கந்த சஷ்டிக் கடவுளே காக்கக்
காக்க!
புரட்சித் தமிழருக்கு நன்றி!
தீயசூர பத்மனை வென்று கொன்ற,
தைப்பூச நினைவு நாள் இதனை,
தமிழர் வெற்றி வீர நாளாகக் கொண்டாட,
விடுமுறை நாளாகப் புரட்சித் தமிழர்,
ஆணையிட்ட அருமைக்கு நன்றி!நன்றி!
தமிழன் ஆண்டால்தான் தமிழுக்குப் பெருமை.
தமிழே ஆளும் தன்னுரிமைக் காலம்,
கமழும் மணந்தான் கமழ்வது நுகர்வீர்!
காலம் நெருங்கும் கோலம் தான் கண்முன்னே!
கந்தனவன் வெற்றி வேலன்
வென்ற வடிவின்,,
மாட்சி இன்று பழனிச்சாமி காட்சி அதே!
காணக் கண்ணாயிரம் வேண்டும்!வேண்டும்!
காணக் கூடாதார் கண்ணும்
படக் கூடாது.
கந்த சஷ்டிக் கடவுளே நீதான்
காத்தருள வேண்டுமே.
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment