளர்

கவிஞர். கொ. பெ. பிச்சையா.






நீண்ட நீளப் பாலம்.

நீண்ட நீள மேம்பாலம்.

அவினாசி கோவைப் பாலம்.--புரட்சி
அம்மா ஆட்சி அடையாளம்.
ஜீட்டி நாய்டு பேராள வாழும்
நீட்டி நீண்ட மேம்பாலம் காலம்.

ஆறும் நாலும் பத்து வழிகள்--எடப்பாடி
பேரும் வாழும் கெத்து மொழிகள்.
பதினெட்டு நூறு கோடியாக்கம்
நிதியிட்டத் திட்டப் பாலமாக்கம்.

அம்மா ஆட்சிப் பிள்ளையாம்--ஆமாம்
அதுபோலச் சொல்ல எதுவாம்?
சும்மாப் பத்துக்கிலோ மீட்டராம்
பாரெங்கும் வியப்பிடும் பாலம்.

இனியும் போக்கும் வரத்தும்--கால்
மணிநேரம் தூரம்.பொருத்தும்.
அவசரப் பயணம் ஏகுங்காலம்
அவசியம் இதுவாகும் மேலும்.

காலம் அவசிய அவசரம்--இன்று
ஞாலம் அவசர அவசியம்.
தூரநேரம் நெருங்கி சுருங்கி
காலமாளும்  வேகம் உலகம்.

விஞ்ஞான அறிவு மெஞ்ஞானம்--காலச்
செய்ஞானப் புரிதல் எடப்பாடியார்,
கோவை நகரின் தேவையை
மேவிய பெருமைக் காலம்வாழி!

கவிஞர். கொ. பெ. பிச்சையா.



தொண்டனை நம்பும் அதிமுக.

தொண்டனை நம்பும் அதிமுக.

தொண்டனை நம்பும் அதிமுக சொல்லு.
கூட்டணி நம்பும் ச.வா க*அல்ல
தொண்டர் நாங்கள் அதிமுக--எமக்குள்
அந்நிய மில்லை அன்பில் நாங்கள்.

கேட்டது கிடைக்கும் கூட்டணியோ! கொடுப்பது கொடுக்கும் கூட்டணியோ!
காசுக்கு வாங்கும் கூட்டணியே--அடிமை
வாசிகள் கூடியக் கூட்டணியோ!

இரத்தத்தின் இரத்தம் பிறவிகள்,
இணனைந்த சோதர உறவுகள்,
என்றும் எமஜிஆர் வழிவழிகள்--தமிழ்
இதயம் பதித்த இனவழியில்.

ஊழல் ஒழிக்க உருவானது.
ஒன்றே குலமென நிறமானது.
இறைவன் இயற்கை பொதுவானது.
இனத்தில் அனைவரும் சமமானது.

குலமும் மதமும் ஒரு சமூகம்.
நலமும் வளமும் சமத் துவம்.
பணமென அலையும் கூட்டமல்ல-தமிழ்
இனமென விளைந்த மாற்றமிது.

அண்ணல் எம்ஜிஆர் ஆக்கமிது.
எண்ணம் அவர் போல் இயக்கமிது. 
ஏழைகள் வாழத் தோன்றியது-இயக்கம்
வாழை அடியாய்  தொடருமிது.

பழித்து  இழிப்பது மார்க்கமல்ல.
அழித்து ஒழிப்பது இயக்கமல்ல.
ஆயுதம் செய்வது தொழிலுக்கு--நேர்
அன்பின் வழியது ஆட்சிக்கு.

ஆயிரம் ஆண்டுகள்  தொடரும்
அகிலம் ஆண்டும் படரும்.
வீட்டுக்கான கட்சிகள் வீழும்--தமிழ்
நாட்டுக்கான  இயக்கமே வாழும்.

கவிஞர்.கொ.பெ. பிச்சையா.

குறிப்பு:-*
(சு வா க=சண்டாளர் வாழ்வுக் கட்சி)










( ச

விவசாயி முதல்வர்.

விவசாயி முதல்வர் 

வாராரய்யா நம்மாளு,
ஊராண்ட வேளாளு,
பாராள வந்தாளு,
பழனிச்சாமி நல்லாளு.

கருப்பண்ணர் தவசியம்மாள்,
திருமகனார் உழைப்பாளி,
பொறுப்பான விவாசயி,
பொதுவாழ்வு எட்பாடியார்.

சிலுவாபுரிச் சின்னவரு
சீராளர் பாட்டாளி.
அம்மாவோட நம்பிக்கை
ஆயுள் கால வெற்றியாளர்.

சின்னச் சின்னப் பொறுப்பு,
சிரமமின்றிச் சுமப்பு,
கண்ணாகச் செயலாற்றி,
முன்னேறினார் படிப்படி.

குடும்பத்தை நுழைக்கா,மல்,
தடுமாறித் தவறாமல்,
பொதுவாழ்வுப் பொதுப்பணி,
யதார்த்த அரசியலார்.

கிராமத்தார் பேச்சு உடை
தரம் பாராத் தமிழர் நடை
நாள் முழுக்க நம்முடமை
தோள் தழுவும் தோழமை.

எதிரியென எவருமில்லை
உதிரியென ஒதுக்க வில்லை.
சமமாகப் பழகுவார்
அமைதி வழி ஆட்சி யாளர்.

சிரிப்புக்கு உரியவர்
சிந்தனைத் தெளிவவர்.
உரியதை உரிய நேரம்
சரியாளும் பொறுமையாளர்.

பொதுவான செயலரவர்.
அதிமுக ஆளுநரவர்.
புரட்சியார் தொண்டரவர்,
நிரந்தரப் பொதுச்செயலர்.

விசாயப் பூமியிதில்
விவசாயி முதல்வரவர்
அவசியம் தானாகி
ஆண்டவனின் தேர்வவர்.

கவிஞர். கொ. பெ. பி. அய்யா.

Saturday, 4 October 2025

நாடாளப் பிறந்தவர்.

நாடாளப் பிறந்தவர்.

விவசாயக் குடும்பத்தில்,
வேளாளர் வம்சத்தில்,
நாடாளப் பிறந்தவர்,
பாட்டாளி எடப்பாடியார்.

தவசியம்மாள் கருப்பக்கவுண்டர்,
தவப்பிள்ளை பழனிச்சாமி, 
ஐம்பத்து நான்கில் பிறந்தவர்
எழுபத்து நான்கில் இயக்கம் வந்தார்.

அம்மாவின் ஆட்சியில்,
அமைச்சரவைப் பொறுப்புகளில்,
சிம்மாசனம் அலங்கரித்து,
சீராக ஆட்சி செய்தார்.
குடும்பத்தை நுழைக்காமல்,
கொள்கையின் உழைப்பில்,
தடம்பிறழா நம்பிக்கையில்,--ஆண்டார்
தனிச்சிறப்பு அரசாட்சி.

அம்மாவின் அன்புக்கு 
அடிபணிந்த எழுச்சியார்
வெற்றியே தொடர்ந்தவர்,
வென்றவர் தமிழ் நெஞ்சர்.
அம்மாவின் அருளாசி
அவர்பின்னே முதல்வராகி
பொதுச் செயலர் பொருப்பாகி--இயக்கம்
செதுக்கினார் சிறப்பாக்கி.

கழனியைப் பண்படுத்தும்
களையெடுக்கும் அவசியம்,
உழவர் மகன் பழனிசாசாமி
கழகம் உழுதார் சீர்செய்தார்.
அண்ணலவர் எம்ஜியார்
அம்மா புரட்சித் தலைவியார்,
ஆக்கிநடத்திய இயக்கத்தின்,
ஆலமரக் காவல் ஆனார்.

