Monday, 17 February 2025

தாலாட்டு

தாலாட்டு

ஆராரோ ஆரிரரோ
அன்னக்கிளி கண்ணுறங்கு
ஊராரும் தூங்கிடுச்சி
ஒருச்சாமம் ஆயிடுச்சு
உன்விழிகள் துஞ்சலியோ
உற்றதென்ன கண்மணியே.

கள்ளிப்பால் ஊட்டுவேனோ
கட்டித்தங்கம் ராசாத்தி!.
அள்ளிவீசிப் போடுவேனோ
அரசாள பிறந்தவளே!
காலம் கூடிக் கனியுதடி
கண்ணுறங்கு பொன் மகளே!.

பெண்ணாகப் பிறந்தோமென,
பிஞ்சுக்கொடி கலங்காதே!
கல்யாணச் சந்தையெண்ணி
கவலைப்பட்டும் வாடாதே!
கல்விக் கற்றும் உயர்ந்து
விட்டால்
செல்வி உனையே சீரீவரிசை எனக் கொள்வார்!

பெண்ணான யோகம் உனது
கண்ணாலக் கணக்காக 
வங்கியில் உன்பேரில்
வளரும் சேமத் தொகை
அம்மாவின் கருணையாம்
ஆட்சியின் மகிமை அதுவாம்
சும்மா நீ சுபமாக

வீரம்பெற்று பெண்களின்று
வித்தைகளும் கற்றுவிட்டார்
தீரமுற்றுப் பெண்களின்று
திசையெங்கும் வென்று
விட்டார்..
பெண்ணடிமை  ஒழியுதம்மா
பெண்ணரசி கண்ணுறங்கு.

ஈழங்கூடி மலருதம்மா
இளந்தளிரே கண்ணுறங்கு!
நாளுங்கொடி உயருதம்மா
நன்மணியே கண்ணுறங்கு!
வேளையதும் வளருதம்மா
விடிகிறது கண்ணுறங்கு!

அம்மாவின் மாடல் இது.
எம்ஜியாரின் ஆட்சியிது.
உன்போலேபா பெண்ணாளும்
உண்மைப் பொற்காலமிது.
மண்ணாளப் பிறந்தவளே 
மாதரசி கண்ணுறங்கு.

பெண்ணாகப் பிறந்த உன்னை 
தானாக எண்ணிப் பெண்ணே!
என்ன நீ ஆக வேண்டும் 
உன்னையவள் ஆக்கிடுவாள்
எந்நாளும் இரட்டை இலை 
கண்ணே உன் காவலம்மா.

கொ.பெ.பி.அய்யா. 



No comments:

Post a Comment