உணர்வில் கலந்த உறவே--எம்ஜிஆர்
கனவில் மலர்ந்த வரவே!
நினைவில் நித்திய நலனே--தமிழர்
பிணைப்பில் சத்தியக் குலனே.
திருவே பொருளே நீயே--தொணடர்
தியாகப் பிரியம் நீயே!
அண்ணல் எம்ஜிஆர் உயிரே--சின்னம்
இரட்டை இலையின் ஜெயமே!
அம்மா போற்றிய தீர்கமே--உண்மை
அன்பர் ஆற்றிய மார்கமே.
அண்ணா வழியின் இயக்கமே--சுயம்
எண்ணா நிலையின் தியாகமே.
இரத்தத்தின் இரத்தம் சகோதரமே--ஒரே
சித்தத்தின் சித்தம் சோதரமே!
சத்தியத் தாயின் பிள்ளைகளின்--ஒரு
இலட்சியப் பயண இலட்சணமே!
அண்ணா திமுக அறவழியே---புரட்சியார்
சொன்ன சொல்லின் நெறிமுறையே
இன்றும் என்றும் நாளையுமே--தீயரை
வென்றும் ஆண்டும் தமிழகமே--ஆணடு
நின்றும் நூறுகள் வாழியவே!
கவிஞர். கொ. பெ. பி. அய்யா.
No comments:
Post a Comment