எழுச்சிப் பயணம் மேற்கொண்டார்.
எழச்செய்து சீர் வென்றார்.
அலைகடல் ஆர்ப்பரிக்கும்
கழகத்தொண்டர் களம் கண்டார்.
தமிழகம் தலை நமிர
தமிழாள  அரசமர
அமிழ்தமெனப் பரப்புரைகள்
அவரூட்டி வலம் வந்தார்.

நாளையது நமதென்போம்.
வேளையிது உழைப் பென்போம்.
ஏழைபாழை இயக்கமிது.
எம்ஜிஆர் ஆக்கி யது.
ஊளையிடும் நரிக்கூட்டம்
ஊழல்செய் பேயாட்டம்
ஒழிப்பதே நமதாட்டம்
ஓயாது நம்சீற்றம்.

வெற்றிவழி வீரர் நாம்.
வீறுகொண்ட சூரர் நாம்.
ஆற்றுப்படைத் தலைமைகள்,
ஆற்றித் தடை வென்றவர்கள்,
ஏற்று வழி ஏகுவோம்
மாற்றம் அதை ஆக்குவோம்.
நேற்று இன்று நாளையவர்
ஏற்ற முதல்வர் எடப்பாடியார்.
ஏற்றுவோம் சிம்மாசனம்.
போற்றுவோம் அம்மா தினம்.

கவிஞர். கொ. பெ. பி அய்யா.






Monday, 29 September 2025

வாழும் புரட்சியார்

வாழும் புரட்சியார்.

வாழும் தமிழ் புரட்சியார் --நாளை
ஆளும் தமிழ் எழுச்சியார்.
அதிரும் தமிழ் அதிர்ச்சியார்--எதிரி
பதறும் வலிமை முதிர்ச்சியார்.
சிதறும் புன்னகை மலர்ச்சியார்

ஓடும் நதிபோல ஓடும்--தமிழ்
நாடும் நலம்பெற யாவும்
கூடும் வளமுறத் தேடும்--கழக
நீடுயர் மலைபோல் மேவும்
எடப்பாடி பழனிசாமி யாகும்.

அம்மா வளர்த்த பிள்ளை --அவர்
அன்பில் நிறைந்த வெள்ளை.
இன்றும் அவர்தான் முதல்வர்.--கொங்கு
எடப்பாடி தந்த புதல்வர்.
எளிய விவசாயத் தொழிலர்.

கொங்கு மண்டலச் சிங்கம் --ஓளிர்
திங்கள் முகத்துத் தங்கம்.
எம்ஜிஆர் வழியில் செல்லும்- பொன்மன
அம்சத் தலைமை வெல்லும் 
அண்ணா திமுக சொல்லும்.

தமிழகம் ஆளும் கழகம்--அது
அண்ணா தி மு க கழகம்.
உண்மை அதுதான் நன்மை--உலகம்
ஓத்துக் கொள்ளும் திண்மை.
உத்தமம் அதுவே நன்மை

கவிஞர. கொ. பெ. பி. அய்ய்யா

கழகமுனா கழகந்தான்.

கழகமுன்னா கழகந்தான்.

கழகமுன்னா கழகந்தான்.
அண்ணா தி. மு கழகந்தான்.
அண்ணலவர் எம்ஜியார் 
அம்மா புரட்சித் தலைவியார்.
அவர்வழி புரட்சித் தமிழர்
அய்யன் எடப்பாடியார்.
தலைமைவழிப் பண்புகள்
தடம்தொடர்ந்து தொடர்கிறார்.

மாற்றுக் கட்சியானாலும்
மாற்றமிலாப் பண்புடன்
நேற்றின்று எண்ணாமல்
நெற்றிக்கண் திறக்கிறார்.
உற்றநன் குணமாளர்
பற்றிநெறி தொடர்கிறார்.
வற்றாத மரபினார்.
முற்றிலும் சத்தியனார்.

அரசியல் லாபம் பார்த்து 
விரசமான வாதம் கோர்த்து
உண்மைக்கு மாறாக
தன்மையை தானொளித்து
மாற்றிப் பேசத் தெரியாதார்.
ஆற்றுவழி மரபினார்.
அண்ணாதிமு கழகத்தார்
எந்நாளும் வழிதொடர்வார்.

கரூர் சம்பவத்தை
பொருள் மாறா நம்பகத்தை
தருமத்தின் நிலை நின்று
நிருபித்தார் சொல் இன்று.
அரசதன் பொறுப்பதனை
புருஷ இலட்சனம் கொண்டவர்
சரியாக உறுதி ஒன்றார்
தெரிவித்தார் நெறி கண்டார்.

வாரிசு வழி வந்தபாவியர்
வழிவிட மறுக்கிறார்.
நேர்வழி தெளியாமல்
ஊராள நினைக்கிறார்.
அதற்கான கோரமுகம்
அவர்கொண்டு அலைகிறார்.
வரலாறு நம்பாமல்
குறுக்கு வழி முயல்கிறார்.
அய்யோவென ஒருநாள்
மெய்யாவே போயொழிவார்.

கவிஞர். கொ. பெ. பி அய்யா.


Tuesday, 23 September 2025

கடல் போல் கூட்டங்கள்.

கடல் போல் கூட்டங்கள்.

கடல் போல் கூட்டங்கள் காணும் இடமெலாம்.
எடப்பாடி பயணங்கள் எதிரிகள் பயமெலாம்.
அவர் நாளை முதல்வ ரென்ற
அச்சாரம் காட்சி சொலும்.

வரலாறு மாறாது மறுமுறை தேறாது
திருப்பங்கள் மறுபக்கம் விருப்பங்கள்
நீராது.
விபத்தாக நேர்ந்ததை அபத்தமான ஆட்சியிதை,
சபதமிட்டு ஓட்டவே சாட்சி இந்தக் கூட்டமே.

அம்மாவின் பிள்ளைகள் சும்மாயில்லை காட்சிகள்.
நம்மாளு பழனிச்சாமி நம்பிவந்த தம்பி கள்.
தமிழகத்தின் விடிவெள்ளி தன்னுயிர் சொந்தங்கள்
தமிழரான விவசாயி தானாள வேண்டியவர்.

அரசாளத் தகுதியும் அரியணை அம்சமும்,
பொருந்திய ஒருவராம் வரம்பெற்ற முதல்வராம்,
அம்மாவின் ஆசிபெற்ற சிம்மாசனம் அமர்வராம்,
செம்மாந்த தமிழாட்சி சீர்மையச் செய்வராம்.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.




Monday, 8 September 2025

புரட்சித் தமிழன் எழுச்சிப் பயணம்.

புரட்சித் தமிழன் எழுச்சிப் பயணம்.

புரட்சித் தமிழன் எழுச்சிப் பயணம்.
மருட்சி அரரசியல் விழிக்குந் தருணம்.
திரளும் மக்கள் அலைகடல் கூட்டம்.
மிரளும் எதிரிகள் நிலைகுலை ஓட்டம்.

பொய்யும் புரட்டும் பொய்த்தது காட்டும்.
பொய்மை அரசியல் ஓழித்தது சாற்றும்.
ஏய்த்த கூட்டம் எதிர்கொள்ளப்பதறும்.
சீறும் சீற்றத்தின் எழுச்சி முன் சிதறும்.

