எம்ஓட்டு என்றும் இரட்டை இலைக்கே
இந்நாட்டின் நலனார் எடப்பாடி அவர்கே.
எம்ஜிஆர் காட்டிய இரட்டை விரல்களே
என்றும் எமது வெற்றிக் குரல்கள்.
தமிழ் நாடாளும் இரட்டை இலைகள்.
தரணியே மிரலும் புரட்சி அலைகள்.
அன்பின் இணைப்பு ஆத்ம அணைப்பு.
ஆளுகைப் பண்பு ஆளுமை வனப்பு.
மக்கள் தலைமை மக்கள் ஆட்சி.
மக்கள் படைத்த மாண்பின் மாட்சி
மக்கள் அலையில் தோன்றிய காட்சி..
மக்கள் நலனே மக்களே சாட்சி.
மக்கள் இயக்கும் மக்களின் இயக்கம்.
மக்கள் சக்தி மக்களின் யுத்தம்.
மக்கள் உழைப்பு மக்களின் சொத்து.
மக்கள் காப்பு மக்களின் அதிமுக.
எதையோ நினைத்து எதற்கோ வந்தார்.
அதையே மறைத்து அதனால் சென்றார்.
மக்கள் உடைமை மக்களின் உரிமை.
மக்கள் நாயகன் எடப்பாடி நின்றார்.
பொதுநலன் என்பது கொள்கை எல்லை
சுயநலம் கொள்வார்கு இடமே இல்லை.
அதிமுக என்பது அறப்போர் படை
அற்பருக்கு இங்கே எப்போதும் தடை.
தோல்வி என்றொரு சொல்லே இல்லை
வேள்வி அதுவே வெற்றியின் சொல்லே.
புரட்சித் தலைவர் போதனை ஞானம்.
புரட்சிப் படையிது சாதனை காணும்.
கவிஞர். கொ. பெ. பி. அய்யா.
No comments:
Post a Comment