மாற்றம் வேண்டும் மாற்றுவோம்.
ஏற்றமாக இளஞரணி ஆற்றுவோம்.
போற்றினோம் புரட்சிவழிக் கூடினோம்.
நாட்டினோம் தமிழாட்சி சூடினோம்.
கோட்டையேறி கொடிமரம் நாட்டுவோம்
நாட்டைமீட்டிப் பதறுகளை ஓட்டுவோம்.
வேட்டையாடி விளையாடிக் காட்டுவோம்.
பாட்டுப்பாடி ஆட்டமாடிப் போற்றுவோம்.
பொங்குமணி சீறுமொலிச் சிங்கங்கள்.
தங்கமகன் எம்ஜிஆர் சொந்தங்கள்.
சங்கமொலிக்க ஓங்காரம் தொணிக்க,
வங்கலைகள் இளைஞரணி திழைக்க
மீட்டுவோம் தமிழகம் மீட்டுவோம்
மீட்டித்தமிழக மக்களைக் காப்போம்.
காட்டுவோம் அம்மாப்படை காட்டுவோம்.
காட்டிப்புரட்சி இளைஞரணி ஆற்றுவோம்.
இந்தப்படைப் போதுமா இன்னுந்தான் வேணுமா?
சொந்தப்படை யாகுமா கூலிப்படைத் தாங்குமா?
எம்ஜிஆர் அம்மான்னா இளக்காரம் ஆனதா?
தும்சம்பன்னித் தோற்கடித்த வரலாறும் போனதா?
ஆகாதசொல்லுண்டா அர்ஜுனாப் போல் வில்லுண்டா?
போகாத ஊருக்குக் காட்டுவழிக் கல்லுண்டா?
நேராத போருண்டா பாராத வெற்றி யுண்டா?
நேருக்கு நேராக போரிட ஆளுண்டா?
ஆகாத வாக்குறுதி அள்ளியள்ளி வீசியே
தேறாத ஆட்சியதை மாறாகப் படுத்தியே.
வேகாத பருப்புக்கு வீணாக நெருப்பிட்டு
தாகமான மக்களுக்குத் தந்தததும் என்னவோ?
பொறுத்தவரைப் பொறுத் திருந்தோம்
வெறுத்தாலும் பார்த் திருந்தோம். விடியலுக்குக்குக் காத்திருந்தோம்
விடியாமல் விழித்திருந்நோம்.
காலங்கடந்தும் கதைமுடிய வில்லை
கோலமே கிடந்தது பொழுதாகவில்லை.
ஓலந்தான் மிஞ்சியது மாற்றமில்லை
மாற்றம்தான் வேணாடும் மாற்றுவோம்.
எடப்பாடியார் ஆட்சிபோல் ஏதுமில்லை.
கடப்பாடு அவருக்குத்தான் வேறில்லை
மாற்றத்தின் மாற்றம்வேறு மனித ரில்லை.
காலந்தான் அவருக்காகக் காத்திருக்கு..
நாளுந்தான் நாளையெண்ணிப் பார்த்திருக்கு.
வேளைவர விடியலும் விழித்திருக்கு.
காலை மாலைக் கணக்குப் போட்டு
கணித்த மாற்றம் உடனிருக்கு.
கவிஞர். கொ. பெ. பிச்சையா.
No comments:
Post a Comment