கூட்டமாய் கூடிக் காட்டும் உன்வீரம்.
வாட்டமாய் வாடி ஆகும்பின் சோரம்.
நேருக்கு நேர்நிற்க அச்சமேன் உமக்கு?
போருக்கு நேர்நிற்கும் படைஉண்டு எமக்கு.

வாயாலே வடை சுடும் மாயாஜால வேடம்.
பாயாது பலிக்காது கற்றோமடா பாடம்.
பேயாளும் காடாச்சோ ஓயாத கேடாச்சோ!
வாயாலே சொல்லியழ வார்த்தயினித் தேடலாச்சோ!

கவிஞர். கொ. பெ. பி. அய்யா.





Saturday, 23 August 2025

நெஞ்சுக்குள்ள பூராம் அம்மா எம்ஜிஆரு

அம்மா எம்ஜிஆர்

நெஞ்சுக்குள்ள பூராம் அம்மா எம்ஜிஆரு
நிறைஞ்ச இடம் யாரு எடப்பாடி ஆரு.
வெற்று இடம் நிறைக்க வந்த தாரு
கெத்து எங்கள் எடப்பாடியாரு.

எனம்ஜியாரு அம்மா இல்லையினு யாரு 
இன்னும் சொல்லுவாங்க இருப்பாங்களா பாரு
புரட்சி வழி தாஙக இருக்குறாரு யாரு.
புரட்சித் தமிழர் தாங்க பழனிச்சாமி கூறு.

அன்று கண்ட கூட்டம் இன்றும் அந்த மாயம்
என்றும் உண்டு நாட்டம் இருவர் கண் நோட்டம்.
அம்மா எம்ஜி ஆரே அவர் நிழல் ஆக
நம்மாளே எடப்பாடி பழனிச் சாமி வாழ்க.

காத்து மழை வெயி லென்றும்
காத்துப் பகல் இரவு என்றும் 
பாத்துப் பாதை காத்திருந்தும்
மாத்து வழி வேண்டி நிற்பார்.

இருள் முடிக்கும் சந்திர னாம்
வருங்கால ஓளி விளக்காம்
புரட்சி வழி அம்மா எம்ஜி ஆர் 
புரட்சித் தமிழன் பழனிச்சாமியாம்.

கொ. பெ. பி அய்யா.

Thursday, 7 August 2025

வெற்றியின் தருணம்.

வெற்றியின் தருணம்


இலைகள் வெல்லும் தருணம்-இரட்டை 
இலைகள் வெல்லும் தருணம்-மக்கள்
அலைகள் துள்ளும் எழுச்சி-வென்ற
நிலைகள் சொல்லும் அதிர்ச்சி-கூடும்
தலைகள் வாக்கு வளர்ச்சி.

அம்மாவின் ஆட்சி அந்தக் காட்சி 
பழனிச்சாமி பயணம் சொல்லும் சாட்சி.
உழவர் ஊக்கம் கொள்ளும் மாட்சி
களம் ஆடும் தாக்கம் அள்ளும் தேர்ச்சி.

எதிரிகளின் கூட்டம் கதறுதே.
உதிரும் அணி ஓட்டம் பதறுதே.
பழம் நழுவிப் பாலில் வீழுதே.
களம் ஆடும் ஆட்டம் மாறுதே.

வள்ளல் அவர் எம்ஜியாராம்
வல்லார் அவர் அம்மாவாம்
பொல்லாரைப் புறந் தள்ளவே
நல்லதோர் இயக்கம் கண்டார்.

பூமியிது உள்ளவரை சாமியுண்டு.
சாமியது உள்ளவரை இயக்கம் உண்டு.
அழிவில்லா அண்ணாவின் திமுகதான்.
முடிவில்லை சொன்னவர் அம்மாதான்.

கொ. பெ. பி. அய்யா.

Wednesday, 6 August 2025

புரட்சித் தமிழர்





தென்னாடு தமிழ்நாடு 
திசை செல்லும் பூங்காற்றே-வாழும் 
செந்தமிழிரிடம் போய் சொல்லு
செந்தமிழிரிடம் போய் சொல்லு
நலம் சொல்லு
நலம் சொல்லு

அம்மாதான் கண்ட முத்து
அவர் தந்த நம் சொத்து 
பேர் சொல்லும் அம்மா கெத்து
புரட்சிக்குப் பொருளாகி
பொன்மனம் வரவாகி
பிறந்த மண்ணுப் பெருமையாம்
பழனிசாமி-அவர்
ஆட்சியதே மலருதே மீளுதே.

பிறவித் தமிழ் வரமவர்.
உறவுத் தமிழ் சொந்தமவர்.
எம்ஜியாரம்மா வாரிசவர்- நிசமாக
விவசாயி மகனவராம்
அவசியம் அவசரமாம்
தவமெனத் தமிழ் பெற்ற 
தலைவனே ஆள உற்ற தருணம் இதாம்-வாசமலர்
தூவுவோம் வரவேற்போம் முதல்வராம்.

கொ. பெ. பி. அய்யா.

Tuesday, 17 June 2025

வாலிபம் வயதில்லை



















அறிவுக்கு மஞ்சமில்லை!


வாலிபம் தொலையவில்லை
வாழ்ந்தும் அலுக்கவில்லை.
வயதை மதிக்கவில்லை--காதல்
வறுமை எனக்கில்லை.

ஏதும் சேர்க்கவில்லை
எதையும் இழக்கவில்லை
எழுத்தன்றி வேறில்லை--இதுவும்
எனக்கென்று மறைவில்லை.

பொருளுக்கும் ஆசையில்லை
பொய்க்கவும் தேவையில்லை.
அருளுக்குக் குறைவில்லை--எழுதும்
திருவுக்கும் வரைவில்லை.

காவலும் எனக்கில்லை
காத்திடக் கனமில்லை.
ஏவலும் எவரில்லை--வீணே
எதிர்ப்பார் யாருமில்லை.

மனத்திற் கவலையில்லை
இனத்திற் பகையில்லை.
கணமும் நாடவில்லை--யாருங்
காணவும் தேடவில்லை.

கற்றதும் ஒளிவில்லை
கருத்தினில் பழியில்லை.
படைப்புக்கு அழிவில்லை--நூல்
பதிப்பிக்க வழியில்லை.

உறவுக்குப் பஞ்சமில்லை
உதவிக்குத் தஞ்சமில்லை.
அறிவுக்கு மஞ்சமில்லை--அது
ஆக்கத்தில் துஞ்சவில்லை.

விதியையும் நம்பவில்லை
நிதியையும் எம்பவில்லை
மதியன்றி வேறில்லை-நற்
கதியுண்டும் ஐயமில்லை.

எண்ணம் வேறில்லை 
வண்ணம் மாறவில்லை.
திண்ணம் துறக்கவில்லை--எம்ஜியார் 
இன்னும் இறக்கவில்லை.


கொ.பெ.பி.அய்யா.

Tuesday, 8 April 2025

இளைய புரட்சித்தலைவர்

இளைய புரட்சித்தலைவர்.

இளைய புரட்சித் தலைவராமவர்.
எடப்பாடி தந்த எழுச்சியாராமவர்.
புதிய புரட்சிப் புயலாமவர்-தமிழக
விதியைப் புரட்டும் எடப்பாடி யார்.

பழத்தின் புரட்சி பழனிச்சாமி,
களத்தின் எழுச்சி நாயக சாமி ,
புண்முறுவல் பூக்கும்  புரட்சித் தலைவன்-புதுமைக்
கண்முன் காட்சி எடப்பாடியார்.

