Sunday, 23 November 2025

விடியல்

விடியல் எப்போ?

அடியே சின்னக்குட்டி செல்லம்மா!
விடிஞ்சிரிச்சா சொல்லம்மா
விடியலுனு சொன்னாங் களே
விடிஞ்சிரிச்சா பொன்னம்மா.?

அடைஞ்சு போன ஆதவனோ!
அடைஞ்சி எங்க தொலைஞ்சானோ!
காந்தி சொன்ன விடியலைப் போல்,
காரிகையரும் காண்பா ரோ!

நடு இரவே ஆனாலும்
நகை யோடு நங்கையர்
சுதந்திரமாய் உலாவி வர
நிரந்தரம் விடிஞ்சிரிச்சா.?

பால் குடிக்கும் பிஞ்சுகளை
பாலியல் வன் கொடுமை.
காமக் கொடூ ரர்களின்
களி யாட்டம் குறைஞ் சிரிச்சா?

கொலைக் களவு கொள்ளைகளும்,
நிலை குலைந்து முடியவில்லை.
விலை இல்லா சலுகைகளும்,
தலை குனிந்து முடங்கவில்லை.

அடங்க வில்லை விபத்துக்களும்,
அரங்கேறுது தினம் தினமும்.
அடக்கிட நாளை இல்லை.
விடியலுக்கு வேளை இல்லை.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

No comments:

Post a Comment