Friday, 28 November 2025

ஆலமரம் அண்ணாதிமுக.

ஆலமரம் அண்ணாதிமுக.

குளக்கரையில் ஒரு ஆலமரம் --செழித்து 
கிளை பரப்பி வாழும் மரம்.
நிழல் அகற்றி இலை நிரப்பி--அகன்று
வளம் கொழித்து ஆளும் மரம்

தேடி வந்த பறவைகளை--ஒன்றாய்
கூடி வாழ்ந்த உறவுகளை.
ஓடி வந்த கழுகு ஓன்று --உறவை
ஓட்டி விடப் பார்க்குதம்மா.

கலைத்து விடக் கத்துதோ--பந்தம்
உலைத்துக் கெடச் சுற்றுதோ.!
பழுத்து விட்ட இலைகளே--உழுத்து
நிலை குலைந்து உதிர்ந்தனவோ!

தேடி ஓடிக் கலைத்துப் போன--திருட்டுக்
கழுகு மட்டும் பறந்தது.
பொன் மனத்துச் சொந்தங்களை--எந்த
வன்மனந்தான் குலைத்திடுமோ!

ஆண்டுகள் ஆயிரம் ஆனாலும்--நன்றி
ஆராரும் மறந்தும் போனாலும்.
அம்மாவால் காத்த மரம்--இதை
ஆரசைக்கக் கூடும் அம்மா.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

Tuesday, 25 November 2025

அவலங்களும் அவமானங்களும்

அவலமா அவமானமா?

அவலங்கள் அனுபவங்கள் தாங்கலாம்.
அதனால் மனம் பண்படும்---ஆனால் 
அவமானங்களை மனது தாங்காது.
மானங்கெடும் மனது புண்படும்.

அவலங்கள் அனுபவங்கள் 
அவமானங்கள் பாடங்கள் 
அவலங்கள் அவமானங்கள் 
அனுபவித்துப் படித்துதான்
அனுபூதி மாறல் ஆம்.

நேரடி அனுப உணர்வு சீரடி அறிவு 
போராடிக் கடரும் பிறவி வாழ்வு
மீராமல் மீண்டும் நேராமல்
தீரடித் திவ்யம் சேரவே வரமே
அருள்க ஆண்டவா சரணம்.

Monday, 24 November 2025

சாமி சாமி

பழனிச்சாமி பாட்டு.

சாமி சாமி ஆளுஞ் சாமி சாமான்யப் பழனிச்சாமி.
சகமனிதம் பழகுஞ் சகோதரர் பழனிச்சாமி.

ஏழைகளின் நம்பிக்கை இதயமுள்ள பழனிச்சாமி
உழவன் ஏழை எடப்பாடி முதல் வரான பழனிச்சாமி

விவசாயி பெற்ற மகன் விவசாயி பழனிச்சாமி.
விவசாயி செய்த தவம் அவதாரம் பழனிச்சாமி.
உழவுத் தொழில் வாழ வைக்க உவந்து வந்த பழனிச்சாமி 
உழவர்களின் வளம் செழிக்க உழைத்து வந்த பழனிச்சாமி.

அம்மா தந்த பழனிசாமி நம்மாளிந்த பழனிச்சாமி 
எம்ஜிஆர் கண்டெடுத்த அம்சமிவர் பழனிச்சாமி 
சிங்கம் போன்று சட்டசபை சீறும் நம்மாள் பழனிச்சாமி.
கொங்கு மண்ணின் தங்க மகன் சிங்கம் அவர் பழனிச்சாமி.

சிரிப்பழகு புரட்சித் தமிழ் தெறிக்கும் மொழி பழனிச்சாமி
நெறிப்பழகு புரட்சியாரின் வளர்ச்சி வழி பழனிச்சாமி 
ஆளுமையின் அகராதி அம்மா வழி பழனிச்சாமி. 
வாழும் வழி சொல்லிச் சொல்லி வழிப் படுத்தும் பழனிச்சாமி.

ஆளப் பிறந்த சாமியாம் வாழவைக்கும் சாமியாம்
நாளை இந்த சாமிதான் நம்மை ஆளும் முதல்வராம்
தும்சம் செய்ய துரோகியரை வம்சம் புரட்சித் தமிழராம்
அம்சம் தமிழ் ஆடசிக்கு அரியணைச் செல்வராம்.
இம்சை அரசியல் முடிவுக்கு எடப்பாடி பழனிச்சாமி யாம்.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

Sunday, 23 November 2025

விடியல்

விடியல் எப்போ?

அடியே சின்னக்குட்டி செல்லம்மா!
விடிஞ்சிரிச்சா சொல்லம்மா
விடியலுனு சொன்னாங் களே
விடிஞ்சிரிச்சா பொன்னம்மா.?

