குளக்கரையில் ஒரு ஆலமரம் --செழித்து
கிளை பரப்பி வாழும் மரம்.
நிழல் அகற்றி இலை நிரப்பி--அகன்று
வளம் கொழித்து ஆளும் மரம்
தேடி வந்த பறவைகளை--ஒன்றாய்
கூடி வாழ்ந்த உறவுகளை.
ஓடி வந்த கழுகு ஓன்று --உறவை
ஓட்டி விடப் பார்க்குதம்மா.
கலைத்து விடக் கத்துதோ--பந்தம்
உலைத்துக் கெடச் சுற்றுதோ.!
பழுத்து விட்ட இலைகளே--உழுத்து
நிலை குலைந்து உதிர்ந்தனவோ!
தேடி ஓடிக் கலைத்துப் போன--திருட்டுக்
கழுகு மட்டும் பறந்தது.
பொன் மனத்துச் சொந்தங்களை--எந்த
வன்மனந்தான் குலைத்திடுமோ!
ஆண்டுகள் ஆயிரம் ஆனாலும்--நன்றி
ஆராரும் மறந்தும் போனாலும்.
அம்மாவால் காத்த மரம்--இதை
ஆரசைக்கக் கூடும் அம்மா.
கவிஞர். கொ. பெ. பிச்சையா.