அம்மா கண்ட உதய மணியாம்
நம்மக் கழகம் இதயக் கனியாம்.
சும்மா இல்லை மனிதர் அவர்-எதிரி
சுளுக்கை எடுக்கும் எடப்
பாடி யார்.

சிரிப்பே அவர் மெய் போராயுதம்,
குறிப்பில் எதிர்விடும் சூலாயுதம்,
எதிர் வினையாளன் தானே பணிவான்-பலம்
பாதியைப் பறிப்பார் எடப்பாடியார்.

விவசாயி சேனை தானைத் தலைவன்.
அவசியம் எதுவென அறிந்த உழவன்.
அவதார புருசன் தமிழ் மண் புதல்வன்-நிரந்தரம்
அவரே முதல்வன் எடப்
பாடியார்.

கொ.பெ.பிச்சையா.

ஸ்ரீரங்கத்தாயே.

ஸ்ரீரங்கத் தாயே!

கோமள வள்ளி குழந்தைகள் செல்வி.
பாமரர் வாழ்வில் பழகிடும் கல்வி.
சேமத்தின் பொருளே ஸ்ரீரங்கத் தாயே!
கோபுரப் புகழே கொடைவள்ளல் வாழ்க!

அன்னை தெரேசா அவள் திருவடிவம்
அம்மா மனசே அவளருள் படிவம்.
அனாதை என்றே எவரிங்கு இருப்பார்
அரசின் தொட்டில் உறவங்கு சிறப்பார்.
அன்னை தெரேசா அவள் திருவடிவம்
அம்மா மனசே அவளருள் படிவம்.

பசியென்ற சொல்லே பழக்கத்தில் இல்லை.
விதியென்ற தொல்லை வறுமையும் இல்லை.
தொடர்ந்தும் அம்மா ஆட்சியும் தொடர்ந்தால்
படர்ந்தும் திட்டம் போட்டதும் நிறைந்தால்
பசியென்ற சொல்லே பழக்கத்தில் இல்லை.
விதியென்ற தொல்லை வறுமையும் இல்லை.

மாறி மாறி ஆண்டு மாறியாய்.
ஆட்சி மாற்றம் ஆட்டம் முடிந்தது.
தேறும் தூரம் தூர்ந்தும் தீர்ந்தும்
வீழ்ச்சி நேரவும் வீழ்ந்தும் தேர்ந்தது.!
மாறி மாறி ஆண்டு மாறியாய்.
ஆட்சி மாற்றம் ஆட்டம் முடிந்தது.

கட்டும் தமிழகம் கட்டி நிறையுங்கள்`
முட்டும் முரண்களை கொட்டி விரட்டுங்கள்.
அம்மா கரங்களில் நம்பிக் கொடுங்கள்.
நம்மா நிலம்பார் செம்மா நிலாமாம்    
கட்டும் தமிழகம் கட்டி நிறையுங்கள்`
முட்டும் முரண்களை கொட்டி விரட்டுங்கள்

கொ.பி.அய்யா.


பிழைப்புக்காக அல்ல.

பிழைப்புக்காக அல்ல!

பிழைப்பதற் கல்லடாஅதிமுக,

பிறப்பி லிருந்து நான் அதிமுக;

புரட்சித் தலைவர் புரட்சித் தலைவியர்,

திருவென அதிமுக என் உயிரடா!

வாழும் பூமி எனக்கிதுதான்.
அலையும் தேவை எதற்கடா?
பழகிய சொந்தம் துறப்பாரோ!
விலகியும் நெஞ்சம் பறப்பாரோ!

உண்ட வீட்டிற்கு இரண்டகமா!
கண்ட வாழ்விற்கு வஞ்சகமா!
நன்றி மறந்தார் நஞ்சகமா!
கொண்டு அலைவார் பாவமடா!

குறைந்தாலும் நிறைந்தாலும்
நிறைந்த குளமென் மனமடா!
பிறப்பு என்பது ஒருமுறைதான்:
சிறப்பு எனக்கது அதிமுகதான்.

கடைநிலைத் தொண்டு ஊழியனும்,
முதல்வர் ஆகும் சனநாயகம்.
அலையும் எண்ணம் விலைபோகும்:
நிலையெங்கு செல்லும் அய்யோடா!

வாழும் வரையும் தொண்டன்டா!
சாகும் நிறைவும் நிற்பேன்டா!
ஆளும் அதிமுக ஆட்சிதான்:
காலம் வெல்லும் நீட்சி தான்.

கொ.பெ.பி.அய்யா.

Tuesday, 4 March 2025

கமழுந்தமிழே

கமழுந்தமிழ் சுதந்திரமே வா!வா!

தமிழ்மகளேதமிழ்மகளேவா!வா!
கமழுந்தமிழ் சுதந்திரமே வா!வா!
தமிழீழம் மலர்ந்ததென்றே வா!வா!
தமிழரிங்கு தலை நிமிர்ந்தோம் வா!வா!

தமிழாளுந் தனியரசி வா!வா!
தரணிக்கு வல்லரசி வா!வா!..
அமிழ்தமே இலக்கியமே வா!வா!
அம்மா புரட்சித் தலைவியே வா!வா!

பெண்ணினப் பெருமையே வா வா!
பெண்ணிலை உரிமையே வா வா!
சுய உதவிப் பொருளே நீ வா வா!
தயவொளி அருளே நீ வா வா!

பட்டினியை ஒழித்தவளே வா வா!
பிச்சையவலம் முடித்தவளே வா வா!
தொட்டில்த்திட்டம் கண்டவளே வா வா!
தாய்க்குலத்தைக் காத்தவளே வா வா!

அனாதை சொல்லழித்தாய் வா வா!
அவலையற்கு வாழ்வளித்தாய் வா வா!
மழலையன்பில் மகிழ்பவளே வா வா!
தலைவராட்சி தொடர்பவளே வா வா!


புரட்சியாரின் வாரிசே  வா!வா!
வறுமையிருள் விடியலே  வா!வா!
குலமுயர்த்துங் கலைமகளே வா!வா!
நலமருளும் காவேரியே வா!வா!

ஒற்றுமையின் உணர்வே நீ வாவா!
பற்றுணர்த்துந் தாயே நீ வா!வா!
மாற்றாருந் தொழுவோளே வா!வா!
வேற்றுமை யொளித்தோளே வா!வா!

காற்றான கருணையே நீ வா!வா!
ஊற்றான உரிமையே நீ வா!வா!
ஆற்றான அம்மா நீ வா!வா!
ஊற்றினோம்  பூமழை நீ  வா!வா!

.கொ.பெ.பி.அய்யா.








நல்லவேளை.

நல்ல வேளை.

நல்ல வேளை நாம் கண்டு கொண்டோம்  
நல்லவர் எம்ஜியாரைக்
கொண்டு விட்டோம்
அவரில்லை யென்றால் நாடென்ன கதியோ
நெஞ்சம் அஞ்சுதே ஐயகோ!ஐயகோ!

விவசாய பூமி வில்லாக்கள் ஆச்சு.
பசுமைகள் மறைஞ்சி பாடழிஞ்சி போச்சு.
விடியாத இருளில் விளங்காத தூரம்,
அடையாத ஊருக்கு முடியாத பயணம்.

சரியான நேரம் சரியாக வந்தார்.
இருளை விரட்டி விடியலைத் தந்தார்.
வரைபடம் எழுதித் தமிழகம் கண்டார்.
வறுமை ஒழித்து வளநாடு வென்றார்.

