வேட்டியை மடிச்சிக் கட்டி
விவசாயி தலப்பாக் கட்டி
கோட்டையில் கோலோச்சி
நாடாளும் யோகன் சாமி.
விவசாயம் தெரிஞ்ச சாமி
அவசியங்கள் புரிஞ்ச சாமி
விவசாயி நாடாள விவசாயம்
அவசரம் அவசியம் ஆனசாமி.
காடு வெட்டி கழனி பார்த்து,
மேடு பள்ளம் சமம் பார்த்து,
நீரு பாய்ச்சி நிலம் நனைச்சி,
ஊரு நலம் காக்கும் சாமி.
பச்சை நிறத் துண்டு போட்டு
பசுமையைத் தோளில் காட்டி
வேளாண்மை வம்சம் வீட்டு
தாளாண்மை ஆளும் சாமி.
எடப்பாடி ஊராளர்
எலுமிச்சை நிறமாளர்
கடப்பாடு கொள்கையாளர்
எம்ஜிஆர் அம்மா பற்றாளர்
சிரித்த முகம் சீராளர்
சிறுத்த மீசை நேராளர்
சிங்கம் நடை வீராளர்
தங்க மகன் பழனி சாமி
கவிஞர். கொ. பெ. பிச்சையா.
No comments:
Post a Comment