Tuesday, 21 October 2025

எம்ஜிஆர் கண்ட இரட்டை இலை

எம்ஜிஆர் கண்ட இரட்டை இலை

எம்ஜிஆர் கண்ட இரட்டை இலைகள்  என்றும் வென்ற இரட்டை இலைகள்.
தனித்து வென்று களங்கண்டஇலைகள்
துணித்த எங்கள் இரட்டை இலைகள்.

திண்டுக் கல்லை வென்றக் கல்லாய்
கொண்டுத் தூக்கிய வெற்றி இலைகள்.
முதன்முதல் வென்ற இரட்டை இலைகள்
புதாட்சி கண்ட இரட்டை இலைகள்.

எழுபத் தொன்றில் முளைத்த இலைகள்
எங்கும் துளிர்த்த இரட்டை இலை.கள்.
காலை வாசல்க் கோலமாம் இலைகள்.
காரிகை கொண்டை இரட்டை இலைகள்.
 
வெற்றிச் சின்னம் இரட்டை விரல்கள்
சுட்டிக் காட்டும்  இரட்டை இலைகள்.
பச்சைப் பசப்பென பரவித் துளிர்த்தன
இச்சை வண்ண இலைகள்.தழைத்தன.

எதிரிகள் கண்களில் விரல்கள் ஆட்டி,,
பதறிச் சிதறப் பயமுற மிரட்டி,
அதிரும் சும்மா அலற விரட்டி,
சதுராடிக் களத்தில் சம்பம் செய்யும்.

விரும்பித் தொட்டால் அரும்பி மலரும்.
நிறம்பிப் பச்சை கண்களில் குளிரும்.
எதிர்க்க நினைத்தால் இல்லா மலாக்கும்
உதிர்க்க முனைந்தால் ஓயா தழைக்கும்.

கவிஞர். கொ. பெ. பி அய்யா.




No comments:

Post a Comment