மானம் ஒன்றே பெரிதென வாழும்
மனிதன் தானே எடப்பாடி யாரும்
வான் குவிந்தாலும் தான் பணியாத
தன்மானச் சிங்கம் பழனித் தங்கம்.
கைநீட்டி நாளும் பொய்கூட்டிப் பேசும்
சைத்தான்கள் வாழும் சண்டாள தேசம்.
மெய்யறிப் புனிதம் பொய்யா மனிதம்
வைய்யம் காண்பது அரிதும் அரிதாம்.
மானங் காத்து ஈனம் தவிர்த்து
வானங் கீழே தான்தலை குனிந்து
வாழுங் கேவலம் போலல் லாமல்
நாளுந் தன்மானம் வாழும் பழனிசாமி.
அரசியல் என்றால் அவமானம் என்பார்
விரசியல் என்றும் வேறாய்ச் சொல்வார்.
ஆனாலும் எடப்பாடி தன்மானச் சிங்கம்
வானுயரம் போலூம் தானுயர்த் தங்கம்.
தொலைந்தன தேடி அலைய வேண்டாம்
தூர்ந்தது துடைத்து தேடவும் வேண்டாம்.
தன்மானம் காத்து பொன்மான் மிளிரும்
தன்வழி எடப்பாடி தனிவழி ஓளிரும்.
கவிஞர். கொ. பெ. பிச்சையா.
No comments:
Post a Comment