அம்மாவுக்குப் பிறந்த நாள்--எங்கள்
ஆன்மாவுக்கு விடிந்த நாள்.
தமிழத்தாய் அடையாளம்
தமிழகத்தின் விடிகாலம்.
எழுபத்து ஏழாவதாய்--மானுடம்
விழுமியத்தின் விளக்க நாள்.
புரட்சியின் திருக்காட்சி
பூமியில் தோன்றலாட்சி.
ஆயிரத்துத் தொள்ளாயிரம்
ஆண்டது நாற்பத் தெட்டில்
பெப்ரவரி இருபத்து நான்கில்
பெண்ணுரிமை உதயமாட்சி.
வீரமங்கை வீரனாச்சியாள்
மாறி மண்ணில் அவதரித்தாள்.
ஸ்ரீ ரங்க நாயகியாம் தமிழரின் தேவகியாம் ,
எம்ஜிஆர் கண்டறிந்த எங்கள் குலத் தேவியாம்.
ஏழைகளின் விடிவெள்ளி எதிரிகளின் காளியாம்.
எதிர்காலம் எங்களின் வெளிச்சமே அம்மாவாம்.
இதுதான் அம்மா அவதாரப் பொன்னாள்.
இதுதான் அன்னாள் எழுச்சியின் நந்நாள்.
எதிரிகள் எதுவரையும்
எமக்கிங்கு தோன்றவில்லை.
புதிதாகித் தோன்றினோம்
புத்தாட்சி ஊன்றினோம்
அம்மா தோன்றியத் திருநாள்
அறம் ஊன்றியச் சுபநாள்.
சும்மா இல்லைப் பிறந்தநாள்
சோதனைகள் மறந்த நாள்.
அம்மா நமக்குள் வாழ்கிறார்.
அவராம் பழனிச்சாமி ஆள்கிறார்.
அம்மா அமரர் ஆண்டவர் நிழலில்,
அமைதி ஓய்விலும் நமக்காகப் பிரார்த்திப்பார்.
அணைந் தொன்றாய் வாழ்கிறோம்.
இணைந்தொன்றாய் ஆள்கிறோம்.
அம்மா மேல் சத்தியம்
அம்மா ஆட்சி நிச்சயம்.
அம்மா மாடல் ஆட்சியாம்.
எடப்பாடியார் சாட்சியாம்.
கொ. பெ. பி. அய்யா.
No comments:
Post a Comment