நல்ல வேளை.
நல்ல வேளை நாம் கண்டு கொண்டோம்
நல்லவர் எம்ஜியாரைக்
கொண்டு விட்டோம்
அவரில்லை யென்றால் நாடென்ன கதியோ!
நெஞ்சம் அஞ்சுதே ஐயகோ!ஐயகோ!
விவசாய பூமி வில்லாக்கள் ஆச்சு.
பசுமைகள் மறைஞ்சி பாடழிஞ்சி போச்சு.
விடியாத இருளில் விளங்காத தூரம்,
அடையாத ஊருக்கு முடியாத பயணம்.
சரியான நேரம் சரியாக வந்தார்.
இருளை விரட்டி விடியலைத் தந்தார்.
வரைபடம் எழுதித் தமிழகம் கண்டார்.
வறுமை ஒழித்து வளநாடு வென்றார்.
விடிஞ்சதும் அடைஞ்சதும் விதியோ சதியோ!
ஒளிவிளக்கு அணைஞ்சதும் வழிமுடிஞ்சக் கதையோ!
கலங்கிய பொழுதில் கலங்கரை விளக்கம்,
நிலவின் ஒளிமுகம் அம்மாவின் உதயம்.
அம்மாவின் ஆட்சி அன்பின் சாட்சி.
பசிப்பிணி நீங்கிய பாமரன் மீட்சி.
அம்மா எம்ஜியார் அமரர்கள்,
அவர் வாழுந் தெய்வங்கள்.
சுபராசி எடப்பாடித் தவவாசியார்
அவர்வழித் தமிழாட்சி சமர்ப்பணம்.
கொ.பெ.பி.அய்யா.

No comments:
Post a Comment