விடிஞ்சதும் அடைஞ்சதும் விதியோ சதியோ!
ஒளிவிளக்கு அணைஞ்சதும் வழிமுடிஞ்சக் கதையோ!
கலங்கிய பொழுதில் கலங்கரை விளக்கம்,
நிலவின் ஒளிமுகம் அம்மாவின் உதயம்.

அம்மாவின் ஆட்சி அன்பின் சாட்சி.
பசிப்பிணி நீங்கிய பாமரன் மீட்சி.
அம்மா எம்ஜியார் அமரர்கள்,
அவர் வாழுந் தெய்வங்கள்.
சுபராசி எடப்பாடித் தவவாசியார்
அவர்வழித் தமிழாட்சி சமர்ப்பணம்.

கொ.பெ.பி.அய்யா.







Sunday, 2 March 2025

எம்ஜியார் அம்மா

ஏது வெற்றிடம்!

எம்ஜியார் அம்மா மொத்த வடிவம்,
அம்சமே அவராக நிறம்பிய முழுஇடம்.
இருவர் இடமும் நிறைவிடம் பழனிச்சாமியிடம்.
இடமொன்றிய ஒருமுகம் திருமுகம் எம்ஜியாரம்மா.

கற்றும் பெற்றும் முற்றிய
அனுபவம்,
பெற்றிட்ட எடப்பாடியார் பொதுச்செயலர்.
கொற்றிடம் இங்கே ஒன்றதுவே அதிமுக,
கொற்றவர் எடப்பாடியார் வெற்றியார் வாழ்கவே!

தேனியில் கண்டது திரண்டது தமிழகம்.
கணக்கியல் சொன்னதுக் காட்சி நிறைவிடம்.
அம்மாவின் கனவு ஆயிரம் ஆண்டுகள்,
சும்மானாச் சொல்லல்ல சூழுரைச் சான்றுகள்.

ஏது வெற்றிடம் இன்னுமாத் தமிழிடம்!
சூதது செய்வாரின் சூதகச் சொல்விடம்.
சூதுவாதில்லா அதிமுக தொண்டர் களம்,
தோதாகத் தானாகத் தன்தலைமைத் தான்தேரும்.

தனைஇயக்குந் தன்னியக்கம்
தனிவழித் தான் இயங்கும்.
வினையாற்றி முனைவோரை 
தனையாற்ற முன்னிறுத்தும்
இணைவோரைத் தன்னிறுத்தும்.
அணைவோரையும் தான்பொருத்தும்.
முடிவில்லா இயக்கமிது
தொடருங்கோடிக் காலமிது.
விடியலாய் விடியுந் தொடர்
கடைவில்லா இயக்கமிது.

கொ.பெ. பி. அய்யா.

Monday, 24 February 2025

மங்கையர் மகிமை.

மங்கையர் மகிமை.

மங்கையராய் பிறந்தவர் மாதவம் செய்தவர்.
கங்கை போலவர் களங்கம் அல்லாதவர்.
மூன்றாம் பருவம் ஈன்றார் கருவம்.
பூவின் வாசம் பூத்தே வீசும்.
காதல் மலரும் கட்டும் அலரும்
காவல் தாண்டவும் ஆவல் தூண்டும்.

கொ. பெ. பிச்சையா.

சேலை கட்டிய எம. ஜி. யார்.

சபதம் ஏற்போம்.

சேலை கட்டிய எம். ஜி. யா. ர்
மாலை அம்மாள் பிறந்த
நாளை இன்று கொண்டாடும்
தமிழ் நாடே நீடு வாழ்க நீ!

தமிழ் நாடு சட்ட மன்றம்---சஅந்தத்
தருணம் இன்றும் அதிர்வுறும்.
பெண்ணென்றும் பாராமல்
பிசாசுகள் திரியோதனர்கள்
கேவல அவலம் செய்தக் கரியநாள் சபதநாள் நினைக!

ஒற்றைப் பெண்ணாகக் 
கர்ஜித்தக் கண்ணகியாகிக்
குற்றமென்ன செய்தேனென
பற்றிய கொள்கைப் போற்றி
முதல்வராய் அல்லாமல்
முயலேன் சபை மீண்டும்.
என்றும் முடித்துச் சபைச்
சபதம் ஏற்றி வெளியேறினார்.

அந்த வீரித் தமிழச்சி
அம்மாவின் பிறந்த நாளில்
இந்த நாள் சபதம் வாழ்வில்
அந்த நாள் நினைவில் ஏற்றி
முதல்வராகி மீண்டும் அரியணை பற்றுவார்.
அம்மா வழி பழச்சாமி.
சபதம் நாளிதில் சபதம் ஏற்போம்.
சபை மீண்டும் ஆளுவோம்.

கொ. பெ. பி. அய்யா.

Thursday, 20 February 2025

அம்மாவுக்குப் பிறந்தநாள்.


அம்மாவுக்குப் பிறந்த நாள்--எங்கள் 
ஆன்மாவுக்கு விடிந்த நாள்.
தமிழத்தாய் அடையாளம் 
தமிழகத்தின் விடிகாலம்.
எழுபத்து ஏழாவதாய்--மானுடம் 
விழுமியத்தின் விளக்க நாள்.

புரட்சியின் திருக்காட்சி 
பூமியில் தோன்றலாட்சி.
ஆயிரத்துத் தொள்ளாயிரம் 
ஆண்டது நாற்பத் தெட்டில் 
பெப்ரவரி இருபத்து நான்கில் 
பெண்ணுரிமை உதயமாட்சி.
வீரமங்கை வீரனாச்சியாள் 
மாறி மண்ணில் அவதரித்தாள். 

ஸ்ரீ ரங்க நாயகியாம் தமிழரின் தேவகியாம் ,
எம்ஜிஆர் கண்டறிந்த எங்கள் குலத் தேவியாம்.
ஏழைகளின் விடிவெள்ளி எதிரிகளின் காளியாம்.
எதிர்காலம் எங்களின் வெளிச்சமே அம்மாவாம்.

இதுதான் அம்மா அவதாரப் பொன்னாள்.
இதுதான் அன்னாள் எழுச்சியின் நந்நாள்.
எதிரிகள் எதுவரையும் 
எமக்கிங்கு தோன்றவில்லை.
புதிதாகித் தோன்றினோம் 
புத்தாட்சி ஊன்றினோம் 

அம்மா தோன்றியத் திருநாள் 
அறம் ஊன்றியச் சுபநாள்.
சும்மா இல்லைப் பிறந்தநாள் 
சோதனைகள் மறந்த நாள்.
அம்மா நமக்குள் வாழ்கிறார்.
அவராம் பழனிச்சாமி ஆள்கிறார். 
அம்மா அமரர் ஆண்டவர் நிழலில்,
அமைதி ஓய்விலும் நமக்காகப் பிரார்த்திப்பார்.

அணைந் தொன்றாய் வாழ்கிறோம்.
இணைந்தொன்றாய் ஆள்கிறோம்.
அம்மா மேல் சத்தியம் 
அம்மா ஆட்சி நிச்சயம்.
அம்மா மாடல் ஆட்சியாம்.
எடப்பாடியார் சாட்சியாம்.

கொ. பெ. பி. அய்யா.

Monday, 17 February 2025

தாலாட்டு

தாலாட்டு

ஆராரோ ஆரிரரோ
அன்னக்கிளி கண்ணுறங்கு
ஊராரும் தூங்கிடுச்சி
ஒருச்சாமம் ஆயிடுச்சு
உன்விழிகள் துஞ்சலியோ
உற்றதென்ன கண்மணியே.

கள்ளிப்பால் ஊட்டுவேனோ
கட்டித்தங்கம் ராசாத்தி!.
அள்ளிவீசிப் போடுவேனோ
அரசாள பிறந்தவளே!
காலம் கூடிக் கனியுதடி
கண்ணுறங்கு பொன் மகளே!.

பெண்ணாகப் பிறந்தோமென,
பிஞ்சுக்கொடி கலங்காதே!
கல்யாணச் சந்தையெண்ணி
கவலைப்பட்டும் வாடாதே!
கல்விக் கற்றும் உயர்ந்து
விட்டால்
செல்வி உனையே சீரீவரிசை எனக் கொள்வார்!

பெண்ணான யோகம் உனது
கண்ணாலக் கணக்காக 
வங்கியில் உன்பேரில்
வளரும் சேமத் தொகை
அம்மாவின் கருணையாம்
ஆட்சியின் மகிமை அதுவாம்
சும்மா நீ சுபமாக

வீரம்பெற்று பெண்களின்று
வித்தைகளும் கற்றுவிட்டார்
தீரமுற்றுப் பெண்களின்று
திசையெங்கும் வென்று
விட்டார்..
பெண்ணடிமை  ஒழியுதம்மா
பெண்ணரசி கண்ணுறங்கு.

ஈழங்கூடி மலருதம்மா
இளந்தளிரே கண்ணுறங்கு!
நாளுங்கொடி உயருதம்மா
நன்மணியே கண்ணுறங்கு!
வேளையதும் வளருதம்மா
விடிகிறது கண்ணுறங்கு!

அம்மாவின் மாடல் இது.
எம்ஜியாரின் ஆட்சியிது.
உன்போலேபா பெண்ணாளும்
உண்மைப் பொற்காலமிது.
மண்ணாளப் பிறந்தவளே 
மாதரசி கண்ணுறங்கு.

பெண்ணாகப் பிறந்த உன்னை 
தானாக எண்ணிப் பெண்ணே!
என்ன நீ ஆக வேண்டும் 
உன்னையவள் ஆக்கிடுவாள்
எந்நாளும் இரட்டை இலை 
கண்ணே உன் காவலம்மா.

கொ.பெ.பி.அய்யா. 



Friday, 14 February 2025

எத்தனை நாள் ஆட்டம்!

இன்னும் எத்தனை நாள்?
(உள்ளத்தில் நல்ல உள்ளம்)

எண்ணத்தில் நல்ல எண்ணம்
என்றுமே தோற்காது.
முன்னவர் சொன்னதடா--பாவம்
பண்ணினர் மக்களடா!--நாசம்
ஆனதும் மக்களடா!

பஞ்சமாப் பாவம் இலஞ்ம்
பெற்றதன் அடிமையாக
கூடாத இடம் கூடி வஞ்த்தில்  வீழ்ந்தார டா!---பாவ
நெஞ்சத்தால் தாழ்ந்தாரடா--கூட்டு
அணி தொடரும் மோசமடா!

தமிழுக்குத் துரோகமாய் திராவிட வேடமாய்
பாவம் பழி ஏற்றாயடா---பாவி
உண்ட  சோறு ரெண்டகமா---உன்
அண்டப் பொய் போதுமடா!

வீட்டுக்கு வாழாமல் நாட்டுக்குச்
சேவகனாய்
ஆண்ட அண்ணா தர்மரடா---அவர்
வாழுங்கொடி ஆளுமடா-நீ
போடும் வேடம் கலையுமடா!

இன்னும் எத்தனை நாளடா!
இவராடும் வெட்கக் கேடடா!
நெருங்கி வரும் காலமடா--பொய்
நொருங்கி விழும் கோலமடா!

ஆடி ஆடும் அலங் கோலம்
ஓடிச் சேர யோகம் இல்லை.
கடை யாணிக் கழன்றதடா---ஐயோ
உடைஞ்சுப் போச்சுத் தேரடா---கதை
முடிஞ்சி போச்சு ஓடடா;

கொ.பெ.பி. அய்யா.













 


Monday, 10 February 2025

தைப்பூசம் விடுமுறை.



கந்த சஷ்டிக் கடவுளே காக்கக்
காக்க!
புரட்சித் தமிழருக்கு நன்றி!

தமிழ்க் கடவுளாம் வேல் முருகன்,
தீயசூர பத்மனை வென்று கொன்ற,
தைப்பூச நினைவு நாள் இதனை,
தமிழர் வெற்றி வீர நாளாகக் கொண்டாட,
விடுமுறை நாளாகப் புரட்சித் தமிழர்,
ஆணையிட்ட அருமைக்கு நன்றி!நன்றி! 
தமிழன் ஆண்டால்தான் தமிழுக்குப் பெருமை.
தமிழே ஆளும் தன்னுரிமைக் காலம்,
கமழும் மணந்தான் கமழ்வது நுகர்வீர்!
காலம் நெருங்கும் கோலம் தான் கண்முன்னே!
கந்தனவன் வெற்றி வேலன்
வென்ற வடிவின்,,
மாட்சி இன்று பழனிச்சாமி காட்சி அதே!
காணக் கண்ணாயிரம் வேண்டும்!வேண்டும்!
காணக் கூடாதார் கண்ணும் 
படக் கூடாது.
கந்த சஷ்டிக் கடவுளே நீதான்
காத்தருள வேண்டுமே.

கொ.பெ.பி.அய்யா.










சீர் வரிசை.

சீர் வரிசை.

சீர் கொண்டு போகும் 
சீர் வரிசை யாருக்கு!
ஏர் உழவன் மகன் எடப்பாடியார் அவருக்கு.
அவினாசி மக்கள் கூட்டம்
ஆர்ப்பரிப்பு அவணி போற்றும்,
ஏர்ப் பொறுப்பு பழனிச்சாமி
என்றும் ஆள உழவு வாழ்த்தும்.

அவினாசி திட்டம் தந்த அய்யா எடப்பாடி யார்!
புவியாசி போற்றும் புகழ் புரட்சித் தமிழர் பழனிச்சாமி!
இளைய புரட்சித் தலைவராம் எங்கள் முதல்வர் தங்கம்!
திங்கள் முகம் சிங்கம் அவர் அம்மா மாடல் அவராட்சி வாழ்க!

அவினாசி விவசாயிகள் புவி நேசர் விவசாயிக்கு,
புவி வாசம் மேவும் வாசி புரட்சித்தமிழ் எடப்பாடியார்கு,
சீர் தந்த அருமை ஏர் கொண்ட பெருமை.
பொய்மை ஆளும் அரசுள் போயொழியச் சீர்மை.

நீர்நிலைகள் நிறம்பி  எல்லாம்
சீர் கண்ட வேளாண்மை,
கூர் கொண்ட ஏர் உழவன் ஓயாத ஆளாண்மை,
பாருக் கெல்லாம் சோறிடும் நேர் கொண்ட விவசாயம்,
வேர் ஊன்றச் செய்தாற்கு
சீர் தந்த புகழ் வாழ்க!

கொ.பெ.பிச்சையா.

Saturday, 8 February 2025

கனவு கண்டேன்.

கனவு கண்டேன்.

கனவு கண்டேன் நான்
கனவு கண்டேன்-தமிழர்
கனவு நிறைவேறிடக்
கனவு கண்டேன்.

தொழில் மையம் மாக
தமிழகம் ஓங்கிடக்
கனவு கண்டேன் நான்
கனவு கண்டேன்.

இளைய புரட்சித் தலைவர்
ஆட்சி,
உலகின் முதன்மை மாடல்
மாட்சி,
அஞ்சிக் கெஞ்சி ஒஞ்சாத்
தேர்ச்சி
கனவு கண்டேன் நான் 
கனவு கண்டேன்.

தமிழன் தன்தலை நிமிர்ந்திடக்
கர்வம்,
தலையாய் தமிழன் அமருந்
தேர்வும்,
உலக மோர் ஒன்றியமாகக்
கனவு கண்டேன் நான்
கனவு கண்டேன்.
               
ஏழ்மை என்னும் தாழ்மை
இல்லா,
யாவரும் சமமெனும் மேன்மை
எல்லாம்,
தமிழன் தலைமை ஆளுமை
வெல்லக்
கனவு கண்டேன் நான்
கனவு கண்டன்.

நதிகள் அனைத்தும் இணைந்து ஓடி,
விதிகள் எல்லாம் பொருந்தத் தேடி,
பசுமை போர்த்திய பாரதம்
காணக்
கனவு கண்டேன் நான்
கனவு கண்டேன்.
                  
ஆணும் பெண்ணும் பேதமில்லா
பேணும் உரிமை வாதமில்லா
தோணும் எண்ணம் சகோதரமாகக்
கனவு கண்டேன் நான்
கனவு கண்டேன்.

இளையப் புரட்சித் தலைவர் எடப்பாடியார் 
தலைமை ஏற்கும் எம்ஜியாரரசு
அரியணை ஏறும் காலம் மிளிர
கனவு கண்டேன் நான் 
கனவு கண்டேன்.         

 சட்டம் ஒழுங்கு சாத்தியமாக
எந்த இரவும் பெண்கள்
 உலாவ
காந்தி இராஜ்யம் கண்டிடக்
கனவு கண்டேன் நான்
கனவு கண்டேன்.

மனிதம் என்ற சொல்லுக்குப்
புனிதம்,
தமிழன் கொண்ட வாழ்வின் இனிதம்,
எடப் பாடி பழனிச்சாமி அவரின்
எம்ஜியார் அம்மா ஆட்சி மாடல்
கனவு கண்டேன் நான்
கனவு கண்டேன்.

கொ.பெ.பி.அய்யா.

Sunday, 26 January 2025

யார் ராஜபச்சே?

என்ன இது அநியாயம்

என்ன இது அநியாயம்
உன்னிடமும் இல்லை நியாயம்.       
சொன்னதெல்லாம் நிசந்தானோ!-உனக்கு.
சொந்தந்தானோ ராஜபச்சே!

கண்ணீரில் கடல் பெருக்கி
கப்பல் விடும் சண்டாளன்
உன் முடிசூட்டு விழாவிற்கு-பாவி
உற்ற திருஷ்டி பூசணியவன்.

செந்நீரில் குளம் நிறப்பி
செழிக்கக் குளித்தவன்தான்
காட்டேரி அவனேதான்--மனித
காவுபூஜை முடித்தவன்தான்.

பூதம் வந்து முடி சூட்ட
பாவம் என்ன செய்தாயோ!
வேதம் கற்ற நீ கூட—பாவம்
விதிவசம்ஆனாயோ!  

புண்ணியர் வாழ்த்தினால்
புகழ் இன்னும் கூடுமன்றோ!
பாவியரை அழைத்தாயோ!-தமிழ்
பாவம் உன்னைச் சூழுமன்றோ!

தமிழன் என்றால் ஏளனமோ!
தமிழினம் வேண்டாமோ!
தமிழ் இல்லா இந்தியாவோ!-அய்யா
தமிழ் செய்த பாவம் என்ன?

உடன் பிறந்த இந்தியனை
திடங்கொண்டு கொன்றவனை
கடன் என்று அழைப்பாயோ!-எம்மை
ஜடம் என்றும் நினைத்தாயோ!

அவன் செய்த இலாபம் என்ன?
நாங்கள் செய்த பாவம் என்ன?
எம்முணர்வைக் கொல்வதற்கு—நீயும்
எத்தனை நாள் தவமிருந்தாய்?

பாவியர்கள் தொலைந்தாரென்று
பகல்கனவா கண்டிருந்தோம்.
ஆவியாய் உன்னுருவில் –மீண்டும்
அவர் வந்தும் பூந்தனரோ!

என்றுதான் விடியுமோ!
எங்கள் தமிழ் ஆளுமோ!
அன்றுதான் பாரதம் –தமிழ்
வென்றும் ஒரு அங்கமாமோ!

கொ.பெ.பி.அய்யா.



அறவழி அதிமுக கட்டுரை



தாரகமந்திரம்

தாரக மந்திரம் இரண்டு


தமிழகம் என்பது ஒன்றுதான்.
தாரக மந்திரம் இரண்டுதான்.
எம்ஜியார் அம்மா மந்திரம்தான்
என்றும் சுபமே நிரந்தரம்தான்..

தமிழே சொந்தம் என்றும் தான்
தமிழே வாழ்வெனக் கொண்டும் தான்.
தாமெனத் தமிழே மக்கள் தான்.
தம்முயிர் வாழ்ந்த மந்திரம் தான்.

வானும் மண்ணும் உள்ளதுதான்
வாழும் தமிழும் வாழ்வதுதான்.
காலம் தானும் சுழலும் தான்.
ஞாலமந்திரம் எம்ஜியா ரம்மாதான்.

தமிழகம் என்பது ஒன்றுதான்.
தாரக மந்திரம் இரண்டுதான்.
எம்ஜியார் அம்மா மந்திரம்தான்
என்றும் சுபமே நிரந்தரம்தான்

கொ.பெ.பி.அய்யா.



வெற்றிக் கனிகள்.

வெற்றிக்கனிகள்.

முப்பத்து ஏழு வெற்றிக் கனிகள்.
இப்போது ஆளும் இந்திய மணிகள்.
செப்பம் அம்மா சீர்வளர் பணிகள் 
எப்போது மேற்றும் நேர்மன அணிகள்.

இந்திய வரலாறு இன்றும் எழுதும்
முந்திய தமிழின் முன்னுரை முழுதும்.
பிந்திய நாளில் ஒன்றென அம்மா
சந்தியா மகளென சாதனை பதிக்கும்.

ஒற்றை அல்ல ஓராயிரம் கோடி
பற்றிய தமிழின தாயிடம் தேடி
வெற்றி வெற்றி எனவீரம் பாடி
சுற்றினோம் முப்பத்து ஏழும் சூடி.

தமிழினம் இன்று தரணியில் வென்று
தலைநேர் நிமிர்ந்து பரணியில் பகிர்ந்து  
உலகம் வியந்து உற்றுப் பார்க்க
திலகம் சூட்டிய அம்மா வாழ்க!

கொ.பெ.பி.அய்யா.


Saturday, 25 January 2025

அம்மா இரங்கற்பா.

அம்மாவிற்கு இரங்கற்பா

அம்மா அம்மா வா! வா!
அகிலம் இன்று அழுகிறதே!
தாயே தாயே எழுந்து வா!
தமிழே கதறி அழுகிறதே!.

அம்மா உன்னை இல்லை என்றால்
நம்ப மனமும் மறுக்கிறதே.
சும்மா சொல்லும் சொல்லாக்கி
அம்மா நீயும் எழுந்து வா!

ஜே என்றாலே ஜெயம் என்பார்.
ஜெயம் என்றாலே நீயென்பார்.
எமனிடம் தோற்றதும் பொய்தானோ!
இமயம் சாய்ந்ததும் மெய்தானோ!

