Monday 30 November 2015

இமயம்கூட அம்மா முன் பணியும்.

அம்மா என்றால்...............

இமயம் கூட எம்முன் பணியும்
எழுந்து நிமிர்ந்தால் எதுதான் துணியும்.
சமயம் தேடும் சாத்திரம் கூடும்.
அமையும் அதுவாய் அம்மா நாடும்.

புரட்சித் தலைவன் பேரணித் தினவும்
புரட்சித் தலைவி போர்ப்படை முனைவும்
மிரட்சி மயக்கும் மேனி சிலிர்க்கும்
திரட்சி வியக்கும் தேர்வது முடிக்கும்.

அம்மா என்றதும் ஆவெனப் பிளக்கும்.
சும்மா நின்றாலும் சோவெனப் பறக்கும்.
சிம்மா சனத்தில் சிங்கமாய் அம்மா
இம்மா நிலத்தில் என்றுமே அம்மா.

எத்தனை அணிகள் எமக்கது கனிகள்.
அத்தனை இனிமை அனைத்தும் பறிகள்.
ஒத்தை ஒருமை உத்தமத் திருமை
சத்தியப் பெருமை சாதிக்கும் திறமை.

அமைதி அதுதான் அம்மாவின் இரகசியம்.
அமைந்தது அவர்தான் அஞ்சா அதிசயம்.
அன்னையின் அம்சம் ஆதியின் சக்தி.
என்றைக்கும் சொந்தம் எம்தாய் வெற்றி.

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment