நாடாளப் பிறந்தவர்.
விவசாயக் குடும்பத்தில்,
வேளாளர் வம்சத்தில்,
நாடாளப் பிறந்தவர்,
பாட்டாளி எடப்பாடியார்.
தவசியம்மாள் கருப்பக்கவுண்டர்,
தவப்பிள்ளை பழனிச்சாமி,
ஐம்பத்து நான்கில் பிறந்தவர்
எழுபத்து நான்கில் இயக்கம் வந்தார்.
அம்மாவின் ஆட்சியில்,
அமைச்சரவைப் பொறுப்புகளில்,
சிம்மாசனம் அலங்கரித்து,
சீராக ஆட்சி செய்தார்.
குடும்பத்தை நுழைக்காமல்,
கொள்கையின் உழைப்பில்,
தடம்பிறழா நம்பிக்கையில்,--ஆண்டார்
தனிச்சிறப்பு அரசாட்சி.
அம்மாவின் அன்புக்கு
அடிபணிந்த எழுச்சியார்
வெற்றியே தொடர்ந்தவர்,
வென்றவர் தமிழ் நெஞ்சர்.
அம்மாவின் அருளாசி
அவர்பின்னே முதல்வராகி
பொதுச் செயலர் பொருப்பாகி--இயக்கம்
செதுக்கினார் சிறப்பாக்கி.
கழனியைப் பண்படுத்தும்
களையெடுக்கும் அவசியம்,
உழவர் மகன் பழனிசாசாமி
கழகம் உழுதார் சீர்செய்தார்.
அண்ணலவர் எம்ஜியார்
அம்மா புரட்சித் தலைவியார்,
ஆக்கிநடத்திய இயக்கத்தின்,
ஆலமரக் காவல் ஆனார்.
எழுச்சிப் பயணம் மேற்கொண்டார்.
எழச்செய்து சீர் வென்றார்.
அலைகடல் ஆர்ப்பரிக்கும்
கழகத்தொண்டர் களம் கண்டார்.
தமிழகம் தலை நமிர
தமிழாள அரசமர
அமிழ்தமெனப் பரப்புரைகள்
அவரூட்டி வலம் வந்தார்.
நாளையது நமதென்போம்.
வேளையிது உழைப் பென்போம்.
ஏழைபாழை இயக்கமிது.
எம்ஜிஆர் ஆக்கி யது.
ஊளையிடும் நரிக்கூட்டம்
ஊழல்செய் பேயாட்டம்
ஒழிப்பதே நமதாட்டம்
ஓயாது நம்சீற்றம்.
வெற்றிவழி வீரர் நாம்.
வீறுகொண்ட சூரர் நாம்.
ஆற்றுப்படைத் தலைமைகள்,
ஆற்றித் தடை வென்றவர்கள்,
ஏற்று வழி ஏகுவோம்
மாற்றம் அதை ஆக்குவோம்.
நேற்று இன்று நாளையவர்
ஏற்ற முதல்வர் எடப்பாடியார்.
ஏற்றுவோம் சிம்மாசனம்.
போற்றுவோம் அம்மா தினம்.
கவிஞர். கொ. பெ. பி அய்யா.
No comments:
Post a Comment