புரட்சித் தலைவர் ஆன்மா நீ!
புரட்சித் தலைவி புகழே நீ!
உழைத்துக் களைத்து அவர்நிழலே!
அழைத்து அமரம் ஆனாயோ!

நிரந்தரம் முதல்வர் நீ என்றோம்.
வரந்தரும் இறைவியும் நீயென்றோம்.நிறைந்தும் தமிழகம் நீயாக பரந்தும் துணைசெய் தாயாக.

மறைந்தாய் என்பது பொய்யாக,

எழுந்தாய் என்பதே மெய்யாக

எழுந்து வா எம்தாயே!

கொ.பெ.பி.அய்யா.

தாயே தமிழே வாழ்க!





தாயே தமிழே வாழ்க!

அம்மா என்னும் சொல் உதிர்த்தால்
அன்பு என்னும்  நெல் சிதறும்.
அம்மா எண்ணி உள்  நினைத்தால்
எம்மா வஞ்சமும் தான்
பதறும்.

தாயே என்னும் தமிழ் பகிர்ந்தும்
தர்மம் தானே தலை வணங்கும்.
தாயே உள்ளம் உனை நினைந்தும்
தைரியம் உள்ளே வினை முனைக்கும்.

அன்னை சொல்லோ வாய் மலரும்.
முன்னை வெல்ல தான் புலரும்.
விண்ணைத் தொடவும் எண்ணித் துணியும்
மண்ணில் பகையும் முன்னே பணியும்.

மாதா உந்தன் மகிமை முன்னால்.
சாதா எல்லாம் சகலமும் தன்னால்.
வேதா இல்லம் ஆலயம்
நின்றும்
சோதனை வெல்லும் போதனை சொல்லும்.

பெற்றாள் மடியினில் பிள்ளை முகம்போல்
பெற்றார் மகிழ்வதும் உன்னடி நிழல்கீழ்.
நற்றமிழ் சிறப்பதும் கற்றது போலே
மற்றென்ன அறிவதும் உற்றதும் மேலே!


தாயே வாழும் தமிழே வாழ்க!
நீயே ஆளும் நிலையே வாழ்க!
நேரே நிசமே சீரே வாழ்க!
பாரே வசமே தீரே வாழ்க!
கொ.பெ.பி.அய்யா.

வெற்றிச்சங்கம்.

வெற்றிச்சங்கம்.

நாடு எங்கும் பச்சை இலைகள் 
வீடு எங்கும் இரட்டை இலைகள்
ஈடு உண்டோ எமக்கிங் கலைகள்
ஓடும் கூட்டம் தேடுது வளைகள்

நாற்பதும் நமக்கே நல்லுறவாகுது
தோற்பது மற்றவர்க்கு 
முள்ளுறவாகுது
சேமம் வாழுது அண்ணா திமுக 
நாமம் போடுது புண்ணாக்குகள்

வெற்றிச்சங்கம் சுற்றி முழங்குது.
கொட்டும் முரசுகள் கொட்டிக்கிழியுது.
பற்றிச்சூரியன் எட்டி ஓடுது.
இரட்டை இலை மட்டும் எங்கும் தோணுது


வெற்றிச்சங்கம் அம்மாவுக்கு 
விழாக்கோலம் அம்மாவுக்கு.
கெட்டித் தனித்த துணிச்சலுக்கு 
முத்திய பரிசிது தமிழளிப்பு

கொ.பெ.பி.அய்யா.

பாரதமே சொர்கம்.

பாரதமே சொர்க்கம்!!

முந்திய நாகரிகம் உயர்
மூத்த குடிமக்கள்.
விந்திய மலை முட்ட
வேண்டிய செல்வங்கள்.
இந்தியத் திரு நாட்டின்
இருப்பென்றெண்ணியே
வந்த பறவையெல்லாம்
வாரிச் சென்றதோ!

பொறுமைப் பூமி இது
பொக்கிசக் களஞ்சியமோ!
வறுமைப்பட்டுப் பின்
வாடி நின்றதோ!
பெருமை குலைந்து தன்
பிள்ளைப்பசி போக்க
திருமை நாடுகளை முன்
தேடியும் நின்றதோ!

அடிமை செய்தவன் தளை
அறுத்து ஏகினாலும்.
விடிவு வருமென இமை
விழிக்கும் வேளையில்
தடித்த மனத்தினர் தலை
தூக்கிச்சிரித்தனர்..
பிடித்து வளைத்து அடிமை
பிணையமாக்கினர்.

குடும்பம் குடும்பமாய்
கொத்தடிமைக் கோலம்.
கொஞ்சங் கொஞ்சமாய்
குறைந்திட்ட போதும்
பிஞ்சு இளசுகள் கஞ்சிக்காக
நஞ்சுக் கொடியோரின்
வஞ்சக ஏவலில் நைந்து
வாடுவதோ பாவம்.!.

ஒட்ட ஒரு இடமில்லாமல்
  ஓரம் தேடி உறங்குது.
கட்டில் தேடும் இளசுகளோ
 காடுகளிலில் மறையுது.
தொட்டில் ஆடுங் குழந்தைகளோ
 தொட்டி களில் கதறுது.
மொட்டில் வாடும் பிஞ்சுகளோ
 தட்டில் பிச்சை கேட்குது.

வயிற் றிற்கு சோறில்லாமல்
வழிப் பறிகள் செய்யுது.
பத்து மாதம் சுமந்துபெற்ற
பால கரை விற்குது
வேலை யேதும் இல்லாமல்
வீதிகளில் நிற்குது.
வறுமை செய்யும் கொடுமையில்
வழிதவறிச் செல்லுது.

இந்த நிலைமாற அரசு
ஏற்றும் திட்டமெல்லாம்
வந்திடும் வழிகளிலேயே
சந்துகளில் ஒளிகிறது..
எந்த நிலையிலும் இங்கே
எவருமே சரியில்லை.
சொந்தமாகுமோ அந்த
சுடு காடு எவருக்கும்?

என்னதான் செய்யலாம்
ஏதாவது சொல்லுங்கள்.
பாவம் இந்த ஏழைகள்
பசி தணிக்க உதவுங்கள்.
ஊழல் செய்யும் கோழைகளை
உணர வழி செய்யுங்கள்.
பாழ் படுத்தும் பாவியரை
நாள் கொடுத்து தூக்குங்கள்.

ஆள் எண்ணித் தேடுவீர்!
அடிமைத்தனம் நீக்குவீர்!
தனி நிலைப் பொருளாதாரம்
நனி நிலை தேக்குவீர்!
இல்லாரே இல்லாது
எல்லோரும் ஆக்குவீர்!
வல்லாண்மை கொண்டுமே
வளர்ந்த நிலை தூக்குவீர்!

புதிய விடியலை நோக்கி
புதுமைகள் தேடுவோம்.
நதிகள் கடல் மறக்க
நல்லணைகள் கட்டுவோம்,
பசுமை வண்ணமெங்கும்
பாரெங்கும் பரப்புவோம்.
பசியை மறந்தோமென
பாரதமே சொர்க்கமென்போம்.

அம்மா அய்யா வரங்களில் 
அனைத்திந்திய அதிகாரம் 
செம்மா நிலைப் பலமுடன்
செயல் முறைத் தன்திறம்
எல்லாம் கொண்டு தான்
ஏற்றிடும் போதுதான் 
வல்லரசாகிடும் 
வளம் கண்டு உயர்ந்திடும்.

கொ.பெ.பி.அய்யா.