அடைஞ்சு போன ஆதவனோ!
அடைஞ்சி எங்க தொலைஞ்சானோ!
காந்தி சொன்ன விடியலைப் போல்,
காரிகையரும் காண்பா ரோ!

நடு இரவே ஆனாலும்
நகை யோடு நங்கையர்
சுதந்திரமாய் உலாவி வர
நிரந்தரம் விடிஞ்சிரிச்சா.?

பால் குடிக்கும் பிஞ்சுகளை
பாலியல் வன் கொடுமை.
காமக் கொடூ ரர்களின்
களி யாட்டம் குறைஞ் சிரிச்சா?

கொலைக் களவு கொள்ளைகளும்,
நிலை குலைந்து முடியவில்லை.
விலை இல்லா சலுகைகளும்,
தலை குனிந்து முடங்கவில்லை.

அடங்க வில்லை விபத்துக்களும்,
அரங்கேறுது தினம் தினமும்.
அடக்கிட நாளை இல்லை.
விடியலுக்கு வேளை இல்லை.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

Thursday, 20 November 2025

உணர்வில் கலந்த உறவு.

உணர்வில் கலந்த உறவு.

உணர்வில் கலந்த உறவே--எம்ஜிஆர்
கனவில் மலர்ந்த வரவே!
நினைவில் நித்திய நலனே--தமிழர்
பிணைப்பில் சத்தியக் குலனே.

திருவே பொருளே நீயே--தொணடர்
தியாகப் பிரியம் நீயே!
அண்ணல் எம்ஜிஆர் உயிரே--சின்னம்
இரட்டை இலையின் ஜெயமே!

அம்மா போற்றிய தீர்கமே--உண்மை
அன்பர் ஆற்றிய மார்கமே.
அண்ணா வழியின் இயக்கமே--சுயம்
எண்ணா நிலையின் தியாகமே.

இரத்தத்தின் இரத்தம் சகோதரமே--ஒரே
சித்தத்தின் சித்தம் சோதரமே!
சத்தியத் தாயின் பிள்ளைகளின்--ஒரு
இலட்சியப் பயண இலட்சணமே!

அண்ணா திமுக அறவழியே---புரட்சியார்
சொன்ன சொல்லின் நெறிமுறையே
இன்றும் என்றும் நாளையுமே--தீயரை
வென்றும் ஆண்டும் தமிழகமே--ஆணடு
 நின்றும் நூறுகள் வாழியவே!

கவிஞர். கொ. பெ. பி. அய்யா.

எதைப்பிடித்து வந்தாய்?

எதைப்பிடித்து வந்தாய்?

காலைப் பிடித்து வந்தாரா
கையப் பிடித்து வந்தாரா
எதைப் பிடித்து வந்தாலென்ன
ஏறி வந்தார் என்பதே உண்மை.

எதைப் பிடித்து நீ வந்தாய் 
எல்லோ ருக்கும் தெரியுமே--அந்த
அடையாளம் இல்லை யென்றால் 
ஆரறிவார் உன்னை இன்று.

தலைவனுககுத் தகுதி என்ன? 
தொண்டனாக விலாசம் என்ன--நீ
தியாகம் என்ன செய்தா யென்று
தலைவனாக சும்மா இன்று?

தந்தை தாத்தா பெயரைச் சொல்லி
வந்தா யென்றால் உண்மையே!
எந்த வேறு உழைப்பைக் கூறி
முந்தி வந்தாய் தலைவனாகி?

நோகாமல் நுங்கு தின்றாய்
வேகாத பருப்பு ஒன்றாய்.
உழைத் துயர்ந்த எடப்பாடியாரை
பிழை பேசத் தகுதி யென்ன?

Kppayya 

Monday, 10 November 2025

அம்மையப்பன்.

அம்மையப்பன்.

அம்மையப்பன் ஆளுமைநீ"!
நம்பிச் சொன்னால் தீரன்நீ!
நான்காண்டு காலம் நீ!
நல்லாட்சி நாயகன் நீ!

உருட்டுக்கு முடிவு நீ!
இருள் நீங்க ஒளி நீ!
சட்டமொழுங்கு சரித்திரன் நீ!
சுதந்திர சுவாசம் நீ!

கொடியநோய் கொரனாவில் நீ,!
கொடுத்துக் காத்தக் காவலன் நீ!
வரண்ட அந்தப் பஞ்சத்திலும் நீ!
இருண்ட நிலை நீக்கினாய் நீ!

ஏழைகளின் தாயன் நீ!
வேளாளன்மைத் தந்தை நீ!!
உழவர்களின் நம்பிக்கை நீ!
தலைவன்வழிக் கீர்த்தி நீ!

அம்மா நீ எம்ஜிஆர் நீ!
அதிமுக கட்சி நீ!
ஆளுமை நீ வாழ்வுரிமை நீ!
எடப்பாடி பழனிச்சாமி சாமி நீ!

கவிஞர். கொ. பெ. பிச்சையா.