Tuesday 23 March 2021

வள்ளல் எடப்பாடியார்.

அள்ளிக் கொடுக்கும் வள்ளலார்
உள்ளம் தங்கம் எம்ஜியார்.
உள்ளபடி விவசாயிதான்
சொல்லும் புகழ் எடப்பாடியார்

ஏழைகளின் சுமைதாங்கி
வாழவைத்தார் கடன்நீங்கி.
தோழராய் குசேலர்
சோழராய் எடப்பாடியார்.

மகளிற்கு சோதரராய்
உகந்தசீர் ஆதரராய்
தேவையென்ன கேட்டறிவார்
சேவகராய் எடப்பாடியார்.

மழைக்கவர் சொந்தக்காரர்
செழிக்கும் வளம் சிந்தைக்காரர்.
வற்றாத நீர் நிலைகள்
சுற்றம் கொண்ட எடப்பாடியார்.

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment