எம்மதமும் சம்மதம்.
எம்மதமும் சம்மதம் ஏற்போமே
அம்மதமும் நம்மதம் தீர்ப்போமே
மனம் கோணாமல் மதம் பேணுவோம்
இனம் பாராமல் இணைந்து வாழுவோம்.
ஆன்மாக்கள் போலவே ஆறுகள்
அதனதன் வழியே தீர்வுகள்.
சேரும் இடங்கள் சங்கமம்.
நேரும் விதமோ சம்மதம்.
கடல்களில் வேற்றுமை காட்டுமோ!
கண்டங்கள் தோற்றமும் மாற்றமோ
பெயர்கள் தானே பலப்பல
பிரிவினை ஏது உலகிலே.
ஆறுகள் என்னும் வழிகளை
பேருகள் சொல்லி அழைக்கிறோம்.
சேரும் ஓரிடம் கடலது போல்
மார்க்கங்கள் சங்கமம் இறையொருவன்.
அதனதன் வழியில் ஆறுகளே
மதங்கள் நம்பிக்கை இருக்கையிலே
மோதல் ஆகுமோ உலகினிலே
யாதும் நம்மதம் சம்மதமே
கவிஞர். கொ. பெ. பிச்சையா.
No comments:
Post a Comment